search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special shield"

    • துறவி வீரமாமுனிவர் போட்டி தென்காசி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து சுமார் 52 மாணவ- மாணவிகள் 15 போட்டிகளில் பங்கேற்றனர்

    சுரண்டை:

    துறவி வீரமாமுனிவர் போட்டி தென்காசி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் இருந்து சுமார் 52 மாணவ- மாணவிகள் 15 போட்டிகளில் பங்கேற்றனர். இதில் பேச்சுப் போட்டியில் அக்சயா,அக்ஷரா செண்பா,நிரஞ்சனா, தனிப்பாடல் ஆதர்ஷனா, வரைதல் போட்டியில் நிபாஷினி, கவியரசி ஆகியோரும் குழு நடனத்தில் அக்ஷய்யா ரேணுகா, ஸ்டெனா, ஹரிணி, ராஜலட்சுமி, ருக்ஷானா பவானி, புகழ் பாரதி, தேவி பார்கவி, நித்ய ஸ்ரீ ஆகியோரும் பரிசுகளை வென்றனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறந்த பள்ளிக்கான சிறப்பு கேடயத்தையும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவபபிஸ்ராம், பள்ளியின் செயலா் சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா் பொன் மனோன்யா, தலைமை ஆசிாியா் மாாிக்கனி மற்றும் பள்ளி ஆசிாியா்கள் பாராட்டினா்.

    ×