search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முகமது சதக் கல்லூரி மாணவரை இயக்குநர்-ஆசிரியர்கள் பாராட்டினர்.
    • தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

    கீழக்கரை

    அண்ணா பல்கலைக்கழக அளவில் கடல் சார் பொறியி யல் கல்லூரி மாணவர்க ளுக்கு இடையே நடைபெற்ற தேர்வில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சோன்ரபிரபு முதலாவதாக தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

    அண்ணா பல்கலை கழகம் அளவில் முதல் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் சோன்ர பிரபுவுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமிது இப்ராஹிம் மாணவரை பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

    மேலும் அவர் கூறுகை யில், அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் கல்லூரியில் கடல்சார் பொறியியல் துறையில் பயின்று சாதனை புரிந்து தற்போது பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு உதார ணமாக திகழ்கிறார். அவரை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    மாணவரின் தாயார் மாரியம்மாள், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி சி.இ.ஒ. விஜயகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், கல்லூரி கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சாதனை மாணவர் சோன்ரபிரபு கூறும்போது, நான் அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு உறு துணையாக இருந்த முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ.., கல்லூரி முதல்வர், துறை தலைவர், பேராசிரி யர்கள், என் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் மாநில என்.எஸ்.எஸ். திட்ட இயக் குநர் செந்தில்குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்க–லைக்கழக என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி வழிகாட்டுதலோடு மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகமும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி–யும் இணைந்து நடத்திய கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி கல்லூஞ நடைபெற் றது.

    அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் தலைவர் எம்.எஸ். ஷா,பொருளாளர் சகிலா ஷா ஆகியார் வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முனியாண்டி வரவேற்றார் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கி பேசுகை–யில் பயணங்கள் மூலமாக கலாச்சாரங்கள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு பரவி உள்ளது. கலாச்சாரம் மட்டுமின்றி வேளாண்மை தொழிலிலும் பரவலாக்கப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணத்தை அடிப்ப–டையாக கொண்டு கலாச் சார நூல்கள் பல எழுதி–யுள்ளார் என்று கூறினார்.

    மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்க–ழக பேராசிரியர் மனோன் மணி தேவி பேசுகையில், கல்லூரி மாணவர்கள் பய–ணங்கள் மூலமாக வாழ்வி–யலை கற்றுக் கொள்வதோடு எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழக மாணவர் தலைவர் வெண்ணிலவன் பரந்தாமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி மாணவ, மாணவி–கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை உணவு மேலாண்மை துறை பேராசிரியர் விக் னேஸ்வர சீமாட்டி செய்தி–ருந்தார். மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்க–லைக்க–ழக மாணவர்களும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி–னர். முடிவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ராமுத் தாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை கல் லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முனியாண்டி மற்றும் தமிழ் துறை பேராசி–ரியர்கள் செய்திருந்த–னர்.

    • 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.
    • இந்த பொருட்காட்சியானது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படு த்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டது.

    இந்த பொருட்காட்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் 40க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2-வது ஆண்டுகளாக இந்த பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த பொருட்காட்சி ஆனது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த வருடம் ரூ. 2.5 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அதனை தாண்டி விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி மாவட்ட வளங்கள் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், நிதியாளர் ராஜாராமன், தாசில்தார் சக்திவேல், கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

    கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முத்தமிழ் திருமகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
    • சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்து கொண்டார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை தலைவர் ஜான்சிராணி வரவேற்றார்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசினார். பெரியத் தாய், கல்லூரி முதல்வர் சுதா, டாக்டர்கள் யசோதா மணி, முருகேசலட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பத்மாவதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தாய்ப்பால் ஊட்டு தல் விழிப்புணர்வு தொடர் பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை உதவி பேரா சிரியர்கள் மகா லட்சுமி மற்றும் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் தெலுங்கர் மன்றம் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. தெலுங்கர் மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வெலம நாயுடு சங்க தலைவர் ஜெயராமன், மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தெலுங்கர் மன்ற பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் முன்னாள் சேர்மன் சுப்புராஜ் மற்றும் கிளானிஸ் மருத்துவமனை இயக்குநர் மது புருஷோத்தமன் கலந்து கொண்டு பேசினார்.

    டி.கல்லுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மகுடாபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் ராணி மங்கம்மாள் பெயரில் கல்லுப்பட்டியில் பெண்கள் கலைக் கல்லூரி நிறுவ வேண்டும். கோடைகால அரண்மனையில் ராணி மங்கம்மாள் சிலை வைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
    • இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் இளங்கலை வணிகவியல் துறை சார்பில் இலக்கு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் குருசாமி வாழ்த்தி பேசினார்.

    கல்லூரி முன்னாள் மாணவரும், சிவகாசி தனியார் நிறுவன மனித வள அதிகாரியான தீன தயாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். இலக்குகளை நிர்ணயம் செய்வதன் நோக்கம், குறிக்கோள்கள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2-ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி வரவேற்றார். 3-ம் ஆண்டு மாணவி ஸ்ரீமலர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். 2-ம் ஆண்டு மாணவி ஜெய ராசாத்தி நன்றி கூறினார். இளங்கலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் நிகழ்ச்சிக்கான 

    • கல்லூரியில் வணிகவியல் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயராகவன் வாழ்த்திப் பேசினார்.

    மாணவர் லோகேஷ் வரவேற்றார். விவேகானந்தர் கல்லூரி துணை முதல்வர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்திருந்து வேலை வாய்ப்பு அல்லது தொழில் முனைவோராக முன்னேறுவது குறித்து விளக்கிப் பேசினார். முடிவில் மாணவி ஜெய்தூண் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரங்கராஜ், பியூலா செய்திருந்தனர்.

    • அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாகப் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைவர் வகித்து பேசினார்.

    வரலாற்றுத் துறைத் தலைவர் கார்குழலி வரவேற்றார்.

    அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள கிளாபின் பல்கலைக் கழகச் சமூகவியல் பேராசிரியர் முனைவர் சாலமன் செல்வம் கலந்து கொண்டு பாலினச் சமத்து வமின்மையின் தொடக்கமும் அதன் சமூகத்தாக்கமும் ஒரு வரலாற்று அணுகுமுறை என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார்.

    பூண்டி புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், மன்னர் சரபோஜி கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் கோவிந்தராஜ், திருச்சி தந்தைப் பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் சீதாலெட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    கல்லூரியின் தேர்வு நெறியாளர் மலர்விழி, உள்தர உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் பானுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முன்னதாக முனைவர் பூங்கொடி கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். முனைவர் மீனாட்சி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

    புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தன்னாட்சி, தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகியவற்றிலிருந்து பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முடிவில் முனைவர் சாந்தி நன்றி கூறினார்.

    • முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிமுகப் பயிற்சி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவி களுக்கான அறிமுகப் பயிற்சி மற்றும் ஈடுபாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலை மையில் நடந்தது.

    சிறப்பு விருந்தினராக இளையான் குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் அப்துல் ரஹீம் கலந்து கொண்டு சிறப்பித் தார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தன்னுள் இருக்கின்ற தனித் தன்மையை வெளிக் கொணர்ந்தால் சிகரத்தைத் தொட்டு விட முடியும்.

    நீயா நானா என்று போட் டியிடு வதை விட நீயும் நானும் என வாழ்க்கையில் வெல்வதற்கு முதலில் ஒழுக்கம் மிக முக்கியம்.நல்ல ஒழுக்கம் இருக்கும்போது இன்பமான வாழ்க்கை அமையும். தீய ஒழுக்கம் எப் பொழுதும் துன்பத்தையே தரும்.

    ஒற்றுமையையும் ஒழுக் கத்தையும் வள்ளுவம் நமக்கு கற்றுத் தருகிறது. இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு அதன்படி நடந் தால் உங்களது கனவு நன வாகும் என்றார்.

    கல்லூரியின் முன்னாள் மாணவியும், ராமநாதபுரம் தடவியல் துறையின் சார்பு ஆய்வாளருமான வினோதா கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே தன்னம்பிக்கை விடா முயற்சி புகையிலை மற்றும் போதைப் பொருளின் தீமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் பொறுப்பு செந்தில் குமார், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை முதன்மை யர் செல்வ பெருமாள், முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக் தாவூத் உள்பட பலர் கலந்து மாணவ, மாணவியருக்கு புத்தாக்க பயிற்சி அளித்த னர்.

    இந்நிகழ்ச்சி முடிவில் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் செல்வ கணேசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர் களும் பெற்றோர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடு களையும் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர் கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மாணவர்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
    • மாணவர்கள் உரிய நேரத்திற்கு கல்லூரி வரவேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் இந்த கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு இளங்கலை, இளமறிவியல், இளவணிகவியல்.

    இளவணிக நிர்வாகவியல் மாணவர்களுக்குப் புத்தொளிப் பயிற்சியில்மா ணவர்களுக்கு கல்லூரியில் எவ்வாறு ஒழுக்கமாக இருக்க வேண்டும் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்மாதவி தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் வேதியியல் துறைத் தலைவர் முனைவர்மீனாட்சிசுந்தரம், கணிதவியல் துறைத் தலைவர் முனைவர்குணசேகரன், தேர்வு நெறியாளர்சு ந்தரராசன், இந்தியப் பண்பாடு சுற்றுலாவியல் துறைத் தலைவர்தங்கராசு ஆகியோர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று எடுத்துரைத்தனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் தனது தலைமை யுரையில் "மாணவர்கள் கல்லூரி நாட்களில் சுதந்திரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கல்வியில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், கல்வியால் மட்டுமே தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும்,

    கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களின் கண்ணியமான ஆடைகளை அணிவதோடு உரிய நேரத்திற்கு வரவேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்."

    இந்நிகழ்வில் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ×