search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chhattisgarh"

    சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். #Chhattisgarhcaraccident
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதிக்குட்பட்ட அட்டல் நகரில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

    ஓட்டுனர் மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம்  என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chhattisgarhcaraccident
    சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். #Chhattisgarh #ChhattisgarhCabinet
    ராய்ப்பூர்:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பூபேஷ் பாகல் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

    சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet

    சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். #ChhattisgarhCM

    ராய்ப்பூர்:

    பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

    ராஜஸ்தான் முதல்- மந்திரியாக அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் ஆகியோர் நேற்று அந்தந்த மாநில தலைநகர்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் மந்திரிகள் பதவி ஏற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி மத்திய பிரதேசத்தில் நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலில் விவசாய கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல்லும் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    மேலும் நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1700-ல் இருந்து ரூ.2500ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

    “சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணி தலைவரான நந்தகுமார் படேல் உள்பட 29 காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் வரலாற்றில் நடந்தது இல்லை. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் உறுதி அளித்தார். #ChhattisgarhCM

    சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மாநில கவர்னர் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Chhattisgarh #bhupeshbaghel
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.

    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் நடந்தது. டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டார்.



    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் உள்ள புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பூபேஷ் பாகெல் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் (பொறுப்பு) ஆனந்திபென் படேல் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Chhattisgarh #bhupeshbaghel
    சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது. #Chhattisgarh #BhupeshBaghel
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.

    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் நடந்தது. டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டார்.

    இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் பதவியேற்க உள்ளார்.



    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது.

    முதல்மந்திரி பதவியேற்பு விழா அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பெய்ட்டி புயல் காரணமாக பெய்து வரும் மழையால் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள் விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #BhupeshBaghel #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ChhattisgarhCM
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. கடுமையான தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.



    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ராய்ப்பூர் நகரில் நடந்தது. 

    டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் நாளை மாலை 5 மணியளவில் பதவி ஏற்கிறார். #bhupeshbaghel #Chattisgarh
    5 மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. #AssemblyElectionResults2018 #MadhyaPradesh #Chhattisgarh
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    சத்தீஷ்கார் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டசபைகளுக்கு நவம்பர் 28-ந்தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைகளுக்கு கடந்த 7-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.



    இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவ், தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

    5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த 5 மாநில தேர்தல் ஒரு ‘மினி பொதுத்தேர்தலாகவே’ கருதப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ், தெலுங்குதேசம், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரண்டு வரும் நிலையில், இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி-காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இந்த தேர்தல் அக்னி பரீட்சையாகவும் அமைந்தது.

    ஏற்கனவே வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகளின் மூலம் ராஜஸ்தானில் காங்கிரசும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் ஆட்சியை பிடிக்கும் என்றும், மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் இழுபறி நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்தது. 2 மாநிலங்களில் காங். ஆட்சியை பிடித்தது

    இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ் சகாப்தம் முடிவுக்கு வந்து உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

    இந்த 5 மாநில தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரசுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாகவும், பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 எம்.பி. தொகுதிகளில் 63 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. ஆனால் இப்போது அந்த மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதீய ஜனதா பெரும் இழப்பை சந்தித்து இருப்பது, அக்கட்சி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

    இறுதியில் 199 தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களில் சிலர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் என்பதால், அவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

    ஜல்ராபட்டன் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    ஜெய்ப்பூர் நகரில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு அக்கட்சி தொண்டர்கள் வெற்றியை மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள்.

    230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 116 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

    எதிர்க்கட்சியான காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    இதனால் யார் ஆட்சி அமைப்பது? என்பதில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

    சத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைத்தன. முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் கட்சி காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை.

    சத்தீஷ்கார் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருக்கிறது.



    ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. இப்போது அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

    இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

    காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இதன்மூலம் இங்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து உள்ளது.

    இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு 5 இடங்களே கிடைத்தன. ஒரு தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மிசோ மக்கள் இயக்கம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் தோல்வி அடைந்தார்.

    இந்த மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஏற்கனவே 1998-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆட்சி நடத்தி உள்ளது.
    15 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஷ்காரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. #Chhattisgarh #Congress #BJP
    ராய்ப்பூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஷ்கர் மாநிலம், 2000-ம் ஆண்டில் பிரித்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது. அதன் முதலாவது முதல்-மந்திரியாக அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் ஜோகி பதவி வகித்தார்.

    2003-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தபோது, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ராமன்சிங் முதல்-மந்திரி ஆனார்.

    அடுத்து 2008, 2013 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சியே வெற்றி பெற்றது. ராமன்சிங் தொடர்ந்து 3 முறை முதல்-மந்திரி பதவி வகித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    ஆனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கடந்த மாதம் 12 மற்றும் 20 தேதிகளில் 2 கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டது.

    ஆனால் காங்கிரஸ் கட்சியோ, ஆட்சியை இந்த முறை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியது.

    இந்த ‘நீயா, நானா?’ மோதல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. பாரதீய ஜனதா தோல்வியை தழுவியது.

    அங்குள்ள 90 இடங்களில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வென்று, மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

    ஆளுங்கட்சியாக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு 17 இடங்களே கிடைத்துள்ளன. மற்ற கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.

    முதல்-மந்திரி ராமன்சிங் ராஜ்நந்த்கான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சத்தீஷ்கர் பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  மேலும் ராமன் சிங் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜனதா தோல்விக்கு முழுபொறுப்பேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன். வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்றார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து அஜித் ஜோகி தொடங்கிய ஜனதா காங்கிரஸ், இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

    சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி வேட்பாளர் யாரையும் அறிவிக்காமல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. #AssemblyElections #ElectionResults2018
    தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    5 மாநிலங்களில் சேர்த்து மொத்தமாக 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.



    மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #AssemblyElections #ElectionResults2018

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #AssemblyElections
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

    90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.



    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #AssemblyElections
    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு கருதி, வாசலில் சுவர் எழுப்பி சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ChhattisgarhElections #EVMProtection
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு 20-ந்தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் வாக்கு எந்திரங்களை பாதுகாப்பது சவாலானதாக இருக்கும். எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைநகர்  ராய்ப்பூரில் மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பாக ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.



    இந்நிலையில், பீமதாரா மாவட்ட தலைமையகத்தில் 3 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளள. வாக்கு எந்திரங்கள் உள்ள அறையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதிலும் திருப்தி ஏற்படாததால், அந்த அறையின் வாசலில் செங்கற்களால் சுவர் எழுப்பி முற்றிலும் அடைத்துவிட்டனர். வன்முறைக் கும்பல்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை சூறையாடிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. #ChhattisgarhElections #EVMProtection

    சத்தீஸ்கரில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் இன்று தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். #Chhattisgarh
    ராய்ப்பூர், நவ. 11-

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு நாளையும், 2-வது கட்டமாக 72 தொகுதிக்கு 20-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது.

    நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கரில் இன்று மாவோயிஸ்டுகள் 7 இடங்களில் வெடிகுண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    கான்கர் மாவட்டத்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரசிங் காயம் அடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்கல்- கோம் கிராமத்துக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் மாவோயிடுஸ்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கினர்.



    பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டன.

    இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தனர். கடந்த 15 தினங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 4-வது வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும். இதில் 13 பேரும் பலியாகி இருந்தனர்.
    ×