search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bribery"

    • கள்ளக்குறிச்சி பகுதியில் நிலம் அளவீடு செய்ய லஞ்சம் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்சில் புகார் அளிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேற்று கள்ளக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதில் சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வராதவர்கள்மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும்என அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்ட அவர், அறையில் உள்ள பழைய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட கலெக்டர் அங்கிருந்த தாசில்தார் விஜய் பிரபாகரன், தலைமை யிடத்து துணை வட்டா ட்சியர் பானுப்பிரியா ஆகியோரிடம் பட்டா மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய் ஆய்வாளர்களிடம் எவ்வளவு மனுக்கள் நிலுவையில் உள்ளன.

    ஏன் நிலுவையில் உள்ளது? என்பது குறித்து விபரங்களைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வை முடித்துவிட்டு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட கலெக்டர் அங்கு காத்திருந்த பொது மக்களிடம் எதற்காக வந்து காத்துள்ளீர்கள் என கேட்டறிந்தார்? அப்பொழுது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவி த்தொகை பெறு வதற்காக வந்ததாக கூறினார்.

    உடனடியாக அங்கிருந்த சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் தாசில்தார் மணிகண்டனிடம் மூதாட்டியின் மனுவிற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறு த்தினார். மேலும் ஒரே வேலைக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் நில அளவைப் பிரிவில் 2 மாதமாக நிலம் அளவை செய்ய இழுத்தடிப்பதாகவும், மேலும் நிலம் அளவை செய்ய லஞ்சம் கேட்பதாகவும் கூறினார். அதற்கு மாவட்ட கலெக்டர் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் விஜிலென்ஸ்க்கு தகவல் தெரிவியுங்கள் என கூறினார். தொடர்ந்து பொது மக்களை அலைக்கழிப்பு செய்யாமல் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    • சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • குவாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பள்ளம் அருகே சித்தம்பாடி கிராமத்தில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மணல் கொள்ளையடிக்கும் மணல்குவாரியை விவசா யிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர்.

    செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பளம் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளின் நடவடி க்கைகளை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளோ லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.இதனிடையே மருதம்பள்ளம் சித்தம்பாடி கிராமத்தில் சாரங்கம் ஆசாரி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது.இதுவரை 20 அடி ஆழத்தையும் தாண்டி மண் எடுத்ததால் நீர் சுரந்து ஏரிப்போன்று அப்பகுதி காணப்படுகிறது. அந்த குவாரியை மூடக்கோரி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம், தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீர்செ ல்வம், சிபிஎம் ஓன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். சித்தம்பாடி குவாரியால் சுற்றியுள்ள விளைநிலங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், குவாரியை யொட்டியுள்ள பயிரி டப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் முறையாக வளராமல் உள்ளதாகவும்.

    தொடர்ந்து இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்ப ட்டால் வழக்கமாக பயிரிட ப்பட்டு வந்த நிலக்கடலை, பருத்தி, நெல் ஆகியவற்றை கைவிட்டு விவசாயிகள் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம் கூறியதோடு பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவித்து விட்டு திரும்பும் திசையெ ல்லாம் குவாரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. நான்கு வழிச்சாலை பணிக்காக இப்பகுதியில் ஏராளமான குவாரிகள் செயல்பட அனுமதியளித்துள்ள கணிம வளத்துறை இதைப்ப யன்படுத்தி சட்டவி ரோதமாக செயல்படும் குவாரிகளுக்கும் அனுமதிய ளித்திருக்கிறது.

    இப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலை விலேயே கடற்கரை உள்ளதால் மணல் குவாரிகள் அதிகளவு ஆழத்தை தோண்டுவதால் விவசாய பகுதிகளில் உப்புநீர் புகுந்து வருவதால் சுமார் ஆயிரம் ஏக்கம் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாயம் கடுமையாக பாதிக்கிறது. என்றார். உடனடியாக சித்தம்பாடி குவாரியை மூடவில்லையெனில் போரா ட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

    • திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது அங்கு இருந்த பதிவறை எழுத்தர் சிவஞான வேலு என்பவரிடம் தனது தாயார் கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாவில் தன் தாயின் பெயர் கிராம, வட்ட கணக்கில் திருத்தம் செய்வதற்காக 2007 பதிவேடுகளை எடுத்து தர கூறினார்.இதற்கு பதிவறை எழுத்தர் சிவஞானவேலு ரூ. 5 ஆயிரம் யுவராஜிடம் கேட்டார்.

    அதிர்ச்சி அடைந்த யுவராஜ்இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து இன்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை யுவராஜிடம் கொடுத்தனர்.இந்த ரூபாய் நோட்டுகளை அவர் பதிவறை எழுத்தர் ஞானவேலுவிடம் கொடுத்தார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர் லஞ்சமாக கேட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து அவர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.



    • ஈரோடைச் சேர்ந்த சிவகாம சுந்தரி என்பவரிடம், கட்டட உரிமம் மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
    • ஈரோடு மாவட்ட நீதிமன்றம் லஞ்சம் பெற்ற வழக்கில், வெங்கடேஷூக்கு 6ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் கட்டட ஆய்வாளராக பணிபுரிபவர் வெங்கடேஷ் (வயது 48). இவர் கடந்த 2007ம் ஆண்டு ஈரோடு நகராட்சியில் கட்டட ஆய்வாளராக இருந்தபோது, ஈரோடைச் சேர்ந்த சிவகாம சுந்தரி என்பவரிடம், கட்டட உரிமம் மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    லஞ்ச பணத்தை பெற்றபோது ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். நிலுவையில் இருந்த இந்த வழக்கில் வெங்கடேஷ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், ஈரோடு மாவட்ட நீதிமன்றம் லஞ்சம் பெற்ற வழக்கில், வெங்கடேஷூக்கு 6ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்துஅவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளில் இந்தியா 82-வது இடத்தை பிடித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    லஞ்ச-ஊழலுக்கு எதிரான ‘டிரேஸ்’ என்ற அமைப்பு, உலக அளவில் தொழில் செய்வதற்கு லஞ்சம் மலிந்த நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

    அரசுடனான வணிக தொடர்புகள், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அமலாக்கம், அரசு மற்றும் சிவில் சேவையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊடகங்களின் பங்கை உள்ளடக்கிய சிவில் சமூக மேற்பார்வைக்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 194 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் 82-வது இடத்தை பிடித்து உள்ளது.

    வனாட்டு தீவுகள், பெரு, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ போன்ற நாடுகளும் இந்தியாவைப்போலவே 44 புள்ளிகள் பெற்றுள்ளன.

    இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டு 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டியலில் பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகளைவிட இந்தியா சிறப்பான நிலையில் உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

    இந்த ஆண்டுக்கான பட்டியலில் வடகொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசூலா மற்றும் எரித்ரியா போன்ற நாடுகள் அதிக லஞ்ச ஆபத்து நிறைந்த நாடுகளாகவும், டென்மார்க், நார்வே, பின்லாந்து, சுவீடன், நியூசிலாந்து போன்ற நாடுகள் லஞ்ச ஆபத்து குறைந்த நாடுகளாகவும் அறியப்படுகின்றன.

    அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகளாவிய போக்குகளுடன் ஒப்பிடும் போது, அங்கு வணிக லஞ்சம் ஆபத்து சூழல் கணிசமாக மோசமடைந்திருப்பதாக கூறியுள்ள டிரேஸ் அமைப்பு, அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளிலும் வணிகம் செய்வதற்கான லஞ்ச அபாயம் அதிகரித்திருப்பதகவும் குறிப்பிட்டு உள்ளது.

    லஞ்ச புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட காஞ்சீபுரம் மற்றும் கூடலூர் நகராட்சி கமி‌ஷனர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தவர் சர்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி நகராட்சியில் கமி‌ஷனராக வேலை பார்த்த போது, கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

    அப்போது அதே அலுவலகத்தில் மேலாளராக பார்வதி பணியாற்றினார். தற்போது அவர் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியில் கமி‌ஷனராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் சர்தாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    அதேபோல் பார்வதி தங்கி இருந்த நகராட்சி குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

    அதன்படி காஞ்சீபுரம் கமி‌ஷனர் சர்தார், கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காஞ்சீபுரம் நகராட்சி பொறுப்புக்கு செயற் பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கூடலூர் நகராட்சி கமி‌ஷனர் பார்வதியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளதால் விசாரணைக்கு ஏதுவாக அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் தெரிவித்து உள்ளார்.

    எனவே பார்வதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது. இதேபோல் சர்தாரிடமும் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாட்டு போலீஸ் இன்று பரிந்துரைத்துள்ளது. #Israelpolice #BenjaminNetanyahu Netanyahubribery
    ஜெருசலேம்:

    யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். 

    தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என போலீசார் விசாரித்து வந்தனர். தன்மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.

    விசாரணையின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர். 

    ‘வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

    வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த ஊழல் வழக்குகள் தொடர்பாக பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இதுவரை பலமுறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில், சுமார் 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடர்வதற்கு போதிய முகாந்திரங்கள் இருப்பதாக அந்நாடு போலீஸ் தலைமையகம் இன்று பரிந்துரைத்துள்ளது. 

    நேதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் லஞ்சம் வாங்கி பண ஆதாயம் அடைந்ததன் மூலம் நாட்டுக்கு எதிரான மோசடி மற்றும் நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பெஞ்சமின் நேதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான தார்மிக உரிமையை இழந்து விட்டதால் அவர் உடனடியாக இன்றே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். எனினும், தற்போது பெஞ்சமின் நேதன்யாகு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Israelpolice  #BenjaminNetanyahu Netanyahubribery
    பட்டா மாற்றம் செய்ய ரூ.600 லஞ்சம் வாங்கிய ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது மகன் முகமது சலீம். இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலப்பட்டாவை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி கடந்த 2008–ம் ஆண்டு பாடாலூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த மணியை அணுகினார். இதற்காக தனக்கு ரூ.600 லஞ்சம் தருமாறு, முகமது சலீமிடம் மணி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அவர், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 30.4.2008 அன்று கிராம நிர்வாக அதிகாரி மணியிடம், ரசாயன தடவிய ரூ.600–ஐ முகமது சலீம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் மணி மீது பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் மணி பணி ஓய்வு பெற்றார். இதனிடையே இந்த வழக்கை தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி முரளிதரன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மணிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
    லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கியின் 6-வது லாக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் தவுலத் நகர் பகுதியை சேர்ந்த பாபு (வயது 55). விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 11-ந் தேதி சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் செந்தில்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிலையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் ரூ.30 லட்சம், தங்கநகைகள் மற்றும் வெள்ளி நகைகளை கைப்பற்றினர்.

    பாபுவின் வங்கி லாக்கர்களில் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் மறைத்து வைத்திருக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் கருதினர். அதனைத் தொடர்ந்து கடந்த 19-ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பாபுவின் பெயரில் உள்ள 3 வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனையிட்டனர்.

    அதில் 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள்இருந்தன. பின்பு அவற்றை மதிப்பீடு செய்து மீண்டும் லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் விழுப்புரம் லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் போலீசார் 2-வது முறையாக கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றனர். பின்பு அங்கு பாபுவின் பெயரில் இருந்த 2 லாக்கர்களை திறந்து சோதனை செய்தார்கள். அதில் 500 கிராம் தங்க நகைகள் பலகோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் இருந்தன.

    இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து நகைகள் மதிப்பிடப்பட்டன. பின்பு நகைகளும், சொத்து ஆவணங்களும் லாக்கரில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    கடலூர் மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் வங்கியிலும் பாபுவின் பெயரில் லாக்கர் உள்ளது. அந்த லாக்கரிலும் கோடிக்கணக்கான நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    இன்று காலை விழுப்புரம் லஞ்சஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 4 போலீசார் கடலூர் வந்தனர். பின்பு அவர்கள் அந்த வங்கிக்கு சென்று பாபுவின் பெயரில் உள்ள 6-வது லாக்கரை திறந்து சோதனை செய்தனர். அதிலும் தங்க நகைகளும், ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களும் இருந்தன.

    இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் பவுன் தங்க நகைகள், வெள்ளி நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் பாபுவின் பெயரில் கோடிக் கணக்கான சொத்துக்கள் கடலூர், சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடலூரில் 6 இடங்களில் வீடுகள் உள்ளன.

    மேலும் அவர் பினாமி பெயரிலும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. #RTO #DVACRaid

    லஞ்ச வழக்கில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் மேலும் 3 லாக்கர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திறந்து சோதனை செய்தனர். #RTO #DVACRaid

    விழுப்புரம்:

    கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரை சேர்ந்தவர் பாபு (வயது55). இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக் குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு வசித்து வந்த கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது, அவரது வீட்டில் இருந்து ரூ.30 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

    பாபுவின் 21 வங்கி கணக்குகளையும், 6 லாக்கர்களையும் வங்கி அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கினர். இதேபோல் அவரது உதவியாளர் செந்தில் குமாரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

    இந்த நிலையில் வங்கிகளில் பாபு வைத்துள்ள லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதையொட்டி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் மற்றும் போலீசார் கடந்த 19-ந் தேதி திடீரென்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்த லாக்கரை திறந்தனர்.

    அதில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன. அதன் பின்பு அவர்கள் கட லூர் பாரதி சாலையில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அங்கு பாபு பெயரில் இருந்த 2 லாக்கர்களையும் திறந்தனர். அதிலும் தங்க நகைகளும், வெள்ளி நகைகளும் அதிகமாக இருந்தன.

    மொத்தம் 3 லாக்கர்களிலும் 11 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. ஆய்வு செய்த பின்னர் அந்த நகைகளை மீண்டும் அதே லாக்கர்களில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் பாபு பெயரில் கடலூர் செம்மண்டத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேலும் 3 லாக்கர்கள் இருப்பது தெரியவந்தது. அந்த லாக்கர்களிலும் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும் இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்த நிலையில் இன்று காலை செம்மண்டலத்தில் உள்ள அந்த வங்கிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அங்கு பாபு பெயரில் இருந்த 3 லாக்கர்களையும் திறந்தனர். அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்ததாக தெரிகிறது. போலீசார் தொடர்ந்து அந்த லாக்கர்களில் எவ்வளவு நகைகள் உள்ளது என்று மதிப்பீடு செய்து வருகின்றனர். #RTO #DVACRaid

    திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளர் லஞ்சம் வாங்கியது குறித்து அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அலிபிரி பகுதியில் சிம்ஸ் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியின் பொது மேலாளராக மோகன் முரளி என்பவர் இருந்து வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு திருப்பதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் மருந்துகடை வைப்பதற்கு அனுமதி கேட்டு மோகன் முரளியிடம் மனு கொடுத்தார்.

    அப்போது மருந்து கடை வைக்க அனுமதி தரவேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத புருஷோத்தமன் திருப்பதியில் உள்ள லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சங்கர் ரெட்டியிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை புருஷோத்தமனிடம் கொடுத்து அனுப்பினர்.

    அவர் மோகன் முரளியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.

    இந்த வழக்கு நெல்லூர் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    அதில் லஞ்சம் பெற்ற சிம்ஸ் ஆஸ்பத்திரி பொது மேலாளர் மோகன் முரளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். #tamilnews
    வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் நாடுகள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு லஞ்சம் கொடுப்பது உண்டு. ஊழல் எதிர்ப்பு சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இது தொடர்பாக நடத்திய ஆய்வில் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2 சதவீதத்துக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

    ஆனால் கடந்த 1997-ம் ஆண்டு ஐ.நா.சபை நிறை வேற்றிய ஊழல் எதிர்ப்பு தீர்மானத்தில் இந்த நாடுகள் கையெழுத்துப் போடவில்லை.

    இதனால் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட இந்த 4 நாடுகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் இந்த நாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் வரும். சட்ட அமல் நடவடிக்கைகள் பாதிக்கும்.

    இதற்கு உதாரணமாக சில வழக்குகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விமானங்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டும், இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

    எனவே வெளிநாட்டவரால் லஞ்சம் வழங்கப்படுவதை கிரிமினல் குற்றமாக இந்தியா அறிவிக்க வேண்டும்.

    அத்துடன் தனியார் துறையில் இடித்துரைப்பாளர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். #tamilnews
    ×