search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்ச வழக்கில் சிக்கிய பல்லடம் கட்டிட ஆய்வாளர் கைது
    X

    கைது செய்யப்பட்ட பல்லடம் கட்டிட ஆய்வாளர் வெங்கடேஷ்

    லஞ்ச வழக்கில் சிக்கிய பல்லடம் கட்டிட ஆய்வாளர் கைது

    • ஈரோடைச் சேர்ந்த சிவகாம சுந்தரி என்பவரிடம், கட்டட உரிமம் மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
    • ஈரோடு மாவட்ட நீதிமன்றம் லஞ்சம் பெற்ற வழக்கில், வெங்கடேஷூக்கு 6ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் கட்டட ஆய்வாளராக பணிபுரிபவர் வெங்கடேஷ் (வயது 48). இவர் கடந்த 2007ம் ஆண்டு ஈரோடு நகராட்சியில் கட்டட ஆய்வாளராக இருந்தபோது, ஈரோடைச் சேர்ந்த சிவகாம சுந்தரி என்பவரிடம், கட்டட உரிமம் மற்றும் அங்கீகாரம் வழங்குவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    லஞ்ச பணத்தை பெற்றபோது ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். நிலுவையில் இருந்த இந்த வழக்கில் வெங்கடேஷ் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில், ஈரோடு மாவட்ட நீதிமன்றம் லஞ்சம் பெற்ற வழக்கில், வெங்கடேஷூக்கு 6ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்துஅவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×