search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாட்டினர்"

    • இறக்குமதி, துவக்க இருப்பு உட்பட 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது.
    • கடந்த மாதம் 29.54 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது.

    திருப்பூர்:

    இந்திய பருத்தி கழகம் சார்பில் நடப்பு ஆண்டுக்கான பருத்தி தேவை பூர்த்தியடையும் என கணக்கிடப்பட்டது. நடப்பு ஆண்டில் பருத்தி விளைச்சல் மட்டும் 315 லட்சம் பேல் அளவுக்கு இருக்கும். இறக்குமதி, துவக்க இருப்பு உட்பட 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது.உள்நாட்டு நூற்பாலைகள் தேவைக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவையெனவும் தெரிவிக்கப்பட்டது. பருத்தி சீசன் துவங்கி 7 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பருத்தி வரத்து மீண்டும் கடந்த சில வாரங்களாக குறைய துவங்கியுள்ளது.

    அக்டோபர் மாதம் - 9.71 லட்சம் பேல், நவம்பர் மாதம் 27.03 லட்சம், டிசம்பர் -27.96 லட்சம், ஜனவரி 26.66 லட்சம், பிப்ரவரி - 33.77 லட்சம், மார்ச் - 30.07 லட்சம் பேல் என பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது. கடந்த மாதம் 29.54 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்திருந்தது.கடந்த அக்டோபர் மாதம் துவங்கி ஏப்ரல் இறுதி வரை 184.77 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம், பஞ்சு வரத்து அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டில் பஞ்சு விலை வானம் தொடும் அளவுக்கு உயர்ந்ததால் இந்தாண்டும் கூடுதல் லாபம் கிடைக்குமென விவசாயிகள் காத்திருந்தனர்.விலையில் மாற்றம் இருக்காது என்பது உறுதியான பின்னரே மார்ச் மாதத்துக்கு பின் வரத்து துவங்கியது.குறிப்பாக பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர் வரத்தில், வரலாறு காணாத அளவுக்கு குழப்பம் நீடிக்கிறது.பல இறக்குமதி நாடுகளில் சிக்கன நடவடிக்கை காரணமாக பழைய ஆடைகள் முழுமையாக காலியாகவில்லை. புதிய ஆர்டர் விசாரணை பரபரப்பாக நடந்தாலும் ஆர்டர் உறுதி செய்வதில் முழுமையான வெற்றி இல்லை.இத்தகைய காரணங்களால் நூற்பாலைகளுக்கான ஏற்றுமதி ஆடை தயாரிப்பு ஆர்டர் 80 சதவீதம் குறைந்துள்ளது.

    இதுகுறித்து நூற்பாலை நிர்வாகிகள் கூறியதாவது:-

    உள்நாட்டு ஆடை உற்பத்திக்கான நூலிழை உற்பத்தி மட்டும் வழக்கம் போல் நடக்கிறது. ஏற்றுமதி ஆடை தயாரிப்புக்கான நூல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மார்க்கெட்டு வர்த்தகம் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.கடந்த மாத நிலவரப்படி குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பருத்தி மார்க்கெட்டுகள் மட்டும் பரபரப்பாக இயங்கியது. இரு மாநிலங்களில் இருந்து மட்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான பஞ்சு பேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும், டாப் -10 வரிசையில் குழந்தைகளுக்கான கம்பளி பின்னலாடைகள் இடம்பெற்றுள்ளன.உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் சர்வதேச ஜவுளி சந்தைகளில் இந்தியாவுக்கு 6 சதவீத பங்களிப்பு உள்ளது. அவற்றில் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் முக்கிய இடத்தை பெற்று விளங்குகிறது.

    பின்னலாடைகள் பருத்தி நூலிழையில் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் ஆண்கள் அணியும் டி-சர்ட் மற்றும் குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகள் அதிக அளவில் வெளிநாட்டினரால் விரும்பப்படுகிறது.

    சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள பிப்ரவரி மாத வர்த்தக புள்ளி விவரங்களில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி விவரம் இடம்பெற்றுள்ளது. திருப்பூரில் இருந்து பிப்ரவரி மாதம் வரை 33 ஆயிரத்து 764 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது.

    திருப்பூரில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் டாப் 10 பொருட்கள் 20 ஆயிரத்து 322 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளன. இது மொத்த ஏற்றுமதியில் 60.19 சதவீதம். அவற்றில் பின்னலாடைகள் பங்களிப்பு மட்டும் 98 சதவீதம்.திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடையில் பருத்தி நூலிழை டி-சர்ட் மட்டும் 7,709 கோடி ரூபாய்க்கு (23 சதவீதம்) இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக பருத்தி நூலிழையில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான ஆடைகள் 3,560 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளது.

    இதேபோல் செயற்கை நூலிழையில் தயாரித்த டி-சர்ட் , பருத்தி நூலிழையில் தயாரிக்கப்பட்ட பைஜாமா மற்றும் இரவு ஆடைகள், பின்னலாடை சட்டைகள், ஷார்ட்ஸ் மற்றும் டிராயர்கள் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளன. திருப்பூரில் தயாரான கம்பளி மற்றும் செம்மறி ஆடு ரோமத்தில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டிய ஆடைகள் இடம்பெற்றுள்ளன.

    இத்தகைய குழந்தைகள் ஆடைகள் 2022 ஏப்ரல் மாதம் துவங்கி 2023 பிப்ரவரி மாதம் வரை 770 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது டாப் 10 ஏற்றுமதியில் 3 சதவீதத்துக்கு குறைவாக இருந்தாலும், வருங்காலத்தில் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை வாரி வழங்குமென ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.பருத்தி நூலிழையில் தயாரிக்கும் ஆயத்த ஆடைகளுக்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக திருப்பூரில் உற்பத்தியாகும் ஆண்கள் அணியும் டி-சர்ட் மற்றும் குழந்தைகளுக்கான காட்டன் ஆடைகள் அதிகளவில் வெளிநாட்டினரால் விரும்பப்படுகிறது.

    • கொரோனாவால் வெளிநாட்டு பயணிகளுக்கு 2020, 2021-ம் ஆண்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • கடந்த ஆண்டில் மட்டும் 15 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் 15.24 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 74.39 சதவீதம் பேர் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்தியா வந்துள்ள வெளிநாட்டினரில் அமெரிக்கர்களே அதிகம் ஆவர். அந்த வகையில் 4.29 லட்சம் அமெரிக்கர்கள் கடந்த ஆண்டு இந்தியா வந்துள்ளனர். அடுத்ததாக வங்காளதேசத்தவர்கள் 2.40 லட்சம் பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த 1.64 லட்சம் பேர், கனடா மற்றும் நேபாள நாட்டினர் முறையே 80,437 பேர் மற்றும் 52,544 பேரும் இந்தியா வந்துள்ளனர்.

    மேலும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போர்ச்சுக்கல், பிரான்ஸ் நாட்டினரும் அதிக அளவில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

    அமெரிக்காவில் ‘எச்4’ விசா வருகிற ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவலால், அங்கு பணிபுரிந்து வரும் இந்தியர் உள்பட 1 லட்சம் வெளிநாட்டினர் பாதிப்படைவார்கள். #US #H4Visa #Immigrants
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஏராளமான அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள் எச்1-பி விசா பெற்றுள்ளனர். அவர்களது மனைவி அல்லது கணவன்மார்கள் பணிபுரிய எச்4 விசா வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகை முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது.

    ஆனால் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அமெரிக்கர்களுக்கே வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனால் ‘எச்1-பி’ விசா வழங்குவதில் நடைமுறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக் கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் வாழ்க்கை துணைவருக்கும் வழங்கப்பட்ட ‘எச்4’ விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.


    ஆனால் இது எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது ‘எச்4’ விசா வருகிற ஜூன் மாதம் முதல் ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கருத்து அறிய 30 முதல் 60 நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும். எனவே அதற்கான அறிவிப்பை டிரம்ப் அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்காவில் ‘எச்4‘ விசாவில் பணி புரியும் 1 லட்சம் வெளிநாட்டினர் கடும் பாதிப்புக்குள்ளாவர்.

    அதன் மூலம் அமெரிக்காவில் தொழில் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிப்படையும். எனவே அமெரிக்க அரசின் இந்நடவடிக்கையை தடுத்து நிறுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளன. எனவே இந்த ரத்து நடவடிக்கை மேலும் கால தாமதமாகும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் ‘எச்4’ விசா ரத்து நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. #US #H4Visa #Immigrants
    ×