search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டினர் லஞ்சம் வழங்கினால் இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது- ஆய்வு அறிக்கையில் தகவல்
    X

    வெளிநாட்டினர் லஞ்சம் வழங்கினால் இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது- ஆய்வு அறிக்கையில் தகவல்

    வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாது என ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் நாடுகள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு லஞ்சம் கொடுப்பது உண்டு. ஊழல் எதிர்ப்பு சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இது தொடர்பாக நடத்திய ஆய்வில் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சீனா, ஹாங்காங், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 2 சதவீதத்துக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

    ஆனால் கடந்த 1997-ம் ஆண்டு ஐ.நா.சபை நிறை வேற்றிய ஊழல் எதிர்ப்பு தீர்மானத்தில் இந்த நாடுகள் கையெழுத்துப் போடவில்லை.

    இதனால் வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட இந்த 4 நாடுகளுக்கும் லஞ்சம் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால் இந்த நாடுகளில் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு பிரச்சினைகள் வரும். சட்ட அமல் நடவடிக்கைகள் பாதிக்கும்.

    இதற்கு உதாரணமாக சில வழக்குகள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விமானங்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டும், இந்தியாவால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.

    எனவே வெளிநாட்டவரால் லஞ்சம் வழங்கப்படுவதை கிரிமினல் குற்றமாக இந்தியா அறிவிக்க வேண்டும்.

    அத்துடன் தனியார் துறையில் இடித்துரைப்பாளர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். #tamilnews
    Next Story
    ×