search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australia"

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை குவித்தது.
    • கோலி, கே.எல். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தனர்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார்.

    களத்தில் இருந்த அம்பயர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார். சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார்.

    பிறகு வெளியான ரி-பிளே-வில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். தனது விக்கெட்டில் ரிவ்யூ எடுத்திருந்தால், தப்பித்து இருக்கலாம் என்பதை அறிந்த பின் ஸ்டீவன் ஸ்மித் கடுப்பாகி இருப்பார். 

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 240 ரன்களை சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 240 ரன்களை சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஹேசில்வுட், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    241 ரன்கள் எனும் இலக்கை துரத்தும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    - 70 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.

    - லீக் போட்டியை போன்றே குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் விக்கெட்டை துவக்கத்திலேயே வீழ்த்த வேண்டும்.

    - முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

    - மிடில் ஓவர்களில் ஜடேஜா 30 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் பந்துவீச வேண்டும்.

    - ஸ்மித், லபுஷேன் நீண்ட நேரம் களத்தில் இருப்பதை அனுமதிக்காமல், விக்கெட் வீழ்த்த வேண்டும்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • இந்தியா சார்பில் கே.எல். ராகுல் 66 ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கியது. இருவரும் முறையே 47 மற்றும் 4 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலி 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கே.எல். ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 107 பந்துகளில் 66 ரன்களை குவித்தார். இதில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே விளாசினார். இவருடன் ஆடிய ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களை குவித்தார்.

    முகமது ஷமி 6 ரன்களிலும், ஜஸ்பிரித் பும்ரா 1 ரன்னிலும், குல்தீப் யாதவ் 10 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணி ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் ரன்களை பொறுமையாக சேர்த்து வந்தது. இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்டீவன் ஸ்மித் உடன் பகிர்ந்து கொள்கிறார்.

    2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு விராட் கோலி 2019 மற்றும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    இதன் மூலம் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் விராட் கோலி 765 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 95.62 ஆகும். இதில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும்.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா புது சாதனை.
    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிதானமாக ஆடியது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களை குவித்து அசத்தினார். இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.

    இன்றைய இறுதிப் போட்டியில் 151.61 எனும் அதிரடி ரன்ரேட்டில் விளையாடி வந்த ரோகித் சர்மா மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் இடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார். நடப்பு உலகக் கோப்பை 2023 தொடரின் மற்ற போட்டிகளை போன்றே, இன்றைய போட்டியிலும் ரோகித் சர்மா அபார துவக்கத்தை கொடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ரோகித் மூன்று சிக்சர்களை விளாசினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே 87 சிக்சர்களை அடித்துள்ளார்.

    முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக கிரிஸ் கெயில் 85 சிக்சர்களை அடித்ததே, ஒரு அணிக்கு எதிராக ஒரு வீரர் அடித்த அதிக சிக்சர்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. இன்றைய போட்டியின் மூலம் ரோகித் சர்மா இந்த சாதனையை முறியடித்து, ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த சாதனை மட்டுமின்றி ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர், கேப்டனாக உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர், உலகக் கோப்பை தொடரில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த வீரர் போன்ற சாதனைகளையும் ரோகித் சர்மா படைத்துள்ளார்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தமாக 597 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி ரன்கள் 54.27 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 125.94 ஆகவும் இருந்துள்ளது. இதில் ஒரு சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதில் ரோகித் சர்மா 31 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.

    • உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.

    முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

    2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.

    எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

    கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

    இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். 

    • உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.
    • உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கும் நிலையில், ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர். போட்டியின் போது சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டி நடுவர்கள் யார் யார் என்ற விவரங்கள் என போட்டி குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், போட்டியின் வர்ணனையாளர்கள் குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் போட்டியின் போது ஆங்கில மொழியில் வர்ணனையில் ஈடுபடுவர். இதில், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பல்வேறு பிரபலங்கள் இடம்பெற்று உள்ளனர்.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு காஸ் நாயுடு, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹூசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மாத்யூ ஹேடன், இயன் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் வர்ணனை செய்யவுள்ளனர். 

    • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
    • இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 11-ம் தேதி உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் துவங்கின. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடின. அதன்படி புள்ளிகள் அடிப்படையில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதியில் மோதின.

    அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

    அந்த வகையில், நாளைய போட்டியில் டாஸ் போட்டதும் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மதியம் 1.35-க்கு துவங்கும் சாகச நிகழ்ச்சி 1.50 மணி வரை நடைபெற இருக்கிறது. பிறகு, போட்டியின் முதல் இன்னிங்ஸ் தேநீர் இடைவேளையின் போது ஆதித்யா காத்வியின் இசை கச்சேரி நடைபெறுகிறது.

    பின் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது ப்ரிதம் சக்ரபோர்த்தி, ஜோனிதா காந்தி, நாகாஷ் அசிஸ், அமித் மிஸ்ரா, ஆகாசா சிங் மற்றும் துஷர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிறகு 2-வது இன்னிங்ஸ்-இன் தேநீர் இடைவேளையின் போது லேசர் மற்றும் லைட் ஷோ நடைபெறுகிறது.

    • உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்.
    • மிட்செல் மார்ஷ் அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் மார்ஷ் கடந்த மே மாதம் வெளியான பாட்காஸ்ட் ஒன்றுக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில், தனது அணி தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

    இதுதவிர, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் எவ்வளவு ரன்களை அடிக்கும் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். அதன்படி, ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 450 ரன்களை குவிக்கும் என்றும் அடுத்து களமிறங்கும் இந்திய அணி வெறும் 65 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று தெரிவித்தார். இவரின் இந்த பதில் தொடர்பான மீம்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் அச்சுறுத்தலாக இருப்பார்.
    • இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில், போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். அதன் படி, இறுதிப் போட்டியில் எந்த இந்திய வீரர் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார், இறுதிப் போட்டியில் பிட்ச் எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்திய அணி அனைத்து தரப்பிலும் பலம் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், தொடரின் சில போட்டிகளில் களமிறங்காமல் அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட வீரர் முகமது ஷமி. வலது மற்றும் இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அவர் சவாலாக விளங்குகிறார். இதே நிலையை இறுதிப் போட்டியிலும் அவர் தொடர்வார், ஆனால் எங்களது வீரர்கள் இந்த களத்தில் அதிகம் விளையாடி உள்ளனர். இதனால் பந்துவீச்சாளர்களை எங்களது பேட்டர்களும் தக்க போட்டியை வழங்கலாம்."

    "அவர்களிடம் ஒவ்வொரு போட்டியிலும் பத்து ஓவர்கள் வரை பந்துவீசக்கூடிய ஐந்து பேர் உள்ளனர். அவர்களது சுழற்பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா எங்களுக்கு கடுமையான சவாலாக இருப்பர். ஆனால், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று இருப்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்"

    "பிட்ச்-ஐ பொருத்தவரை அது இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியே இருக்கும். சொந்த நாட்டில், உங்களின் விக்கெட்டில் விளையாடுவதில் சில சாதகமான விஷயங்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இங்கு அதிக கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

    • வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார்.
    • ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் ரன்களை குவித்தார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தார்.

    போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    307 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார். அடுத்து வந்த மிட்செல் மார்ச் அதிரடியாக ஆடி 177 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் 63 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 307 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டஸ்கின் அகமது முஸ்தாஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ×