search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "appear"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். #ThoothukudiProtest #SterliteProtests #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தூத்துக்குடிக்கு வந்தது. இந்த குழுவினர் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்துகின்றனர்.

    தற்போது சம்பவம் நடந்த இடங்களில் ஆய்வு மற்றும் ஆவணங்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பவ விவரங்களையும் கேட்டறிந்தனர்.

    நேற்று சூப்பிரண்டு சரவணன், துணை சூப்பிரண்டு ரவி ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்த இடம், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா உள்ளிட்ட துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அதேபோன்று சம்பவம் தொடர்பாக புகார் அளித்த துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோரையும் வரவழைத்து சம்பவ விவரங்களை கேட்டறிந்தனர். இன்றும் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி. ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் சேகரும் சி.பி.ஐ. முன்பாக ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். #ThoothukudiProtest #SterliteProtests #ThoothukudiShooting #CBI
    ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.#JayadeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.

    டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. #JayadeathProbe #ApolloHospital

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆஜரானார்கள். #JayadeathProbe
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.


    மேலும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆகியோர் இன்று குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பில் வக்கீல் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். #JayadeathProbe
    குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன் ஆஜர் ஆனார்கள். மேலும் 2 நாள் காவலை நீடிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார். #gudkacorruption #cbi

    சென்னை:

    தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த தடையை மீறி மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர். இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிப்பெற்றனர்.

    இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் இன்று காலையில் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார்.


    இதன்பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

    இதற்கிடையில் செந்தில்குமார் உள்பட 3 பேரையும் புழல் சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர். #gudkacorruption #cbi

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாளர் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா இன்று ஆஜரானார். #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    சசிகலா உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகிறார்.

    ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும் சிகிச்சை குறித்தும் டாக்டரிடம் கேட்டார்.

    இந்த நிலையில் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனாவுக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையேற்று ரமேஷ்சந்த் மீனா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர்ஆனார்.

    அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வித்யாசாகர் ராவ் நேரில் பார்த்தாரா, என்பது போன்ற கேள்விகளை கேட்டார். இதேபோல் அப்பல்லோ டாக்டர் ராஜ்பிரசன்னா ஆஜரானார். #JayaDeathProbe #Jayalalithaa #JusticeArumugaswamy
    மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மயிலாடுதுறை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #ThirumuruganGandhi
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னபெருந்தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு தரப்பினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சீர்காழி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி ,சீர்காழி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    அங்கு நீதிபதி விடுப்பில் இருந்ததால் உடனடியாக மயிலாடுதுறை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருமுருகன் காந்தி மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். #ThirumuruganGandhi
    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 23-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை கமி‌ஷன் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

    வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ளனர்.

    தற்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, நிதிஷ் நாயக், அஞ்சன் டிரிக்கா ஆகிய 3 பேருக்கும் விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



    அதில், வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் தனபால் இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #Yuvaraj
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால் வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    கோவை அருகே சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலை அதிபர் அமித் ஜெயின் இன்று சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா ஆலையில் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அங்கிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து குட்கா ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலை மேலாளர் ரகுராமன், அங்கு வேலை பார்த்து வந்த வட மாநில ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.ஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் டெல்லி சென்றனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. வெளி நாட்டில் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் அமித் ஜெயின் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சென்னை அடையாறு புற்று நோய் மையத்திற்கு ரூ. 1 லட்சத்துக்கான டி.டி. எடுத்து கொடுக்க வேண்டும். சூலூர் போலீசில் கையெழுத்திட வேண்டும். இது தொடர்பாக சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆகி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளும் படி உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அமித் ஜெயின் இன்று சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். #tamilnews
    சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.

    11 வயது, 5 மாதங்கள் நிரம்பிய அந்த சிறுமி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, காமக்கொடூரர்களின் காமப்பசிக்கு பலியாகி இருக்கிறார்.

    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்த சிறுமியின் மூத்த சகோதரி மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில், ஓட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளது. வெகுளித்தனமான அந்த சிறுமி யாரிடமும் அன்பாக பழகக்கூடிய சுபாவம் உள்ளவர்.



    அதை பயன்படுத்தி தான் 23 பேர் கொண்ட காமவெறியர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் தோட்டக்காரர் முதல், காவலாளி வரை அந்த சிறுமியை தங்கள் உல்லாசத்துக்கு விருந்து படைக்க வைத்துள்ளனர்.

    அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிறிய காயங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் மூத்த சகோதரி சென்னைக்கு வந்திருக்கிறார். சிறுமியின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு பிறகுதான் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி விவரமாக கூறியிருக் கிறார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோருக்கு இந்த வி‌ஷயம் தெரிய வர அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.



    இந்த கொடூர சம்பவம் குறித்து அயானவரம் உதவி போலீஸ் கமி‌ஷனர் சிராஜூதீனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த புகார் மனு பற்றி தெரியவந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ‘போக்சோ’ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    23 பேர் கொண்ட காமவெறியாட்ட கும்பல், சிறுமியை சீரழித்துள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 6 பேர் கைதானார்கள். அடுத்தகட்டமாக மேலும் 12 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 18 பேரில், 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. முருகே‌ஷ் (வயது 54) - பாளையக்கார தெரு அயனாவரம். 2. பரமசிவம் (60) - அயனாவரம் சி.கே. தெருவைச் சேர்ந்தவர். 3. ரவிக் குமார் (66) - பங்காரு தெரு அயனாவரம். 4. ஜெய்கணே‌ஷ் (23) - வசந்தா கார்டன் முதல்தெரு, அயனாவரம். இவர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 5. பாபு (36) - எஸ்.வி.எம்.நகர், ஓட்டேரி- லிப்ட் இயக்கும் தொழிலாளி. 6. பழனி (40) - காந்திநகர், புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 7. தீனதயாளன் (50) - மேட்டுத்தெரு, அயனாவரம், லிப்ட் இயக்கும் ஊழியர். 8. அபிஷேக் (23) - பழனியப்பா 2-வது தெரு, அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 9. சுகுமாரன் (60) - பாலாஜி நகர், 4-வது மெயின்ரோடு, கதின்மேடு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 10. இறால் பிரகா‌ஷ் (58) - நீல்ஸ் கார்டன், பெரம்பூர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 11. ராஜா (32) - அம்பேத்கர் நகர், அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை செய்பவர். 12. சூர்யா (23) - ராஜாதோட்டம் 2-வது தெரு, புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 13. சுரே‌ஷ் (32) - கன்னியப்பன் தெரு, கொளத்தூர், பிளம்பராக வேலை செய்பவர்.

    14. ஜெயராமன் (26) - நரசிம்மன் நகர், 3-வது தெரு கொடுங்கையூர், எலக்ட்ரீசியனாக உள்ளார். 15. ராஜசேகர் (40) - வசந்தா கார்டன் 2-வது தெரு, அயனாவரம், வீட்டு வேலை செய்பவர். 16. குணசேகர் (55) - மதுரை பிள்ளைத்தெரு, அயனாவரம், தோட்ட வேலை செய்பவர். 17. உமாபதி (42) - எம்.கே.பி.நகர், காவலாளி வேலை செய்பவர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒருவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கைதான 17 பேரில், 66 வயது நிரம்பிய லிப்ட் ஊழியர் ரவிக்குமார் தான், முதன் முதலாக சிறுமியிடம் பழகியிருக்கிறார். சிறுமி லிப்ட்டில் செல்லும்போது, ரவிக்குமாரிடம் அன்பாக பேசியிருக்கிறார். அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ரவிக்குமார் கத்திமுனையில் மிரட்டி முதன் முதலாக சிறுமியை தனது காம இச்சைக்கு பணிய வைத்திருக்கிறார்.

    அதன்பிறகு, ரவிக்குமார் மூலமாக ஒவ்வொருவரின் காமஇச்சைக்கும் சிறுமி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு போதை ஊசிபோட்டும், போதை மாத்திரை கொடுத்தும், ‘செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபட்டனர். சிறுமியிடம் உறவு கொள்வதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. லிப்ட் ஊழியர் ரவிக்குமார், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத்தொடர்ந்து கைதான மற்றவர்களும் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    சிறுமியை சீரழித்தவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியிலும், ‘லிப்ட்’டுக்குள்ளும், வைத்து சிறுமியை கெடுத்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத வகையில், மறைவான இடங்களில் வைத்து காமவெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

    கைதானவர்களில் 7 பேர் 50 வயதை தாண்டியவர்கள். பேரன் பேத்தி கண்டவர்கள் ஆவார்கள். ஈவு இரக்கம் இல்லாமல், இந்த மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் சிறுமியைக் கெடுத்த ரவிக்குமார் சிறுமியிடம் தாத்தா போல் பழகியுள்ளார். அந்த உரிமையில் தொட்டு கட்டிப்பிடித்து விளையாடிய ரவிக்குமார் நாளடைவில் தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட்டார்.

    சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

    மதியம் 1.15 மணிக்கு அந்த 17 பேரும் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் 17 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நடைமுறை முடிவதற்கு மதியம் 3 மணி ஆகிவிட்டது. இதன்பின்னர் மதியம் 3.15 மணிக்கு 17 பேரையும் கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டு செல்வதற்காக கோர்ட்டு அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மகளிர் கோர்ட்டு 3-வது மாடியில் செயல்பட்டு வருவதால், அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவே அழைத்துவரப்பட்டனர்.

    அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் சிலர் குற்றவாளிகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். ஒருகட்டத்தில் குற்றவாளிகள் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் அவர்களை வக்கீல்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்க தொடங்கினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த தாக்குதல் நீடித்தது.

    தாக்குதலில் சிக்கிய கைதிகள் ‘அய்யோ... அம்மா...’ என்று கதறியபடி தரையில் உருண்டனர். 2 கைதிகள் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டனர்.

    முதலில் படிக்கட்டில் இறங்கிய 5 குற்றவாளிகள் மட்டுமே வக்கீல்கள் பிடியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்க போலீசார் கடும் சிரமப்பட்டனர். ஒருகட்டத்தில் அவர்களை வக்கீல்களிடம் இருந்து மீட்ட போலீசார், உடனடியாக மீண்டும் அதே கோர்ட்டு அறைக்குள் அழைத்துச்சென்று கதவுகளை மூடினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் ஏராளமான வக்கீல்கள் மகளிர் கோர்ட்டு முன்பு திரண்டனர்.

    இதனைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஜெயராம், ஆனந்தகுமார் சின்ஹா, கலைச்செல்வன், அன்பு ஆகியோர் கோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். அதேபோன்று அங்கு வந்த வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன், வக்கீல் சங்க பிரதிநிதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன், நீதிபதிகள் சுபாதேவி, மஞ்சுளா, ஜெயந்தி, தர்மன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வக்கீல்களை கலைந்து போக சொன்னால் மட்டுமே குற்றவாளிகளை பத்திரமாக அழைத்து செல்ல முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

    மகளிர் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் வெளியே அழைத்து செல்லும் அனைத்து வழிகளிலும் வக்கீல்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரவு 7 மணிக்கு மேல் வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வேனில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் குற்றவாளிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர். வக்கீல் ஒருவர் குற்றவாளிகள் இருந்த வேன் சாவியை பறிக்க முயன்றார்.

    அப்போது சாவி வேனுக்குள் விழுந்தது. இதைத்தொடர்ந்து சாவியை எடுத்த டிரைவர் வேனை அங்கிருந்து வேகமாக எடுத்துச்சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் வேனை கைகளால் தட்டியபடி ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆக மாட்டார்கள் என்று ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன் அறிவித்து உள்ளார். 
    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் மற்றும் நர்சு ஆகியோர் ஆஜரானார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    முக்கிய தகவல் தெரிவிப்போரிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒவ்வொருவர் அளிக்கும் வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக அப்பல்லோ டாக்டர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

    இன்று அப்பல்லோ டாக்டர் பத்மா, நர்சு மகேஸ்வரி ஆகிய 2 பேரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் ஆஜர் ஆகி உள்ளனர். #Jayalalithaa #ApolloHospital
    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவனை நர்ஸ் விஜயலட்சுமி ஆஜரானார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த ஆணையத்தில் போலீஸ் அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் மற்றும் போயஸ் கார்டனில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்ஸ் விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #Apollohospital
    ×