என் மலர்
நீங்கள் தேடியது "Manoj Pandian"
- தனது எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.
- பாஜக கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மாலையில் தனது எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.
மனோஜ் பாண்டியன் அதிமுகவை விட்டு நீங்கியது குறித்து பேசிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ வைகைச்செல்வன், தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார் என்று விமர்சித்தார்.
திமுகவில் இணைந்தது குறித்து பேசிய மனோஜ் பாண்டியன், பாஜக கட்சியின் கிளை கழகம் போல் அதிமுக செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி திமுகவில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.
திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம் "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் பதிலளித்துவிட்டு நகர்ந்தார்.
அதேபோல ஓபிஎஸ், டிடிவி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாலேயே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், "செங்கோட்டையனை நீக்கியது அதிகாரத்தின் உச்ச நிலை. இது அழிவுக்குத் தான் வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.
- ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- இனறு காலை மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் இணைந்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. இன்று காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கனிமொழி எம்.பி., அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
- தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
- இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-
* தமிழக உரிமைகளை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
* வேறொரு கட்சியின் சொல்பேச்சை கேட்டு அ.தி.மு.க. வழி நடத்தப்படுகிறது.
* பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக அ.தி.மு.க மாறிவிட்டது.
* இன்று மாலை தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றார்.
- 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தி.மு.க.வில் இணைந்தார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்
அ.தி.மு.க.வில் பயணித்து வந்த மனோஜ் பாண்டியன் 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு, 2010 முதல் 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதன்பின், அ.தி.மு.க. இரு பிரிவாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார்.
- எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும்., ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.
வருகிற 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம்.
சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். சட்டப் போராட்டம் என்பது முதல் படிதான். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.
உண்மையான அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தான் இருக்கிறது. ஓ. பன்னீர் செல்வம் அழைப்பை எதிரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொள்வார்கள்.
தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார். எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓ. பன்னீர்செல்வத்தின் விருப்பம். அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.
சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.







