search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manoj pandian"

    • தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார்.
    • எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும்.

    நெல்லை:

    சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க.வின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும்., ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ஒண்டி வீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறோம்.

    வருகிற 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம்.

    சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம் மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். சட்டப் போராட்டம் என்பது முதல் படிதான். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.

    உண்மையான அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தான் இருக்கிறது. ஓ. பன்னீர் செல்வம் அழைப்பை எதிரிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்ட தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக் கொள்வார்கள்.

    தொண்டர்களின் நலனுக்காக ஒவ்வொரு நகர்வையும் ஓ.பன்னீர் செல்வம் எடுப்பார். எல்லோரும் ஒன்று சேர்வோம். அ.தி.மு.க. ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் ஓ. பன்னீர்செல்வத்தின் விருப்பம். அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.

    சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆஜரானார்கள். #JayadeathProbe
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.


    மேலும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆகியோர் இன்று குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பில் வக்கீல் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். #JayadeathProbe
    ×