search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்
    X

    விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள்- மனோஜ்பாண்டியன் ஆஜர்

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆஜரானார்கள். #JayadeathProbe
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.


    மேலும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆகியோர் இன்று குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பில் வக்கீல் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். #JayadeathProbe
    Next Story
    ×