search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anbumani"

    ‘கஜா புயல் பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதித்து, மத்திய அரசிடம் போதிய நிவாரண தொகையை பெற வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #anbumani #gajacyclone
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் 2 நாட்கள் சென்று பார்வையிட்டேன். வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் கொடைக்கானலிலும் சேதமடைந்து உள்ளது. பலநூறு கிராமங்களில் மீட்பு பணிக்காக ஒரு அதிகாரிகள் கூட செல்லவில்லை. மழையால் வீடுகளை இழந்து பொதுமக்கள் முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

    மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற்ற பின்னர் தான் மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்ற மனநிலையில் மாநில அரசு இருக்க கூடாது. உடனடியாக மீட்பு பணியில் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்ட எவரும் பார்வையிட வரவில்லை. மாறாக கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக பிரதமர் வந்து பார்வையிட்டு ரூ.500 கோடி நிவாரணமும் அறிவித்தார்.

    எத்தனையோ புயல் வந்தும் மாநில அரசு பாடம் கற்பிக்கவில்லை என்றால் அதிகாரிகள் எதற்கு?, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்றவை எதற்கு?. மீட்பு பணியும் நடக்கவில்லை, நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணியும் நடக்கவில்லை. குடியிருப்புகளும் சேதமடைந்ததுடன், கால்நடைகள் இறந்ததுடன், 10 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர நெல்பயிர், கரும்பு, வாழை மற்றும் முந்திரிதோப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    எனவே இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் உடனடி தேவைக்கு ரூ.50 ஆயிரம் போட வேண்டும். வேதாரண்யம் பகுதியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் சரணாலயமும் சேதமடைந்து உள்ளன.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் பொருட்களும், சேவையும் அளித்து வருகிறோம். இதுவரை ரூ.20 லட்சம் மதிப்பில் பொருட்களை வழங்கி உள்ளோம். மருத்துவ சேவையையும் அளித்து வருகிறோம். இதனை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசும் அதிகளவில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வானிலை மாற்றங்களால் எதிர்காலத்தில் இதுபோன்று பல புயல்களை சந்திக்க இருக்கிறோம். மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததும் ஒரு குறையாகும். புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன்.

    தமிழக அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதித்து, குழு ஒன்றை அமைத்து டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் பாதிப்புகளை கூறி உரிய நிவாரணத்தை பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.  #anbumani #gajacyclone
    குன்னம், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #pmk
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் குன்னம், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டதலைவர் ராம.மருதவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுசெயலாளர் - வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.

    மாநில துணை தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மதுரா செல்வராஜ், மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் , மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செல்லரவி  மற்றும் உழவர் பேரியக்க நிர்வாகிகள் கோடங்குடி ராஜேந்திரன், ரவி, மாநில செயற்குழு உறுப்பினர். அன்புச்செல்வன், செல்வகடுங்கோ, மாநில மாணவர் அணி துணை தலைவர் பிரபு,  பேச்சாளர் தமிழ் இனியன் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் 200க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  குன்னம் கண்ணதாசன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் மழவராய நல்லூர் கிராமத்தில் இருதரப்பினர் மோதல் விவகாரத்தில், ஒருவரை கைது செய்த மங்களமேடு போலீசார்   லஞ்சம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். எனவே போலீசாரை கண்டித்து வருகிற 26-ந்தேதி பெரம்பலூர் ஆர்.சி. அருகே போராட்டம் நடத்துவது, வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பெரம்பலூர் - அரியலூர் மாவட்டத்தில் உள்ள 200 பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்,  கட்சி அணைத்து நிலை பொறுப்பாளர்களும் அன்புமணி ராமதாசை முதல்வர் ஆக்கும் வரை பாகுபாடு இன்றி பணியாற்ற வேண்டும் என்பது உள்பட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #pmk
    இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #srilankaparliament #dissolves #sirisena

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையில் நடைபெற்று வரும் அரசியல் அதிகார சதுரங்கப் போட்டியில் தமிழ் இனப் படுகொலை நடத்திய மகிந்த ராஜபக்சேவின் தமிழர் ரத்தம் தோய்ந்த கரங்களில் இலங்கையின் முழு அதி காரத்தையும் மீண்டும் வழங்குவதற்கு இன்றைய அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டு சதி நாடகத்தை நிறைவேற்றிவிட்டார்.

    2019 ஜனவரி 5-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப்போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜ பக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

    மகிந்த ராஜபக்சேயின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே அடுத்து நான் அதிபராவேன் என்றும் கூறியிருக்கிறான். ராஜபக்சே கூட்டத்துக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து மகிந்தனே மீண்டும் அதிபராகவும் வாய்ப்பு ஏற்படலாம்.

    இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருகாலும் நீதி கிடைக்காது. மகிந்த ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்ட மாக ஈழத்தமிழர்களின் பண் பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாச்சாரப் படுகொலையை நடைபெறும். தற்போது தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்தை மேலும் அதிக அளவில் நிலைப்படுத்துவார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தில் அதிகமாகும். வடக்கு கிழக்கு இணைப்புக்கு வழியில்லாமல் செய்ய ஏராளமான சிங்களக் குடியேற்றங்களை மேலும் அதிகப்படுத்தும் நிலை ஏற்படும்.

    வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் மாகாணசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களையும் வெளியேற்றவும், சிறையில் இருக்கும் தமிழர்களை விடுதலை செய்யவும், இனக்கொலைக் குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் கூண்டியில் நிறுத்து வதற்கான நீதிப் பொறி முறை அமைக்கவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் தாய்த் தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள மானத் தமிழர்கள் தமிழ் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா.மன்றத்திலும், மனித உரிமைக் கவுன்சிலிலும் குரல்கொடுக்க வேண்டும்.

    சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும் என்பதனை மனதில் நிறுத்தி, தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள், தங்கள் உயிர்களைக் கொடையாகத் தந்தவர்கள், படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி சூளுரை மேற்கொள்வோம்.

    அம்மா மக்கள் முன் னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-


    தமிழர்களுக்கு தீங்கிழைக்கும் எந்த சூழலும் இலங்கையில் ஏற்படாதவண்ணம் ஐ.நா மன்றமும், இந்திய அரசும் கண்காணிக்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

    இலங்கையில் தமிழர் இன அழிப்பை முன்னெடுத்த ராஜபக்சேயை, அதிபர் சிறிசேனா பிரதமராக அறிவித்த கொடுமையை, அந்நாட்டு நாடாளுமன்றம் முறியடித்துவிடும் என்று உலகமே எதிர்நோக்கியிருந்த நேரத்தில், இந்த ஜனநாயக விரோத செயலை புரிந்த இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஐ.நா.மன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை அழிக்கும் இந்த அக்கிரமச் செயல் வீழ்த்தப்பட வேண்டும்.

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:-

    இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.

    இலங்கை அதிபர் பதவியிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் தான் ரனில் விக்கிரமசிங்கே நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ? அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு அதிபர் சிறிசேனா சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

    இலங்கை அதிபர் சிறிசேனா அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு தேர்தலில் ராஜ பக்சேவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் அதிபர் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறிசேனா தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல.

    இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரம சிங்கே நீக்கப்பட்டு ராஜபக்சே நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த வி‌ஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #srilankaparliament #dissolves #sirisena

    மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சேலத்தில் நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசினார். #anbumani #pmk

    சேலம்:

    சேலத்தில் இன்று நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துரையாடி பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது, டாஸ்மாக் கடைகள் வேண்டும் என்று விரும்புபவர்கள் கை தூக்குங்கள் என்றார். ஆனால் யாரும் கையை தூக்க வில்லை.

    மதுவினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதில் மூளை, இதயம், கல்லீரல் போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் 40-வயதுக்கு மேல்உள்ளவர்கள் தான் மது குடித்தார்கள், தற்போது 13 வயதிலே மது குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    இதனால் சாலை விபத்து அதிக அளவில் நடக்கிறது. இந்த விபத்தில் 25-வயதுக்குட்பட்டவர்கள் இறந்து விடுகிறார்கள். இதனால் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். மனநலம் நோய் காப்பகம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

    மதுக்கடைகளை மூட தமிழக அரசு மறுக்கிறது. காரணம் அதில் தான் வருமானம் அதிகம் வருகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

    மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். கண்டிப்பாக எங்களால் கொண்டு வர முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்து போட்டு மதுவை முழுமையாக ஒழிப்போம். இதனால் சிலர் சாராயம் அதிகமாகும் என்று கூறுவார்கள். அதனை கட்டுப்படுத்த இலவச போன் நம்பர் ஒன்று கொடுப்போம், அந்த நம்பருக்கு தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு கொடுப்போம். மீறி சாராயம் விற்கப்பட்டால் அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உயர் அதிகாரிகள் மீது கரும்புள்ளி வைக்கப்படும், இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. மது இல்லாத தமிழகமாக மாற்றுவோம்.

    டாஸ்மாக் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி லாபம் வந்தாலும் தனி நபருக்கு இழப்பு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏற்படுகிறது. மது போதையால் விபத்து, வேலைக்கு செல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் இந்த இழப்பு ஏற்படுகிறது.

    விவசாய பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம், மழை நீரை சேமித்து கூடுதல் மகசூல் பெற வழி ஏற்படுத்தலாம். குறைந்த மழை பெய்யும் மேலை நாடுகளில் கூட தண்ணீரை சேமித்து அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு விவசாயிகள் லாபம் சம்பதிக்கிறார்கள். ஆனால் நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு சரியாக கையாளாமல் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

    தமிழகத்திற்கு மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 62 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறார்கள். இந்த தொகை மூலம் தினமும் ஒரு மெடிக்கல் கல்லூரியை கட்ட முடியும், பல லட்சம் வேலை வாய்ப்புகளையும் புதிய தொழிற்சாலைகளையும் தொடங்க முடியும் என்றார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். #anbumani #pmk

    ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் 47 ஆயிரம் ஏரிகள் காணப்பட்டன. தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பேசினார். #anbumani #pmk

    வேலூர்:

    ‘‘பாலாற்றை பாதுகாப்போம், கரம் கோர்ப்போம்’’ என்ற முழக்கத்துடன் பா.ம.க. சார்பில் 2 நாள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் நேற்று தொடங்கினார்.

    தொடர்ந்து திம்மாம்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து வேலூரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அன்புமணி பேசியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பால் போன்று ஓடிய ஆறு தற்போது பாழாய் போகி விட்டது. தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தான் இதற்கு முக்கிய காரணமாகும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அடுத்த சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

    கடந்த 22 ஆண்டுகளாக பாலாற்றை காப்பாற்ற பா.ம.க. கட்சி போராடி வருகிறது. பாலாற்றில் நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டர் கழிவுகள் நேரடியாக கலக்கிறது.

    ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழகத்தில் 47 ஆயிரம் ஏரிகள் காணப்பட்டன. தற்போது 42 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய்விட்டன. தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, காவிரி, வைகை உள்ளிட்ட அனைத்து ஆறுகளையும் பாதுகாக்க பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

    பா.ம.க.வினர் சினிமாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. சினிமா கலாசாரத்துக்கு எதிரானவர்கள். நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால், பீர் அபிஷேகம், கற்பூரம் ஏற்றுவது போன்ற கலாசாரம் வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

    தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும். கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில் 110 டிகிரி வெயில் பதிவாகும். வருங்காலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்க கூடும். இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைகளிலும் மரங்களை நட்டு பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் 5 ஆண்டுகளில் மலைகளில் 10 லட்சம் புங்கை, வேம்பு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதில், தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

    பாலாற்றை பாதுகாக்க ஆந்திராவில் கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும். பாலாற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். தோல் பதனிடும் தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகி விட்டது. இந்த ஆட்சி முடிந்தவுடன் முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயிலில் கம்பி எண்ணுவார்கள். சேலம்-சென்னை 8 வழிச்சாலை வராது. 8 வழிச்சாலை திட்டம் கொள்ளை அடிக்கவே போடப்பட்டது. அதற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை வைத்து தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தடுப்பணைகள் கட்டினால் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம்.

    அண்டை மாநிலங்கள் நீர்நிலைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு இலவச திட்டங்களுக்கு ரூ.62 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. அதனை வைத்து பல அணைகள் கட்டியிருக்கலாம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #anbumani #pmk 

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வைகோ, அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளனர். #Vaiko #anbumani #tnfisherman

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகில் உள்ள ரம்பவயல் கிராமத்தில் தங்கி, இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கமாகும்.

    கடந்த 10-ந்தேதி மாலை நெடுந்தீவு அருகே நாட்டுப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரோந்துக் கப்பலில் வந்து சுற்றி வளைத்து, 4 நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்ததுடன், அதில் இருந்த 27 மீனவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    27 பேரும் இலங்கையின் காங்கேசன்துறை ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் நிறுத்தி, பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இலங்கைக் கடற்படை கைது செய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


    ராமநாதபுரம் நம்பு தாளையைச் சேர்ந்த 22 மீனவர்கள் 3 நாட்டுப் படகுகளில் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் வானகரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

    இலங்கை அரசின் புதிய மீன்பிடித் தடை சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தராது என்றும் கூறப்படுகிறது. தவறு செய்யாத மீனவர்களுக்கு வழங்கப்படும் இத்தண்டனை மிகவும் கொடூரமானதாகும்.

    கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vaiko #anbumani #tnfisherman

    வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது துவக்க விழா மற்றும் சாதனை விளக்கம் பொதுகூட்டம் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது துவக்க விழா மற்றும் சாதனை விளக்கம் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டு சாதனைகளை பற்றி விளக்கி உறையாற்றினர். மேலும் பாட்டாளி  மக்கள் கட்சியின் போராட்டங்கள் இட ஒதுக்கீடு மற்றும் சுதாகதரதுறையில் அன்புமணியின் சாதனைகள் பற்றி விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை  தலைவர் தங்கதுரை முன்னிலை  வகித்தார்.சிறப்பு விருந்தினராக  மாநில துணை தலைவர்  பொங்கலூர் மணி கண்டன் , மாநில துணை பொது செயலாளர் வைத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    மேலும் மாவட்ட தலைவர் மருதவேல்,  வன்னியர்சங்க மாவட்ட தலைவர் தர்மராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செய லாளர் ராஜேந்திரன்,மாவட்ட துணை  தலைவர் கிருஷ்ண மூர்த்தி, அரியலூர் ஒன்றிய செயலாளர்  கருணாநிதி, மாநில மாணவர் அணி துணை தலைவர் பிரபு,கழக பேச்சாளர் தமிழ் இனியன், மாவட்ட  துணை செயலாளர் தேவேந்திரன், மாவட்ட துணை செயலாளர், சுப்ர மணியன் மாநில துணை பொறுப்பாளர்கள்கண்ணன், சுப்ரமணியன், சிவசூரியன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தர்மராஜ், மாவட்ட  வன்னியர் சங்க செயலாளர் செல்ல ரவி மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் மொழியரசு, மாநில துணை தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், மதுரா  செல்வராஜ் மாநில நிர்வாகிகள் செல்வகுமார், ஒன்றிய  செயலாளர்கள் பார்த்திபன்,  ஞானஜோதி, செல்வக் குமார், தனவேல், கோபி, திருமுருகன், அருள், சிவசங்கர் , ரமேஷ், முத்துசாமி ராஜ்குமார் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் வடமலை மற்றும் மாநில மாவட்ட கிளை  பொறுப்பாளர் உட்பட சுமார் 1000 க்கும்  மேற் பட்டோர் கலந்து கொண்டனர். 

    முடிவில்  நன்றியுரை நகர பொறுப்பாளர் கனல்குமார் கூறினார்.
    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விவசாயிகளை நேரில் சந்திப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #chennaisalem8wayroad

    தருமபுரி:

    தருமபுரி தொகுதி எம்.பி.யும்., முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர்.

    ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிதிநிதிகளும் இல்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

    இது தொடர்பாக பாராளு மன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன்.

    மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.


    தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக் கொள்கிறேன்.

    நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர்.

    நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தேன்.

    கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்ல முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalem8wayroad

    டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர் ராமதாசை வரம்பு மீறி விமர்சித்து பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் தலைமை தாங்கினார். கோரை கேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிசந்தர் வரவேற்றார். நகர பொருளாளர் அருண்குமார், தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் ரேணுகாகோவிந்தராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் யோகலட்சுமி, நகர பொருளாளர் ராஜாத்தி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    கும்பகோணத்தில் பா.ம.க. சார்பில் காந்தி பூங்கா அருகில் உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மரம்வெட்டி என்று கூறியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

    யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று தமிழிசை கேட்டதற்கு அதை அன்புமணி ஏற்றுள்ளார். #anbumani #tamilisai

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ‘டுவிட்டர்’ தளத்தில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது டாக்டர் அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.

    இதை கண்டித்து பா.ம.க. வினர் சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    நான் அன்புமணியை போல் தந்தையின் நிழலில் பதவியை பெறவில்லை. எனது அறிவு, திறமை, உழைப்பை கொண்டுதான் மாநில தலைவர் பதவிக்கு வந்து இருக்கிறேன்.

    யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று சவால் விட்டு இருந்தார்.

    இதுபற்றி டாக்டர் அன்புமணி கூறியதாவது:-

    30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அவரை கண்டித்து இன்று தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது.

    நாளைக்கு (29-ந்தேதி) பிறகு எங்கு வேண்டுமானாலும் தமிழிசையுடன் விவாதம் நடத்த தயார்.

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #tamilisai

    அன்புமணி ராமதாஸ் பற்றி கருத்து கூறிய தமிழிசையை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #anbumani

    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறி இருந்தார்.

    இதற்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

    இன்று தமிழிசை சவுந்திர ராஜனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை புறநகர் மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட மாதவரத்தில் மாநகாட்சி மண்டல அலுவலகம் அருகே மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் ஞானபிரகாசம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சண்முகம், துணைத்தலைவர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    காஞ்சி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பல்லாவரம் பஸ்நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் விநாயகம், மாவட்ட துணை செயலாளர் பூக்கடை முனுசாமி பங்கேற்றனர். #tamilnews #anbumani

    ×