என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Affair"
- கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண் போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
- ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனை சரமாரியாக அடித்தனர்.
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் கள்ளகாதலனுடன் அடிக்கடி செல்போனில் பேச தொடங்கினார்.
பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்க விரும்பினர்.
கணவர் வேலைக்கு சென்றதும் இளம்பெண் போன் செய்து கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
இந்த நெருக்கமான சந்திப்பு அடிக்கடி தொடர்ந்தது. இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவர் வழக்கம்போல வேலைக்குச் சென்றதும் இளம்பெண் தனது கள்ளக்காதலனை போன் செய்து வரவழைத்தார்.
அதன்படி தயாராக இருந்த கள்ளக்காதலன் இளம்பெண் வீட்டிற்கு வந்தார். இருவரும் கதவை பூட்டிக்கொண்டு தனி அறையில் உல்லாசமாக இருந்தனர்.
இதனை நோட்டமிட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். கதவை தட்டி இளம்பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தனர்.
அப்போது அவர்கள் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு கதவை திறந்தனர்.
ஆத்திரத்தின் உச்சியில் இருந்த பொதுமக்கள் இளம்பெண்ணின் கள்ளக்காதலனை சரமாரியாக அடித்தனர். இதில் அவரது முகம் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பதறி அடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார்.
அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து இருந்ததை கையும் களவுமாக பிடித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டதும் அவர் உறைந்து போய் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் மனைவி கள்ளக்காதலனை அங்குள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்தார்.
இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது இளம்பெண் தனது தவறை உணர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார்.
அந்த நேரத்தில் கள்ளக்காதலன் இளம்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.
நான் வேலைக்கு சென்ற நேரத்தில் என்னை ஏமாற்றி கள்ளகாதலனை சந்திக்க வேண்டாம். உன் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக் கூறி கணவன் ஆசீர்வதித்தார்.
கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
கள்ளக்காதனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
- அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரம் கட்டையன் விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார்.
இவரது மனைவி ஏஞ்சலின் தயா (36). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் மனைவி ஏஞ்சலின் தயாவை தலை, கழுத்து, கை உள்பட 5 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
இதில் ஏஞ்சலின் தயா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசில் ஏஞ்சலின் தயா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை அரிவாளால் வெட்டியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் செல்வராஜுக்கும் அவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தை ஏஞ்சலின் தயா பலமுறை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் தேடுவது அறிந்த செல்வராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கள்ளத்தொடர்பு காரணமாக பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கடந்த 7-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.
இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக அந்த பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான பெண், தர்மபுரி அதியமான்கோட்டையை சேர்ந்த பூங்கொடி (40), ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில்தான் பூங்கோதை கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார்.
- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள காரைக்காடு வீரகாரன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புகழரசி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மனைவி புகழரசி, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் தெரிவித்தார். பின்னர் உறவினர்கள் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.
இதனிடையே சக்திவேல் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தம்பி பழனிசாமி கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சக்திவேலின் மனைவி புகழரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது கணவரை விஷம் கொடுத்து கொன்றதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் சக்திவேல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இதனிடையே எனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முத்துக்குமார் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விஷயம் எனது கணவர் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார்.
மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறி என்னிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி கள்ளக்காதலன் முத்துகுமாரிடம் தெரிவித்தேன். அப்போது, அவர் உனது கணவரை கொன்று விடு, அதன் பிறகு நாம் இருவரும் எந்த இடையூறும் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம், உனக்கும், உனது குழந்தைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து தருவதாக கூறினார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதபடி இந்த கொலையை எப்படி செய்வது மற்றும் மறைப்பது குறித்தும் திட்டம் தீட்டினோம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடிபோதையில் எனது கணவர் சக்திவேல் வீட்டுக்கு வந்தார். அவருக்கு முதலில் 10 தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் அதில் உயிர் பிழைத்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் மீண்டும் தேனீர் போட்டு, அதில் தோட்டத்திற்கு வைத்திருந்த விஷத்தை கலந்து கொடுத்தேன். எனினும் அவர் பிழைத்துக்கொண்டால் என்ன செய்வது என்று எண்ணிய நான், மீண்டும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து அவருக்கு ஊட்டி விட்டேன். தொடர்ந்து விஷம் ஏறியதால், அவர் துடிதுடித்து இறந்து விட்டார்.
தொடர்ந்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்ய, முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறினேன். நள்ளிரவில் வீட்டுக்கு வந்த முத்துக்குமார், சக்திவேல் இறந்ததை உறுதி செய்த பின்பு, அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினேன். எனினும் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒத்துக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, புகழரசியையும், அவரது கள்ளக்காதலன் முத்துக்குமாரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட், அவர்கள் இருவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் ஜெயிலில் புகழரசியையும், சேலம் மத்திய ஜெயிலில் முத்துக்குமாரையும் அடைத்தனர்.
- ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.
- டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேட்டைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை கொலை செய்து ஆம்னி வேனில் உடலை கடத்திச் சென்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரிய வந்தது. ஏட்டு செந்தில்குமாரின் காதலியான கவிதாவுக்கும், கொலையுண்ட ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இந்த மோதலே கொலையில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து ஏட்டு செந்தில் குமாரையும் ஐசக் உள்பட 4 ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வநதனர். போலீஸ் பிடி இறுகியதால் ஏட்டு செந்தில்குமாரும், ரவுடி ஐசக்கும் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம், 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வருகிற 16-ந்தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ஏட்டு செந்தில் குமாரும், ரவுடி ஐசக்கும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். செங்கல்பட்டு கோர்ட்டில் வருகிற 16-ந்தேதி ஏட்டு செந்தில்குமாரும், ஐசக்கும் ஆஜர்படுத்தப்படும் போது படாளம் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு அளிக்க உள்ளனர்.
டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்கும் போது, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரையும் கொலை நடந்த வீடு, உடல் எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் ஐசக்கின் கூட்டாளிகளான எட்வின், மகி, கார்த்தி ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 3 ரேையும் பிடிக்க போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வினோத்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வினோத்குமார், அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் அவரது வீட்டிற்கு சென்று இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இந்த விவகாரம் அரசல், புரசலாக அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர், தனது மனைவியை கண்டித்தார். மேலும் அந்த வாலிபருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறி அறிவுரைகளை வழங்கினார்.
ஆனால் அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தங்களை பிரித்து விடுவார்கள் என்று நினைத்த அந்த பெண் சம்பவத்தன்று வினோத்குமாரை வீட்டிற்கு அழைத்தார்.
அப்போது இளம்பெண், நம்மை இவர்கள் சேர்ந்து வாழவிடமாட்டார்கள். நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி 2 பேரும் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியினரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார்.
அவரது கள்ளக்காதலிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதையடுத்து போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வைரவன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகன் பெரியகருப்பன் (வயது 20) தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
இவரும், வைரவன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் மனைவி முத்துச்செல்வியும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெரியகருப்பனும் தனசேகரன் மனைவியும் நெருங்கி பழகி வந்ததாகவும், அவர்களுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரியகருப்பனுடன் தனது மனைவி தனியாக பேசி கொண்டிருப்பதை தனசேகரன் பார்த்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் தனது நண்பர்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தனசேகரன் உள்ளிட்ட சிலர் பெரியகருப்பனை சந்தித்து அவருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகருப்பனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பெரியகருப்பனை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி பெரியகருப்பனின் தந்தை மணிகண்டன் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்