என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஓட்டப்பிடாரம் அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

    ஓட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்தவர் மயிலேறி (வயது40).

    இவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    அதேபகுதியை சேர்ந்தவர் மகராசி (வயது35). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    மயிலேறிக்கும், மகராசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த தகவல் இருவரது உறவினர்களுக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மகராசியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதல் காரணமாக மனைவியை கண்டித்த நிலையில் இந்த பிரச்சினை காரணமாகவே அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி மயிலேறி மற்றும் மகராசி திடீரென மாயமாகினர். இதை அறிந்த மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வெள்ளாரம் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மயிலேறி- மகராசி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது மயிலேறி- மகராசி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

    அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தில் மயிலேறி, மகராசி ஆகியோர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் , எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களே காரணம். நாங்களே எங்களது முடிவை தேடிக்கொள்கிறோம். எங்கள் சாவுக்கு யாரையும் விசாரணை செய்ய வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×