என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தாராபுரம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

    தாராபுரம் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி எருக்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47),தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டது.

    அதேப்பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி மாரியம்மாள்(40). இவர்களுக்கும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடராஜ் மரணமடைந்தார். இந்தநிலையில் மணிகண்டனுக்கும், மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த உறவினர்கள் 2 பேரையும் எச்சரித்துள்ளனர். இருப்பினும் 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர்.உறவினர்களும் தொடர்ந்து கண்டித்து வந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டனும், மாரியம்மாளும் மாயமாகினர். அவர்களை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் பொம்மநாயக்கன்பட்டி காற்றாலை பகுதியில் ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக நேற்றிரவு குண்டடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது மாயமான மணிகண்டன், மாரியம்மாள் என்பது தெரியவந்தது. அவர்கள் இறந்து கிடந்த இடம் அருகே மதுபாட்டில் மற்றும் சாணி பவுடர் கிடந்தது. கள்ளக்காதலை உறவினர்கள் கண்டித்ததன் காரணமாக 2பேரும் மதுவில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×