search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advocates"

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் வக்கீல் அசோக்ராஜ் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

    சாலை மறியல்

    இந்நிலையில் இந்த கொலையை கண்டித்தும், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுவ தாகவும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடை பெற்ற போராட் டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    மறியலில் துணைத் தலைவர் சீதா, வக்கீல்கள் மணிகண்டன், லெட்சு மணன் ரமேஷ், அருள்ராஜா, விஜயன், சுரேஷ், பால சுப்பிரமணியன், சிதம்பரம், மகேஷ், இசக்கிபாண்டி, அருள்பிரவின், சுதர்சன், மகாராஜன், முத்துராஜ், பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பி னர். போராட்டத்தால் பாளை- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • இலவசமாக சேவைபுரிய குற்றவியல் வக்கீல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
    • தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வசதியற்ற வா்களுக்கான குற்றவியல் வழக்குகளை நடத்த குற்றவியல் வழக்குரை ஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த அலுவலகத்தை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெசிந்தா மாா்ட்டின் திறந்து வைத்து பேசியதாவது:

    வசதி இல்லாதவா்கள் தங்களுடைய குற்றவியல் வழக்குகளைத் தொடா்புடைய நீதிமன்றத்தில் வழக்காட, எதிா் வழக்காட, பிணையில் எடுக்க ஆகியவற்றுக்கு இலவசமாக சேவை புரிய குற்றவியல் வழக்குரைஞா்கள் தோ்ந்தெடுக்கப்ப ட்டுள்ளனா். இவா்களை வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மாவட்ட, அனைத்து வட்ட நீதிமன்ற வளாகங்களிலும் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இம்மையத்தை அணுகி தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி இந்திராணி, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, மோட்டாா் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வடிவேல், சாா்பு நீதிபதியும், மையச் செயலருமான இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ஜோதி பணிபுரிந்தார்.
    • போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஜோதி. இவர் நேற்று முன்தினம் ஒரு வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த வக்கீல் பாபுவை தரக்குறைவாக பேசினாராம். இதனை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், இந்நிலையில் செஞ்சி டி.எஸ்.பி.அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இந்நிலையில் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் டி. ஐ ஜி. பகலவன் உத்தரவின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயிலில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ராஜு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன், வக்கீல்கள் குடந்தை ராஜன், சதாசிவம், ராஜ்குமார், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைகண்டித்து கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் வக்கீல்கள் சௌந்தர்ராஜன், மதியழகன், சின்னமணி, சிகாமணி, பாஸ்கர், பிரபு, செபாஸ்டின், ஆனந்தராஜ், காஜாமைதீன், சுபாஷ் சந்திர போஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் பழனியப்பன், வல்லம் பேரூர் தலைவர் முகமது பாட்ஷா, கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார், மக்கள் நல பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உறந்தை மனோகரன், மானம்புசாவடி பிரபாகர், மாவட்ட சேவா தளம் திருஞானம், கோமதி, தொழிற்சங்கம் நிர்வாகி சந்திரசேகர், கண்ணன், இனாத்துகன்பட்டி ராமலிங்கம், நிர்வாகி மகேந்திரன், விசிறி சாமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    • சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்க ப்பட்டுள்ளனர்.

    பெரம்பலூரில் வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் சங்க வளர்ச்சி, பணிகள், உறுப்பினர் சேர்க்கை, வரவு,செலவு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக மீண்டும் வள்ளுன்நம்பி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய செயலாளராக சேகர், இணை செயலாளராக சுகுமார், பொருளாளராக சிவராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதியதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட பொறு ப்பாளர்களுக்கு வக்கீல்கள் பொன்னடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நீதிமன்றத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். விருத்தாசலம் சேலம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீதிமன்றத்திற்கு சரிவர குடிநீர் விநியோகம் வழங்கவில்லை.

    இதன் பேரில் பொதுப்பணி துறையிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும் குப்பைகளை சரிவர அகற்றாமல் குப்பை மேடாக காட்சி அளிக்கும் நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு பொதுப்பணி துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் நீதிமன்ற வளாகத்திலேயே இருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேடு பிரச்சினையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது விரு த்தாசலம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • கொலை முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில், செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, திருப்பூர் மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜமீலாபானு மற்றும் அவரது மகள் ஆகியோரை வழக்கறிஞர் அலுவலகத்தில் நுழைந்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும் ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகளில் இருந்து விலகி இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த (பார் அசோசியேசன்) வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

    • தமிழகம்-புதுவை வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் வக்கீல் சாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி–களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு–பட்டனர்.
    • போராட்டத்தில் புதுவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தமிழகம்-புதுவை வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் வக்கீல் சாமிநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், குற்றவாளி–களை கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடு–பட்டனர்.

    மேலும் வாணியம்பாடி வக்கீல்கள் சங்க தலைவர் தேவகுமாரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். வக்கீல்க ளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் புதுவை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது.

    • பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு "பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு" என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்புரை வழங்கினார்.

    இதில் சட்ட உதவி மைய வக்கீல் தி பிரகாஷ் பேசியதாவது:, சிறு விளையாட்டாக ஆரம்பிக்கும் கேலி கிண்டல்கள் அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவதிலிருந்து ராகிங் என்பது உருவாகிறது. அதன் உச்ச கட்டம் தான் நாவரசு கொலை வழக்கு .எனவே எந்த ஒரு செயலும் அடுத்தவர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று கூறினார். அந்தோணி ஷர்லின், பெண்களுக்கு அவசியமான மற்றும் பாதுகாப்பான சட்டங்கள் பற்றி விளக்கினார். ராஜசேகரன், சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்து தற்காத்து கொள்வது பற்றியும் விளக்கினார். தலைமையுரை ஏற்று பேசிய திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மேகலா மைதிலி , எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு அது நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பத்தாரையும் எண்ணி பார்த்து செயலாற்றிட வேண்டும். நம்மை மீறி எந்த ஒரு கெடுதலான விஷயமும் நடக்காதவாறு விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் மாணவி ஷிபானா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பேராசிரியர் ராதாமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 70க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • போலீசாரை கண்டித்து வக்கீல்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் ஜி.என். பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார். இவரது தவணைத் தொகை முழுவதும் செலுத்தப்பட்ட நிலையில் இந்த வாகனத்திற்கான (தடையின்மை சான்றிதழ்)வழங்கவில்லை.

    இதற்கு இரு சக்கரம் வாகனம் வாங்கியதில் நிலுவைத் தொகை பாக்கி இருப்பதாக கூறி தொடர்ந்து நிதி நிறுவனத்தில் இருந்து வழக்கறிஞருக்கு போன் வந்துள்ளது. இந்த நிலையில் இவர்தான் தனது தவணைத் தொகை முழுவதும் செலுத்தி விட்டேன் என்று கூறியுள்ளார்.

    உடனடியாக எந்தவி தமான முன் அறிவிப்பும் இன்றி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிவகாசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்திற்குள் இருந்த இருசக்கர வாகனத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றுள்ளனர்.

    பணி முடிந்து வெளியே வந்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் மீது போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மறுநாள் காலை நிதி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நிதி நிறுவன ஊழியர்கள்தான் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    மீண்டும் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு திருத்தங்கல் போலீசார் வழக்குப் பதியாமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நீதிமன்றத்திற்குள் சென்று யாருடைய அனுமதியும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழிப்பு செய்த திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்தும் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வழக்கறிஞர்கள் அனைவரும் இன்று காலை நீதிமன்றத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி,திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    நாக்பூரில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதியை அரசு வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #JudgeAssaust
    நாக்பூர்:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று மூத்த சிவில் நீதிபதி கே.ஆர்.தேஷ்பாண்டே ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்தபோது, அவரை அரசுத் தரப்பு உதவி வழக்கறிஞர் டிஎம் பராதே தாக்கியதாக தெரிகிறது.

    இதுபற்றி சதார் காவல் நிலையத்தில் நீதிபதி தேஷ்பாண்டே புகார் அளித்துள்ளார். வழக்கின் தீர்ப்பு தொடர்பாக நீதிபதியுடன் வழக்கறிஞர் பராதே வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. ஆனால், இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மாவட்ட அரசு பிளீடர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு (குற்றம்சாட்டப்பட்டவர்) ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை சரியான முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர்களிடம் இருந்து இதுபோன்ற செய்கைகளை சமூகம் எதிர்பார்க்கவில்லை என்றும் பிளீடர் கூறியுள்ளார். #JudgeAssaust
    தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் பெரம்பலூர் கர்ணம் சுப்பிரமணியம் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே. வேல் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜாமணி, பொருளாளர் காமராஜ் மூத்த வழக்கறிஞர்கள் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உயர் கல்வி ஆணைய வரைவு சட்டத்தில் வழக்கறிஞர்கள் சட்டத்தை மாற்றம் செய்வதை திரும்ப பெற்றுக்கொள்ள வலியுறுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படும் போது பார் கவுன்சில் தலைவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்,

    வழக்கறிஞர்கள் நலனுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், கேரள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வக்கீல்கள் நலனுக்காக ரூ.25 லட்சம் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    முன்னதாக பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வள்ளுவர் நம்பி வரவேற்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் எழிலரசன் நன்றி கூறினார்.

    தொடர்ந்து வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வழக்கறிஞர்கள் சங்கங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் பட்சத்தில் அந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    இந்த தீர்ப்பு அனைத்து வழக்கறிஞர்கள் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த தீர்ப்பினை மத்திய அரசு சட்டமாக்க முயற்சி செய்து வருகிறது. எனவே மத்திய அரசை கண்டித்தும் சட்டமாக்க முயற்சி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடகோரியும் இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வருகிற 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×