search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்

    • தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்ட காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பில் தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயிலில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் ராஜு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன், வக்கீல்கள் குடந்தை ராஜன், சதாசிவம், ராஜ்குமார், ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைகண்டித்து கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. இதில் வக்கீல்கள் சௌந்தர்ராஜன், மதியழகன், சின்னமணி, சிகாமணி, பாஸ்கர், பிரபு, செபாஸ்டின், ஆனந்தராஜ், காஜாமைதீன், சுபாஷ் சந்திர போஸ், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் பழனியப்பன், வல்லம் பேரூர் தலைவர் முகமது பாட்ஷா, கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார், மக்கள் நல பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், உறந்தை மனோகரன், மானம்புசாவடி பிரபாகர், மாவட்ட சேவா தளம் திருஞானம், கோமதி, தொழிற்சங்கம் நிர்வாகி சந்திரசேகர், கண்ணன், இனாத்துகன்பட்டி ராமலிங்கம், நிர்வாகி மகேந்திரன், விசிறி சாமி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×