search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் இரட்டைக்கொலையை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை படத்தில் காணலாம்.

    ஆலங்குளம் இரட்டைக்கொலையை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் சாலை மறியல்

    • வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்தவர் வக்கீல் அசோக்ராஜ் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

    சாலை மறியல்

    இந்நிலையில் இந்த கொலையை கண்டித்தும், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுவ தாகவும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நெல்லை மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் வக்கீல்கள் இன்று சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடை பெற்ற போராட் டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    மறியலில் துணைத் தலைவர் சீதா, வக்கீல்கள் மணிகண்டன், லெட்சு மணன் ரமேஷ், அருள்ராஜா, விஜயன், சுரேஷ், பால சுப்பிரமணியன், சிதம்பரம், மகேஷ், இசக்கிபாண்டி, அருள்பிரவின், சுதர்சன், மகாராஜன், முத்துராஜ், பிரசன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அவர்கள் வக்கீல்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்தும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷம் எழுப்பி னர். போராட்டத்தால் பாளை- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் ேபாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×