search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "action"

    • கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படும் அபாயத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவாடனை

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினதில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகள் அதிக அளவில் செல்வது வழக்கம்.

    தேவிப்பட்டினத்தில் இருந்து எஸ்.பி. பட்டினம் வரை உள்ள இருபுறமும் சாலையில் காட்டு கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் போக்கு வரத்துக்கு இடையூராக உள்ளது.

    இதனால் வாகன ஓட்டி கள் மிகுந்த அச்சத்தில் சாலையில் பயணிக் வேண்டி உள்ளது. மேலும் சாலையின் வளைவுகளில் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதேபோல் இரண்டு சக்கர வாகனத்தில் செல் வோர் சாலையில் செல்லும் போது எதிரில் கனரக வாகனம் வந்தால் ஒதுங்கக் குட முடியாத சூழ்நிலை ஏற் படுகிறது. இதனால் வாகன யோட்டிகளுக்கு காயம் மற்றும் விபத்தும் ஏற்படுகிறது.

    இதனை நெடுஞ்சாலை துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் அலட்சிய மாக உள்ளனர்.

    இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட தொடங்கி உள்ளன.
    • பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறை , செம்ப னார்கோயில், சீர்காழி, குத்தாலம், மங்க நல்லூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் 300க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.

    இந்நிலையில் பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, கடை உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் கலெக்டர் மகா பாரதி தலைமையில் மயிலா டுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி.மீனா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தொட ர்ந்து பேசிய மாவட்ட கலெக்டர் மகா பாரதி பட்டாசு கடைகளில்உரிய பாதுகாப்பு நடவடி க்கை களை மேற்கொள்ள வேண்டும் எனஅறிவுறு த்தினர்.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பட்டாசு கடை உரிமை யாளர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் மயிலாடுதுறை தாசில்தார் சபிதா, தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கோபுரஜபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒன்றியத்தில் செயல்படுத்த ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் கோபுரஜபுரம் ஊராட்சியில் மகளிர் குழு கட்டிடம்,சமுதாய கூடம், அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும், தரம் உயர்த்தப்பட்ட திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும்.

    54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலில் தனி சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.

    திருமருகலில் தேசிய மையமாக மாற்ற வங்கி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக் கொண்ட முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், இளஞ்செழியன், ஆரூர் மணிவண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.

    • தென் மாவட்டங்களுக்கு மோசமான நிலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.

    மதுரை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு புறம் தொடங்கியிருக்க வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்க ளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்திருந்த நிலையில் இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

    மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை ஒட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் பட்டியலில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரைக்கு பல்வேறு ஊர்க ளில் இருந்தும், அண்டை மாவட்டங்களை சேர்ந்த வர்களும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கிறார்கள்.

    இதற்காக அவர்கள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால் அரசு பேருந்துகளின் நிலைக்கு பயந்து தற்போது பயணத்தை ரத்து செய்யும் அளவுக்கு அச்சமடைந்துள்ளனர். காரணம் சற்றும் பராமரிப்பில்லாமல் அசாதாரண பயணம் மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ள அரசு பஸ்களின் நிலை தான் என்று புகார் எழந்துள்ளது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு பேருந்துகள் முழுமையாக பராமரிக்கப்பட்டு எந்த வித சிரமமும் இன்றி வெளியூர்களுக்கு பயணிக்கலாம் என்ன அரசு உத்தரவாதம் அளித்திருந்த நிலையில் தற்போது இயக்கப்படும் பேருந்துகள் அனைத்துமே துளியும் பராமரிப்பு இல்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மேற்கூரை பெயர்ந்தும், பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாமலும் பல பேருந்துகள் உள்ளதால் மழைக்காலங்களில் அதில் பயணம் செய்பவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கி ணைந்த பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தென்காசி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. வழி நெடுகிலும் லேசான சாரல் மழை பெய்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து மிக கனமழை பெய்தது. இதனால் பஸ்சின் மேற்கூரையிலிருந்து குழாயை திறந்தது போல் தண்ணீர் கொட்டிக் கொண்டே வந்தது. மேலும் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாததால் பேருந்துக்குள் மழை பெய்தது போன்று தண்ணீர் பாய்ந்தது.

    இதன் காரணமாக இருக்கைகள் இருந்தும் பயணிகள் அமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த குடையை விரித்தும் பஸ்சில் பயணம் செய்த னர். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து புத்தாடை வாங்கிவிட்டு திரும்பிச் சென்ற பயணிகள் பேருந்துக்குள் கொட்டிய மழை நீரால் புத்தாடை நனைந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.

    சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை-தென்காசி இடையே இயக்கப்படும் அரசு பேருந்து இவ்வளவு மோசமான நிலையில் இருந்தால் பயணிகள் எப்படி பயணம் செய்வார்கள் என்பதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக் கொண்டனர்.

    இது பற்றி மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம் கேட்டபோது, இந்த பேருந்து இன்று இரவுடன் சேவையை நிறுத்திக் கொள்ளும் என்றும், பயணிகள் மாற்று பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அத்துடன் இதுபோன்ற பராமரிப்பு இல்லாத அரசு பஸ்கள் உடனடியாக நிறுத்தப்படும் என்றும் பணிமனை மேலாளர் தெரிவித்தார்.

    • சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் அகரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டையில் வானமாதேவி செல்லும் சாலை தொடர்ந்து பெய்து வரும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் அவ்வழியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ம் மோட்டார் சைக்கிளில் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், சாலையில் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது.
    • போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது என மின்வாரியம் தொடர்புடைய அனைத்து பணிகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், மின் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் சில போலி எஸ்.எம்.எஸ்.,களும் உலா வருகின்றன.

    அதன்படி, உங்கள் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக மின் கட்டணம் செலுத்துங்கள். தவறினால், உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.உடனடியாக இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்ற வாசகம் தாங்கி, ஒரு மொபைல் எண்ணுடன் கூடிய எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் உள்ளது. இது மின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இதற்கும் மேலாக இன்னும் சில எஸ்.எம்.எஸ்.,களில், ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, மின் கட்டண பாக்கியை அந்த எண்ணுக்கு செலுத்த வேண்டும் எனவும், எஸ்.எம்.எஸ்., வருகிறது.

    இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. அதுபோன்ற மோசடி தான், இதுபோன்றஎஸ்.எம்.எஸ்.,கள். இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மின் கட்டணம் செலுத்தியதற்கான தகவல், செலுத்த வேண்டிய தகவல் குறித்த விவரங்கள் மட்டுமே மின்வாரியத்தினர் சார்பில் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது என்றனர்.

    நுகர்வோர் சிலர்கூறுகையில்,போலி எஸ்.எம்.எஸ்.,களை அடையாளம் காண்பது, கடினமான காரியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அதில் வரும் லிங்க் ஆகியவற்றை தொடும் போதே, நமது வங்கிக்கணக்கு, இ-மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், மர்ம நபர்களால் சேகரிக்கப்பட்டு, பண மோசடி நடக்கிறது என போலீசார் எச்சரிக்கின்றனர். எனவே போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • புதிதாக பஸ் நிலையம் அமைப்பதற்கு விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உறுதிமொழி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மேலாளர் சீதாலட்சுமி, சுகாதாரத்துறை ஆய்வாளர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

    அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்று வரும் 128 சாலைகள் பணிகள், 110 சாலை சேவை பணிகள் முடிந்துள்ளது. மேலும், ரூ.7 கோடியில் பஸ் நிலையம் புதிதாக அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

    • 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம், சாலை பணி போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    • ரூ.60 லட்சம் மதிப்பில் 150 புதிய வாக்கி டாக்கிகள் வாங்க ஒப்புதல்

    கோவை.

    கோவை மாநகராட்சியில் இன்று மாமன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை பணி, சாலை பணி மேற்கொள்ளுதல் உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட 33-வது வார்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியரான மாணிக்கம் என்பவர், அலுவலகத்தில் இருந்த முதல்-அமைச்சரின் போட்டோவை அங்கிருந்து அண்மையில் அகற்றியதாக தெரிகிறது.

    இந்த விவகாரம் இன்று நடந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களால் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய கவுன்சிலர்கள் முதல்-அமைச்சரின் போட்டோவை அகற்றிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு பதில் அளித்து மேயர் கல்பனா பேசும்போது, இது தொடர்பாக மாநகராட்சி ஊழியரிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் வந்தவுடன் அவர் மீது எந்த மாதிரி நடவடிக்கை வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். ஆனால் கவுன்சிலர்கள், முதல்-அமைச்சர் போட்டோவை அகற்றியவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினர்.

    இதனை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பாலான கவுன்சிலர்கள், முதல்-அமைச்சரின் போட்டோவை அகற்றிய மாநகராட்சி ஊழியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக விரிவாக ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, பேசிய கவுன்சிலர்கள், மாநகராட்சியில் உள்ள மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள 300க்கும் மேற்பட்டோர் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த வாக்கி டாக்கிகள் அவ்வப்போது பழுதாகி வருகிறது.

    எனவே இதை மாற்றி தர கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த கூட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் 150 புதிய வாக்கி டாக்கிகள் வாங்கி கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

    கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம், சாலை பணி போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு 3 கூட்டத்தில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதால் இன்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் செல்வசுரபி, சிவக்குமார், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும்.
    • உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    முத்தூர்:

    முத்தூர் பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் பி.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் விதை விற்பனை நிலையங்கள் தங்கள் நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விதைகளின் விலை பட்டியல் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும்.

    உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடை பெற்ற விவாதம் வருமாறு:-

    ருக்குமணி: ராஜகம்பீரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் களில் கழிவுகள் அகற்றப்ப டாமல் உள்ளது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின் றன. கொசுமருந்து அடிக்கி றார்களா என்று தெரியவில்லை. சுகாதாரத்துறை மூலம் கொசுமருந்து அடிப்ப வர்கள் என்னிடம் தெரிவித்தால் எனது வார்டு முழுவ தும் மருந்து அடிக்க வேண் டிய இடங்களை தெரிவிக்கலாம். குடிநீர் பிரச்சனையை யும் தீர்க்க வேண்டும்.

    சோமசுந்தரம்: எனது வார்டுக்கு உட்பட்ட ஆவாரங்காடு கிராமத்தில் நெல்களம் அமைத்துத்தர வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மலைச்சாமி: சூரக்குளம் ஊராட் சியில் குடிநீர் மேல் நிலைத் தொட்டி சேதமடைந் துள்ளது. இங்கு புதிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்துத்தர வேண்டும்.

    முருகேசன்: கீழப்பசலை அரசுப் பள்ளியில் சுற்றுச்சு வர் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றன. எனவே பள்ளி யைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும்.

    கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர் கள் கொசுக்களை கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய ஆணையர் லூயிஸ், கழிவுநீர் கால்வாய்களில் தேங்கிய கழிவுகளை வெளி யேற்றவும், கிராமங்கள் முழுவதும் கொசு மருந்து அடிக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்படும். மேலும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் நேரடியாக செயல்ப டுத்தக்கூடிய பணிகள் செய்து தரப்படும் என்றார்.

    இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

    • இதனால் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் ஆகி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் ரோட்டில் உள்ள ஸ்ரீராம் நகர், மஞ்சு நகர் போன்ற பகுதிகளில் பன்றிகளுக்கான உணவுகளை ஓட்டலில் இருந்து கொண்டு வந்து தினந்தோறும் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் பன்றிகளின் நடமாட்டம் அதிகம் ஆகி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.
    • கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இரண்டு நாட்கள் லேசான முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் சட்டநாதபுரம் கொள்ளிடம் திருமுல்லைவாசல் திருவெண்காடு பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சீர்காழியில் 2.8 சென்டிமீட்டர் மழையும் கொள்ளிடத்தில் 2.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாகவே இயக்கி வருகின்றனர்.

    மேலும் வைத்தீஸ்வரன் கோவில் நகர் பகுதிகளில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று ஏற்படும் எனவும் முறையான கழிவுநீர் வடிகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×