search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aavin milk"

    • ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
    • தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 73 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பால் உற்பத்திக்கு முதுகெலும்பாக பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவையானது அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் பால் உற்பத்தி குறையும் சூழல் இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை இருக்கிறது. ஆகவே பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.

    ஆகவே தேவைகளை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆவின் நிறுவனத்தைப் பற்றி தெரியாமல் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் அதன் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆவின் நிறுவனம் என்பது, இரண்டு நோக்கங்களை கொண்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டியதும், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான பாலை வழங்குவதும் தான் அந்த இரண்டு நோக்கங்கள்.

    இந்த ஆவின் நிறுவனத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களாகவும், 35 ஆயிரம் பணியாளர்களும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் உள்ள ஒரு மிகப்பெரிய வலுவான அமைப்பாக உள்ளது. இந்த ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

    அதன்படி பால் உற்பத்தியை பெருக்குவதற்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.55 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    ஆவின் நிறுவனத்தை பொருத்தமட்டில் பால் உற்பத்தி அதிகமானாலும், குறைந்தாலும் ஒரு நிலையான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை. தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதனை 70 லட்சம் உயர்த்தி கையாளும் திறனாக மேம்படுத்த பணி தொடங்கியுள்ளது.

    இந்த ஆவின் நிறுவனத்தை மெருகூட்ட பல தெளிவான, தீர்க்கமான தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிச்சயமாக வருங்காலத்தில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுவிடும். அதேபோன்று விவசாயிகளும் உற்பத்தி செலவீனம் அதிகரித்து விட்டதால் பாலின் கொள் முதல் விலையை உயர்த்த கேட்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க இந்த அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கேட்பது நியாயமானது. தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். தனியார் நிறுவனத்தை கண்டு ஒரு அரசாங்கம் அச்சப்படாது. இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    • முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது.

    மதுரை:

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்வதை இன்று ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து தும்பைபட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 50 பேருக்கு கறவை மாடு வாங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 25 லட்சம் கடனுதவியும், உத்தம நாயக்கனூரில் உள்ள உறுப்பினர்கள் 25 பேருக்கு கறவை மாடு வாங்க கடனாக ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரமும், கோட்ட நத்தம்பட்டி பகுதியில் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 26 பேருக்கு ரூ.13 லட்சமும் வழங்கினார்.

    வீரபெருமாள்பட்டி சங்கத்திற்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், தாட்கோ நிதி திட்டத்தில் 3 பேருக்கு ரூ. 60 ஆயிரமும், பராமரிப்பு கடன் உதவியாக 31 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் 135 நபர்களுக்கு ரூ.57 லட்சத்து 94 ஆயிரத்தையும் அமைச்சர் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.

    ஆவின் ஐஸ்கிரீமுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. 10 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையும் வரும் காலங்களில் அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.

    பால் உற்பத்தி விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளின் பராமரிப்பு செலவு, அந்த மாடுகளுக்கு நோய் வந்தால் அதனை தடுக்க நோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டி இருக்கிறோம்.

    முன்பு இருந்ததை விட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகமாக தான் இருக்கிறது. ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே அமுல் நிறுவனம் வருவதினால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, ஆவின் தலைமை இயக்குனர் வினித், மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அக்ரி.கணேசன், செல்லத்துரை, ஆனந்த், புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பிரச்சினையில் தொடர்புடைய 2 வேன்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
    • சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஆவின் வளாகத்தில் பால் ஏற்றிச்செல்ல ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆவணங்கள் இல்லாத ஒரு வேனை அதன் உரிமையாளர் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் சேர்ந்து ஆவின் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து எடுத்துச்சென்றனர்.

    இந்த பிரச்சினையில் தொடர்புடைய 2 வேன்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும் ஆவின் செயல் அலுவலர்கள் 6 பேர் மீது புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து புகாருக்கு உள்ளான 6 செயல் அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • அம்பத்தூர் பால் பண்ணையில் இன்று மீண்டும் ஆவின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • ஆவின் பால் வாங்கி பழக்கப்பட்ட நாங்கள் தனியார் பால் வாங்க வேண்டியுள்ளது.

    சென்னை:

    வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை போன்ற காரணங்களால் சமீபகாலமாக ஆவின் பால் சப்ளை பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதே பிரச்சினையினால் அம்பத்தூர் பால் பண்ணையில் இன்று மீண்டும் ஆவின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் 1 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி தடைபட்டது. அதிகாலை 4 மணிக்கு வர வேண்டிய பால் காலை 8.30 மணி வரை வரவில்லை. இதையொட்டி அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், மதுரவாயல், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பால் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆவின் பால் கிடைக்காததால் தனியார் பாலை பெரும்பாலான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

    பால் சப்ளை பாதிப்பு குறித்து சூளைமேடு மேத்தா நகரை சேர்ந்த பால் முகவர் சதீஷ் கூறியதாவது:-

    நான் 25 ஆண்டுகளாக பால் விநியோகம் செய்து வருகிறேன். அம்பத்தூர் பால் பண்ணையில் இன்று பால் சப்ளை பாதிக்கப்பட்டு காலை வரை பால் ஏற்றப்படாமல் வாகனங்கள் பண்ணை வளாகத்தில் காத்திருக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் இந்த பிரச்சினையால் முகவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். கால தாமதமாக பால் வருவதால் அடுத்த நாள் விநியோகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் பால் கெட்டும் போகிறது.

    பால் வரத்து குறைவு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு அரசு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

    கலைசெல்வி என்ற பெண் கூறும்போது, நாங்கள் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். வீட்டில் அனைவரும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள். அதிகாலை நேரத்தில் ஆவின் பால் கிடைத்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும். கால தாமதமாக வருவதால் எங்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு உள்ளது.

    ஆவின் பால் வாங்கி பழக்கப்பட்ட நாங்கள் தனியார் பால் வாங்க வேண்டியுள்ளது. எனவே ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு உடனே எடுக்க வேண்டும் என்றார்.

    • நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவித்தது குறித்து ஆவின் வளாக பாதுகாப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதில் ஒரே பதிவு எண் கொண்டு வாகனம் இயக்கியது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த 2 வாகனங்களின் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு வாகனங்களில் பால் வினியோகம் செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவித்தது குறித்து ஆவின் வளாக பாதுகாப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.
    • ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் ஆவின் பால் அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு அவை பாக்கெட்டுகளாக மாற்றி முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவு முதல் பால்பாக்கெட்டுகள் வாகனங்களில் முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பால்பாக்கெட்டுகள் எடுத்துச்செல்ல நேற்று முன்தினம் ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் ஆவின் அலுவலகத்துக்கு வந்திருந்தன.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆவின் பொது மேலாளர் (பொறுப்பு) சுந்தரவடிவேலு, 2 வாகனங்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு வாகனம் போலியானது என தெரிய வந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த வாகனம் மூலம் தினமும் சுமார் 2,300 லிட்டர் கடத்தப்பட்டு பல லட்சம் லிட்டர் பால் திருட்டு நடந்துள்ளது. 2 வேன்களை ஆவின் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் ஆவின் நிறுவனத்துக்கு வந்த மர்மநபர்கள் அதிகாரியை மிரட்டி விட்டு, ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆவணங்கள் இல்லாத வேனை எடுத்து சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் (விற்பனை) நிர்வாகம் சார்பில் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஒப்பந்ததாரர் சிவக்குமார் உள்பட 2 பேர் மீது சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் ஆவினில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை, கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை செய்த பின்பே வெளியே அனுப்பப்பட்டது.

    பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம் மற்றும் சரியான நபரிடம் தான் சென்று சேருகிறதா? என அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலசங்கத்தின், நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறுகையில்:-

    ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கடத்தல் நடைபெற்று இருக்காது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும்.
    • யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையிலிருந்து, ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 2500 லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பால் திருட்டு நடைபெற்று வந்திருக்கிறது.

    இந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் லிட்டர் பால் திருடப்பட்டிருக்கிறது. அதன் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஆவின் பால் திருட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    ஒரே பதிவு எண் கொண்ட இரு ஊர்திகளை பயன்படுத்தி ஆவின் பால் திருடப்பட்டதால், ஐயம் எழவில்லை என்றும், அதனால் தான் இந்தத் திருட்டை நீண்டகாலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் ஆவின் உயரதிகாரிகள் சார்பில் கூறப்படுவதை ஏற்கமுடியாது. ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்பட்ட பாலின் அளவும், விற்பனை செய்யப்பட்ட பாலின் அளவும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் எதிலுமே பால் திருட்டு கண்டு பிடிக்கப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை.

    வேலூர் சத்துவாச்சாரி பால் பண்ணையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முறைகேடுகள் நடப்பதாக சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மேலாளர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரிகளாக காவல்துறை கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் முதல் காவல்துறை தலைவர் நிலையிலான அதிகாரிகள் வரை இருந்திருக்கின்றனர். அவர்களை மீறி எந்த முறைகேடும் நடந்திருக்க முடியாது.

    ஆனால், பல ஆண்டுகளாக வேலூர் ஆவினில் பால் திருட்டு நடைபெற்றிருப்பதால் அதற்கு உயர்பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு இருந்திருக்கலாம் என்று ஐயங்கள் எழுப்பப்படுவதை ஒதுக்கித்தள்ள முடியவில்லை.

    ஆவின் நிறுவனம் மக்களுடன் ஒருங்கிணைந்த நிறுவனம் ஆகும். ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வலுப்படுத்தப்பட்டு அசைக்க முடியாத பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். ஆனால், சுயநலமும், பேராசையும் கொண்டவர்களால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆவின் நிறுவனம் சுரண்டப்பட்டே வந்திருக்கிறது. இதற்கு முன் ஆவின் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது; இப்போது பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு பல்வேறு தரங்களாக பிரிக்கப்பட்டு ஆவின் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

    பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த கோரிக்கை தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் பால் உற்பத்தியாளர்கள் பலர் ஆவினுக்கு வழங்கி வந்த பாலை கூடுதல் விலைக்கு தனியார் பால் பண்ணைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஆவினுக்கு பால் வரத்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஆவின் பால் பண்ணைகளில் பால் வினியோகத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:-

    தற்போது ஆவின் நிறுவனத்தின் மூலம் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 14½ லட்சம் லிட்டர் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், மீதமுள்ள 14½ லட்சம் லிட்டர் பால் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் மூலம் 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் பால் கொள்முதல் 43 லட்சம் லிட்டராக இருந்தது.

    பால் கொள்முதல் விலை குறைவு, தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் பெறுவது, ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு பணம் வினியோகம் செய்வதில் தாமதம், பாலில் உள்ள கொழுப்பு சத்தை முறையாக ஆய்வு செய்யாமல் குறைவான தொகையை வழங்குவது போன்ற பல்வேறு காரணங்களால்தான் ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து வருகிறது.

    தற்போதைய ஒரு நாள் பால் தேவை 29 லட்சம் லிட்டர் ஆகும். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தால்தான் 29 லட்சம் லிட்டர் பால் தாமதம் இல்லாமல் வினியோகிக்க முடியும்.

    ஆவினில் தற்போதுள்ள கட்டமைப்பின்படி ஒரு நாளில் கொள்முதல் செய்யும் 29 லட்சம் லிட்டர் பாலை அன்றைய தினமே பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து வினியோகிக்கும்போது தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஒரு நாளைக்கு 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்போது ஒரு நாள் தேவையான 29 லட்சம் லிட்டர் பால் தவிர்த்து மீதமுள்ள பாலை பதப்படுத்தி மறுநாள் வினியோகத்திற்கு தயார் நிலையில் வைத்திருக்க முடியும். இவ்வாறு செய்தால் மட்டுமே பால் வினியோகத்தில் தாமதத்தை தவிர்க்க முடியும்.

    தற்போது காலை 7.30 மணிக்குதான் ஆவினில் இருந்து பால் வினியோகிக்கப்படுகிறது. சில நேரங்களில் 9.30 மணி வரை ஆகி விடுகிறது. இதன்பின்பு பால் முகவர்கள் இந்த பாலை பெற்று சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகிக்கும் போது மிகவும் தாமதமாகி விடுகிறது.

    பால் தாமதமாக வினியோகிக்கும்போது, பால் பாக்கெட்டுகளை கொண்டு வரும் டப்பாக்களை திரும்ப ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர ஆவின் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையாக பணிக்கு வராத காரணத்தினாலும் பால் பாக்கெட்டுகளை வாகனத்தில் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    என்னென்ன காரணங்களுக்காக பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது? என்பதை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, 'ஆவின் பால் தட்டுப்பாடு என எதுவும் இல்லை. சில இடங்களில் ஆவின் பால் குறிப்பிட்ட நேரத்தில் வினியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் வந்தன. அதுகுறித்து விசாரணை நடத்தி ஆவின் பால் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.

    • பொன்னேரி பகுதிக்கு மட்டும் 2,500 லிட்டருக்கும் மேல் பால் சப்ளை செய்யப்படுகிறது.
    • கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின்பால் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

    பொன்னேரி:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் இருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு வேன்களில் கொண்டு வரப்படும் ஆவின் பால் ஏஜெண்டுகளுக்கு சப்ளை செய்யப்பட்டு அங்கிருந்து வியாபாரிகளுக்கு வினியோகிப்பது வழக்கம்.

    இதில் பொன்னேரி பகுதிக்கு மட்டும் 2,500 லிட்டருக்கும் மேல் பால் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு ஆவின்பால் காலதாமதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இன்றுகாலை 9 மணி வரை ஆவின் பால் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் நீண்டநேரம் காத்திருந்தனர். ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் தனியார் நிறுவன பால் பாக்கெட்களை வாங்கி சென்றனர்.

    இது குறித்து ஆவின் ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, ஆவின் பால் பாக்கெட்டுகள் வைத்துக் கொண்டு செல்லப்படும் டப்புகள் அதிகமாக உடைந்து காணப்படுகிறது. இதனால் குறைவாக டப்புகள் உள்ளன. அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று வரும் அந்த டப்புகளை மீண்டும் பயன்படுத்தி எடுத்து செல்வதால் ஆவின்பால் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. புதிய டப்புகள் வருகிற திங்கட்கிழமை வருகிறது. அதுவரை இந்த காலதாமதம் இருக்கும் என்றார்.

    • ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
    • பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

    ஆவின் நிறுவன சிக்கலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50 சதவீத அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஆவின் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த ஆண்டு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி நான் ஏற்கனவே அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அறிவித்து விட்டேன்.

    தற்போது 45 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் உள்ளது. அதனை இந்த ஆண்டு 75 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதற்காக உலகதரம் வாய்ந்த எந்திரங்களை பயன்படுத்த உள்ளோம்.

    ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை. தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    பள்ளிகூடங்கள் மட்டுமின்றி தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் மல்யுத்த வீராங்கனையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் நியாயமான முறையில் போராடினார்கள். அவர்கள் மீது பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    • பால் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் தாமதமாக கிடைத்ததால் கடைகளுக்கு குறித்த நேரத்தில் வினியோகம் செய்ய முடியவில்லை.
    • மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் ஒரு சில பகுதிகளில் ஆவின் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து பாதிக்கப்பட்டதால் 2-வது நாளாக பால் பாக்கெட் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை 6 மணி வரை அம்பத்தூர் பால் பண்ணையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் ஏற்றப்படாததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் பால் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் தாமதமாக கிடைத்ததால் கடைகளுக்கு குறித்த நேரத்தில் வினியோகம் செய்ய முடியவில்லை.

    இதன் காரணமாக மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் பால் அடுக்கி கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் டப்புகள் பற்றாக்குறை காரணமாக அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் பால் பண்ணையில் இருந்து நேற்று சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு பால் வரத்து குறைந்தது என்று கூறப்படுகிறது.

    ×