search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mano Thangaraj"

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி
    • காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? இல்லை, கல்லறைக்குள் சென்று விட்டதா?

     தேர்தல் பிரச்சாரங்களில்:

    - காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து "இது முஸ்லிம் லீக் தேர்தல் அறிக்கை போல் உள்ளது" எனக் கூறினார் மோடி.

    - காஷ்மீரில் தாவர உணவு சாப்பிடுகின்ற மக்கள் மத்தியில் பேசும்போது மாமிச உணவு சாப்பிடுபவர்களை பற்றி கொச்சையாக விமர்சித்தார் மோடி.

    - நேற்று ராஜஸ்தானில் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி கூட மிஞ்சாது, உங்கள் சொத்துக்களையும், பொருட்கள் அனைத்தையும் இஸ்லாமியர்களுக்கு பங்கு போட்டு கொடுத்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார் மோடி.

    இதிலிருந்து மோடியின் பேச்சில் தோல்வி பயமும், விரக்தியும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் ஓட்டுக்காக மக்களை பிரிக்கும் முயற்சியாக இப்படி மத வெறுப்புடன் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது
    • கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன #AprilFool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

    உலக முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பலரும் பல ஒலிகளை சொல்லி மற்றவரை ஏமாற்றுவர். அவ்வகையில் இன்று உலக முட்டாள் தினம் கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஒரு நினைவூட்டல்: இன்று #AprilFool என்கின்றனர் பலர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மனிதர் தந்திரமாகச் சொன்ன #AprilFool பொய்களை இன்னும் நம்பி கொண்டிருக்கிறது நமது இந்தியா!

    ஆண்டுக்கு 2 கோடி வேலை என்றார்! நம்பினோம்..

    அனைவருக்கும் 15 லட்சம் என்றார்! நம்பினோம்..

    ஸ்விஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் இதோ வந்துவிட்டது என்றார்! நம்பினோம்..

    50 நாட்களில் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் வீட்டார்! நம்பினோம்..

    சமையல் பாத்திரங்களை தட்டினால் கொரோனா ஓடிவிடும் என்றார்! நம்பினோம்..

    இதோ இந்தியா வல்லரசாகி விட்டது என்றார்! நம்பினோம்..

    விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது என்றார்! நம்பினோம்...

    2022-ற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றார்! நம்பினோம்..

    ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்றார்! நம்பினோம்...

    இவற்றை எல்லாம் சொன்னது யார்? ஒன்றாவது நிறைவேறியதா? எதுவும் இல்லை.

    ஓட்டுமொத்த இந்தியர்களையும் தனது வார்த்தை ஜாலத்தால் முட்டாளாக்கியது யார்? April 19-ல் பதிலடி கொடுப்போம். இந்தியாவை காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது
    • 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு பற்றி பேசுகிறாரா?

    கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    இந்திய சீன எல்லைப் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை சீனா மோடி ஆட்சியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதைத் தடுக்க தவறியதோடு அதைப்பற்றி பேசக்கூட துணிவும் திராணியும் இல்லாத மோடி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு பற்றி பேசுகிறாரா?

    அருணாச்சல பிரதேசம் - கல்வான் பள்ளத்தாக்கு, 14 -வது முனையத்தில் சீனா 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இங்கு சீன ராணுவ வீரர்கள் டென்ட் அமைத்து முகாமிட்டுள்ளனர். இதே பகுதியில் நடைபெற்ற சண்டையில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் ஆயுதங்களின்றி சண்டையிட்டு உயிரிழந்துள்ளனர். இதேபோல லடாக், அக்சாய் சின் பகுதியில் 94 லட்சம் ஏக்கர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து உங்கள் கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி அவர்களே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    பணமதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பவே தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு குறித்து பேச துவங்கியிருக்கிறது பாஜக.

    இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் மோடி கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை பொதுமக்களுக்கு விளக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது
    • நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன.

    ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது நாடு ஒரு இருண்ட பாதையை நோக்கி நகர்வதை குறிக்கிறது. நவீன விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் இப்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச பயன்படுகின்றன. பாஜக அரசு விவசாயிகளை நாட்டின் எதிரிகள் போல கையாளுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக பேச தைரியம் இல்லாத தலைவர்கள் ட்ரோன்களை ஏவுகின்றனர்.

    இது போராடும் விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். ட்ரோன்களில் கேமிராக்களை பொருத்தி போராடுபவர்களை அடையாளம் கண்டு பழிவாங்குவது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல.

    அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ட்ரோன்கள் அதை அடக்கக்கூடாது இந்த அடிப்படை உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்.

    இது விவசாயிகளைப் பற்றியது மட்டுமல்ல. இது நம் அனைவரையும் பற்றியது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்

    • அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை.
    • சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சாதாரணமாக ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவரை ஊக்குவிக்கும் விதத்தில் எந்த பொதுத்துறையின் தலைவரும் அரசு பொறுப்பில் இருப்பவர்களும் நடக்கக்கூடாது.

    அது சிறந்த முன் உதாரணமாக இருக்காது. ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை ஒரு கவர்னர் சந்தித்திருப்பது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்கும். நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கட்சியில் இணைத்துக்கொண்டு பொறுப்புகளை வழங்குவது போன்ற செயல்களில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது.

    இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். இதைத்தான் ஒரு பாசிச அணுகுமுறை என்று நாம் சொல்கிறோம். தாங்கள் சொல்வது தான் முடிவு. நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று பாரதிய ஜனதா செய்து வருகிறது. தங்களுடன் இருப்பவர்கள் எது செய்தாலும் தவறு இல்லை என்றும் தங்களை சார்ந்து இருப்பவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்ற மனநிலையில் தான் பா.ஜ.க.வினர் உள்ளனர்.

    அயோத்தி விவகாரத்தில் நான் தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. சங்கராச்சாரியார்கள் 2 பேர் முக்கியமான கருத்தை வலியுறுத்தியுள்ளனர். ஒன்று அவர்கள் தர்ம ஆச்சாரப்படி அது நடைபெறவில்லை.

    இன்னொன்று ஒரு கட்டி முடிக்கப்படாத கோவிலை திறந்து வைப்பது என்று கூறியுள்ளனர். ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக ஏன் அதை செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் கேட்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்பது எல்லாருக்கும் தெரியும். பாரதிய ஜனதா அவர்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

    எல்லா விஷயங்களிலும் சங்கராச்சாரியார்களிடமும் மத குருக்களையும் கருத்துகள் கேட்கும் அவர்கள் சங்கராச்சாரியார்களே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளுக்கு எதிராக கருத்துகள் கூறுகிறார்கள். இதற்கு பாரதிய ஜனதா கட்சி பதில் சொல்ல வேண்டும். சங்கராச்சாரியார்கள் சொல்வதை பார்த்தால் தேர்தலுக்காக இந்த பிரச்சனையை அவர் கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்.
    • ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டு தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

    ஏற்கனவே, பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

    ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

    உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
    • தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் இன்று பால் உற்பத்தியாளர்களுக்கு கடன்கள், மானிய உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசர் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு 73 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பால் உற்பத்திக்கு முதுகெலும்பாக பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்கள். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் தேவையானது அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் பால் உற்பத்தி குறையும் சூழல் இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை இருக்கிறது. ஆகவே பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது.

    ஆகவே தேவைகளை பூர்த்தி செய்ய பால் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆவின் நிறுவனத்தைப் பற்றி தெரியாமல் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவ்வாறு விமர்சனம் செய்பவர்கள் அதன் பலத்தையும், பலவீனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஆவின் நிறுவனம் என்பது, இரண்டு நோக்கங்களை கொண்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டியதும், வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான பாலை வழங்குவதும் தான் அந்த இரண்டு நோக்கங்கள்.

    இந்த ஆவின் நிறுவனத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களாகவும், 35 ஆயிரம் பணியாளர்களும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் உள்ள ஒரு மிகப்பெரிய வலுவான அமைப்பாக உள்ளது. இந்த ஆவின் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

    அதன்படி பால் உற்பத்தியை பெருக்குவதற்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.55 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    ஆவின் நிறுவனத்தை பொருத்தமட்டில் பால் உற்பத்தி அதிகமானாலும், குறைந்தாலும் ஒரு நிலையான விலையை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்கள் அவ்வாறு வழங்குவதில்லை. தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதனை 70 லட்சம் உயர்த்தி கையாளும் திறனாக மேம்படுத்த பணி தொடங்கியுள்ளது.

    இந்த ஆவின் நிறுவனத்தை மெருகூட்ட பல தெளிவான, தீர்க்கமான தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிச்சயமாக வருங்காலத்தில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுவிடும். அதேபோன்று விவசாயிகளும் உற்பத்தி செலவீனம் அதிகரித்து விட்டதால் பாலின் கொள் முதல் விலையை உயர்த்த கேட்டிருக்கிறார்கள். இதனை முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க இந்த அரசு நிச்சயம் பரிசீலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கேட்பது நியாயமானது. தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும். தனியார் நிறுவனத்தை கண்டு ஒரு அரசாங்கம் அச்சப்படாது. இருக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார்.

    • பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள்.
    • ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை.

    சென்னை :

    சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவினில் தினமும் 45 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் உள்ளது. மாநிலத்தின் தேவையை அடிப்படையாக கொண்டு பார்த்தால், தினசரி 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறன் வேண்டியது உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்த கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள இருக்கிறோம்.

    தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கொள்ளளவை கையாளும் திறனை ஏற்படுத்தும் போது அதற்கு நிகராக பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்க உள்ளோம்.

    கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆவினை பொறுத்தமட்டில் பொருளாதார சிக்கல் எதுவும் இல்லை. இதனால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள நிதி தடையாக இருக்காது. தற்போதுள்ள சூழ்நிலையில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது உள்ளது.

    உரிய அனுமதி இல்லாமல் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை நடத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த விலையில் பாலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

    பால் என்பது மிக முக்கியமான உணவுப்பொருள். எந்தவித வேதிப்பொருட்கள் கலப்படமும் இல்லாமல் பால் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.

    எனவே, பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பொருட்களின் தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளோம்.

    உணவுப்பொருள் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் மூலம் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்தும் முடிவெடுப்போம். எந்தவித காலதாமதமும் இன்றி பொதுமக்களுக்கு பால் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பால் வினியோகத்தை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சுப்பையன் உடன் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து ஆவின் பொதுமேலாளர்கள், அனைத்து மாவட்ட துணை பதிவாளர்களுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    • தமிழகத்தில் கிராமிய கலைகளை மீட்டெடுப்போம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
    • கிராமிய கலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

    மதுரை

    தமிழ்நாடு கிராமிய கலைஞர் மற்றும் கலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25-ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.

    இதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், செயலாளர் விஜயா தாயன்பன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில தலைவர் சோமசுந்தரம், தென்னக பண்பாட்டு மையம் இயக்கு னர் கோபாலகிருஷ்ணன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கிராமிய கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், நையாண்டி மேளம், கட்டை கால் ஆட்டம், நாதஸ்வரம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆடியபடி பேரணியாக வந்தனர். இதனை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அனீஸ்சேகர், பூச்சி முருகன் ஆகியோர் தனி மேடையில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பண்பாட்டில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாக கிராமிய கலைகள் திகழ்ந்து வருகின்றன.

    பொதுவான கருத்துக்களை மற்றவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறும் வல்லமை கிராமிய கலைகளுக்கு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த கிராமிய கலைகளை பாது காக்க வேண்டியது நமது கடமை ஆகும்.

    இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றை மீட்டெ டுக்கும் விதமாக அந்த துறையை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

    ×