search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weather"

    • தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
    • 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர்.

    கடலூர்:

    வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தினாலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (2-ந் தேதி) முதல் 4-ந் தேதி வரை கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் வரும் நிலையில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டு வருகின்றது.

    இதையொட்டி முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 80 பேர் சென்னை ஆவடியில் இருந்து கடலூருக்கு வருகை தந்தனர். இதில் 25 பேரை கொண்ட ஒரு குழுவினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். தற்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 55 பேரை கொண்ட 2 குழுவினர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் தங்கியுள்ளனர். தற்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை யொட்டி மீட்பு படையை சேர்ந்த அனைவரும், அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் பட்சத்தில், கலெக்டர் எந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்துகிறாரோ அந்த இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். 

    • மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.
    • காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இதையடுத்து, டெல்லி வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

    காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை சுமார் 18 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் தி.மு.க. எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் பயணம் செய்தனர். அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. எம்.பி. வில்சன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • பேரிடர் தொடர்பு எண் 1077-ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பேரிடர் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே தாலுகா வாரியாக மண்டல நிவாரண அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

    தாலுகா, ஒன்றியம், நகராட்சி வாரியாக பேரிடர் பொறுப்பு அலுவலர்களை நியமித்து 24மணி நேர பணியாக இருக்க வேண்டும். அவர்களின் தொலைபேசி எண்ணையும் வெளியிட வேண்டும்.

    மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பேரிடர் தொடர்பு எண் 1077 ஐ செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    பேரிடர் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 17 -ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 17 -ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம், கோண்டூர், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம், ெரட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் லேசான சாரல் மழையுடன் தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • விவசாயிகள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை வாட்ஸ்-அப் மூலம் பெறலாம் என அதிகாரி தெரிவித்துள்ளனர்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் விவசாயம் பருவ மழையை நம்பி உள்ளது. பருவமழை பொய்த்துப்போகும் ேபாதெல்லாம் வறட்சியின் பாதிப்பும், கூடுதல் மழை காரணமாக பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டு உணவு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளது. பருவ காலங்கள் வாரியாக பார்க்கும்போது வடகிழக்குப் பருவமழை காலங்களில் மொத்த மழையில் 61 சதவீதம் பெறப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை நம்பியே மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. உணவு உற்பத்தியில் வானிலை காரணிகளில் ஏற்படும் மாறுதல்கள், அதாவது காலம் தவறிய மழை, அதிக மற்றும் குறைந்த வெப்பநிலை, காற்றின் திசை மற்றும் வேகம், காற்றின் ஈரப்பதம் ஆகியவையும் பயிர் வளர்ச்சி மற்றும் உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கக்கூடும்.

    மழைப்பொழிவும் காலநிலை மாற்றம் காரண மாக சீராக இல்லாமல் பெரு மளவு மழை சில நாட்களி லேயே பெய்து விடுவதால் விவசாய பணிகளுக்கு பயன்படாமல் மழைநீர் பெருமளவு வீணாகிறது. இந்த சூழ்நிலையில் இயற்கை இடர்பாடுகள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க வானிலை சார்ந்த வேளாண் செயல்பாடுகள் அவசியமான ஒன்றாகிறது.வேளாண்மை யில் பருவகால மாற்றம் மற்றும் பாதகமான காலநிலையின் காரணமாக ஏற்படும் இழப்பு களை முழுஅளவு தவிரப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது. இருப்பினும் வானிலை பற்றி முன்கூட்டியே அறிந்தால் தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இழப்பை ஓரளவிற்கு தவிர்க்க முடியும்.

    இதனை கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வுத்துறையால் மத்திய கால வேளாண் முன்னறிவிப்பானது கணினி மாதிரிகள் மூலம் கணிக்கப் பட்டு விவசாயிகளின் பயிர் நிலையை அறிந்து மாறுபடும் வானிலைக்கு ஏற்றவாறு வானிலை முன்னறிவிப்பு மற்றும் வேளாண் ஆலோச னைகள் வட்டார வாரியாக வாரத்திற்கு 2 முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகளுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அளித்து வருகிறது.

    இந்த அறிக்கையின் உதவியால் பருவமழை பொழி விற்கு ஏற்ப பயிர் விதைப்பு செய்யவோ அல்லது விதைப்பை தள்ளிப்போடவோ முடிவெடுக்கலாம். மேலும் நடவு, நிலம் தயாரித்தல், உரமிடுதல், நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் அறுவடைக்குப்பின் நேர்த்தி போன்ற மேலாண்மை உத்திகளை வேளாண் பணிகளில் முடிவெடுப்பதில் முன்னறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே உழவர் பெரு மக்கள் வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளை பெறுவதற்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் வாட்ஸ்-அப் குழுவில் வேளாண் அறிவியல் மையத்தின் திட்டத்தை வழங்கக்கூடிய வெங்கடேசுவரியின் 95003 98922 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது.

    கடலூர்:

    அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் 5 -ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி இந்திய பெருங்கடல் வழியாக தமிழக பகுதி நோக்கி இரண்டாவது வாரத்தில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளகாடானது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், தொழுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு மேல்ப ட்டாம்பாக்கம் திருவந்திபுரம் கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மழையால் மழையில் நனைந்தபடியும், குடைப்பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் திடீர் மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கி இருந்ததையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- தொழுதூர் - 9.0, பரங்கிப்பேட்டை - 2.0, சிதம்பரம் - 1.4, கடலூர் - 1.1, அண்ணாமலைநகர் - 1.0 என மொத்தம் - 14.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் 35 கிலோமீட்டர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழை பெய்தவுடன் தண்ணீர் உடனுக்குடன் வடியும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரமன்ற தலைவர் புகழேந்தி , நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் இப்ராஹிம், ஓவர்சீயர் குமரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .

    மேலும் ஆறுகாட்டுக்குறை பகுதிக்கு செல்லும் வழியில் வைதூக்கையம்ஆலயத்தின் எதிர் புறத்தில் நகராட்சி க்கு சொந்தமான குளம் அமை ந்துள்ளது.

    நாள்தோறும் நூற்றுக்க ணக்கான மக்கள் குளிப்பதற்கு பயன்படும் இந்த குளம் மாசுபட்டு இருந்தது. அதனை தற்போது நகராட்சியின் சார்பில்க லைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 58 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு குளத்தை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது குளம்தூர்வா ரப்பட்ட பின்பு மிகுந்த தூய்மையாகவு ம்பெருவாரியான மீனவ மக்கள் குளிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது இந்த குளக்கரையில் நடைபெறும் பணியினையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். 

    • சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
    • தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ., பெரம்பூரில் 12 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

    • அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
    • அஜ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.

    ஜெய்ப்பூர்:

    கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன்கர் (சுரு) 8 செ.மீ மழையும், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

    பனேரா (பில்வாரா), கெர்வாடா (உதைபூர்), பதம்பூர், சதுல்ஷாஹர் (இரண்டும் கங்காநகரில்), மற்றும் நவா (நாகூர்) தலா 6 செ.மீ., நரைனா (ஜெய்ப்பூர்), பசேரி (தோல்பூர்), சஜ்ஜன்கர் (பன்ஸ்வாரா), தோல்பூரில் 5 செ.மீ., சோட்டிசாத்ரி (பிரதாப்கர்), அக்லேரா, அஸ்னாவர் (இரண்டும் ஜாலவாரில்), கர்ஹி (பன்ஸ்வாரா), துங்லா (சித்தோர்கர்), மற்றும் பாரி (தோல்பூர்) ஆகியவை பதிவாகியுள்ளன. 4 செ.மீ மற்றும் பல இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் 4 செ.மீட்டருக்கும் குறைவான மழை பெய்துள்ளது.

    மறுபுறம், ஸ்ரீகங்காநகரில் ஒரு நாள் முன்பு பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென சந்தித்து பேசினார். மிக கனமழையையொட்டி அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விளக்கினார். #TNRains #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசியல் களம் கடந்த 2 நாட்களாக சூடுபிடித்திருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக பேசப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. எனவே, மழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபடத் தொடங்கியது.

    தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று இதை கூறினாலும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் சற்று நேரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை திடீரென சந்திக்க இருக்கும் தகவல் வெளியானது. இதில் அரசியல் பின்னணி இருக்கும் என்று கருதப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று இரவு 7.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். அவருடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடன் சென்றார். இந்த சந்திப்பின்போது, தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி பன்வாரிலால் புரோகித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். மேலும் மிக கனமழை எச்சரிக்கையையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கி கூறினார்.

    சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு இரவு 7.45 மணியளவில் அங்கிருந்து எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார். கவர்னரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. #TNRains #TNREDAlert #EdappadiPalaniswami  #TNGovernor #BanwarilalPurohit
    ×