search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ் அப்"

    • நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.

    சென்னை:

    நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.

    இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.

    வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.

    பல்லடம் :

    வாட்ஸ்அப்' வாயிலாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில், அடைத்தனர். பல்லடம் அருகே கணபதிபாளையம் - சென்னிமலைபாளையத்தை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 55. இவர், கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், 'வாட்ஸ் அப்' மூலம் கேரள மற்றும் மூன்றாம் நெம்பர் லாட்டரி விற்பனையும், 'கூகுள் பே' வாயிலாக, பண பரிவர்த்தனையும் மேற்கொண்டது தெரிந்து, இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 மொபைல் போன், கேரள லாட்டரி, 20 மற்றும் 1,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வங்கி கணக்கையும் போலீசார் முடக்கினர். 

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
    • போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது 29). என்ஜினீயரான இவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர்.

    லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தபோது, காதல் ஜோடியினர் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிறாஸ், காதலிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊர் திரும்பினார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இந்த தகவல் காதலிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் லெனின் கிறாசை தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு திருமண தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக சைமன் காலனிக்கு விரைந்து சென்ற காதலி பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் 11-ந் தேதி லெனின் கிறாசிற்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமண நேரத்தில் ஆலயத்தில் சென்று காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மனுவை பரிசீலித்த அவர், நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், காதலியை திருமணம் செய்யும்படி, லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இருவரும் குளச்சலில் உள்ள ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி 9 நாட்கள் போராட்டம் நடத்திய காதலியின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக டிசம்பரில் 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டது.
    • கடந்த செப்டம்பரில் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது.

    புதுடெல்லி:

    வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.

    இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36,77,000 வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதில் 13,89,000 வாடஸ் அப் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பு இன்றி முடக்கி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.

    ஏற்கனவே, கடந்த செப்டம்பரில் இந்தியாவில் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது நினைவிருக்கலாம்.

    • நுகர்வோர் உணவு பொருள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் - அதிகாரி தகவல்
    • கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூரில் இனிப்பு மற்றும் பலகாரங்களை தயாரிக்கும் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறையின் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளில் உணவை அடைத்து விற்பனை செய்யக்கூடாது. மேலும் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவு பொருட்களுடன் தயாரிப்பு மற்றும் காலாவதி விவரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

    நுகர்வோருக்கு உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம்.
    • தற்போது வீடியோ மற்றும் போட்டோக்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.

    சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை தொடர்ந்து வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது மேலும் ஒரு முக்கிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸில் தான் இந்த புதிய அப்டேட் வர உள்ளது. அதன்படி தற்போது வீடியோ மற்றும் போட்டோக்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும், விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.


    குரலை பதிவு செய்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப்பில் நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது ஸ்டேட்டஸிலும் அந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்த அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து வருவதாகவும், விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    கால்நடை பராமரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு- வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவாது:-

    கால்நடை பராமரிப்புத் துறையில் அனிமல் ஹேண்ட்லர், அனிமல் ஹேண்ட்லர் டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு 90 மணி நேரம் பயிற்சி அளித்து, ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது எனவும், இதற்கான பணி நியமன ஆணை ஜுன் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்தி கொள்ளுமாறு செல்போன்களில் வாட்ஸ் அப் செயலி மூலம் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இவை கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை என தெரிவிக்கப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பில்லாத தவறான இத்தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாறவேண்டாம். இதுபோன்ற தகவல்கள் பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மின் கம்பங்களில் உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

    திருப்பூர்:

    ஆடை உற்பத்தி, கறிக்கோழி உற்பத்தி, விசைத்தறி, கட்டுமானம், எண்ணெய் ஆலை, கொப்பரை, அரிசி ஆலை என பல்வேறு தொழில்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் மின் தேவை என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தடையற்ற மின் சப்ளை என்பது, அவசியமாகிறது.இருப்பினும் பல இடங்களில், சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள தெருவிளக்கு மற்றும் மின் வினியோக பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் வயர்கள் மற்றும் மின் கம்பிகள் என சில பிரச்சினைகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த குடியிருப்பு பகுதிகள் உள்ள, நகர கிராமப்புறங்களில் இத்தகைய பிரச்சினைகள் மீது மின்வாரியத்தினர் கவனம் செலுத்தினாலும், ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலங்கள், அங்குள்ள மின் கம்பங்களில் உள்ள பிரச்சினைகள் தெரிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

    இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தை பொறுத்தவரை, திருப்பூர், அவிநாசி என இரு கோட்டங்கள் உள்ளன. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின் சார்ந்த புகார்களை தெரிவிக்க 94987 94987 என்ற எண் வழங்கப்பட்டு, மின்னகம் என்ற பெயரில் 24 மணி நேரம் அந்த எண் செயல்பாட்டில் இருக்கும்.அந்த எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் கூறும் புகார்கள், 'வாய்ஸ் ரெக்கார்டு' முறையில் தானாகவே பதிவாகி விடும். குறையை சரி செய்ய அப்பகுதி சார்ந்த மின் ஊழியருக்கு அறிவுறுத்தப்படும். அந்த குறை சரி செய்த பின் சம்மந்தப்பட்ட புகார்தாரரை அழைத்து, அந்த குறைபாடு சரிசெய்யப்பட்டு விட்டதா என உறுதி செய்யப்பட்ட பின்னரே அந்த புகார் முடிவுற்றதாக கருதப்படும்.

    அதேபோல் 94421-11912 என்ற வாட்ஸ் ஆப்எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின் குறைபாடு தொடர்பாக போட்டோவுடன் அந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப் அனுப்பினால் அவை சரி செய்யப்படும். கடந்த இரு நாளில் மட்டும் 110க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்துள்ளன.இதன் மூலம், ஒதுக்குப்புறமாக உள்ள விவசாய நிலங்கள், அங்குள்ள மின்கம்பங்களில் உள்ள பிரச்னைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    உத்திரப்பிரதேசத்தில் மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தியதால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WhatsApp
    லக்னோ :

    உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகௌன் சதட் எனும் கிராமத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் பெண் அமர்ந்திருக்க மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்களை எதிர்பார்த்து பெண் வீட்டார் காத்திருந்தனர்.

    ஆனால், திருமண நேரம் நெருங்கியும் மாப்பிள்ளை வீட்டார் வராததால், பெண்ணின் தந்தை மெகந்தி, மாப்பிள்ளையின் தந்தை ஹைதருக்கு போன் செய்தார். ஆனால், மணப்பெண் அதிக நேரம் வாட்ஸ் அப்பிலேயே மூழ்கி இருப்பதால் தங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து, வரதட்சனையாக மாப்பிள்ளை வீட்டார் ரூ.65 லட்சம் கேட்டார்கள், அதை மனதில் வைத்தே இப்போது திருமணத்தை நிறுத்தியுள்ளனர் என மெகந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால், மாப்பிள்ளை வீட்டாரோ, பெண்ணுக்கு அதிக நேரம் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்பாகவே எங்களது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பல்வேறு செய்திகளை அனுப்பியுள்ளார். மணப்பெண் வாட்ஸ் அப்க்கு அடிமை ஆனது போல் இருந்ததால் நாங்கள் திருமணத்தை நிறுத்திவிட்டோம் என தெரிவித்தனர்.

    ஒரு திருமணம் வாட்ஸ் அப்பை காரணம் காட்டி நின்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WhatsApp
    பணியில் பிஸியாக இருந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத மகள், அஸ்தியை கொரியரில் கேட்டு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக இறுதிச்சடங்கை பார்த்துள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அருகே உள்ள மனோர் கிராமத்தை சேர்ந்த நீராபாய் படேலின் மனைவி தீரஜ் படேல் உடல்நலக்குறைவால் சமீபத்தில் இறந்துள்ளார். தாய் இறந்த செய்தியை குஜராத்தில் வசிக்கும் மகளிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

    அதற்கு தான் வேலையில் ரொம்ப பிஸியாக இருப்பதால் ஊருக்கு வர முடியாது என மகள் பதில் கூறியுள்ளார். அதோடு வாட்ஸ் ஆப் வீடியோ காலில் தாயின் முகத்தை காட்டுமாறும் ஊரில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அதே போல தாய்க்கு நடந்த இறுதிச் சடங்கை அவர் வாட்ஸ் அப்பிலேயே பார்த்தார்.

    அவரது இந்த நடவடிக்கையால், ஊர் மக்கள் கடும் கோபமடைந்தனர். இதனிடையே, இறுதிச் சடங்கில் தான் பங்கேற்க முடியவில்லை, அஸ்தி கரைப்பதற்காக வர வேண்டும் என்று அவர்கள் அழைத்துள்ளனர். அதற்கு அவர், அஸ்தியை கொரியரில் அனுப்பிவிடுங்கள் என்று பதில் கூறியுள்ளார்.

    இதனை அடுத்து தாயின் உடலை தகனம் செய்த கிராம மக்களே, அவரது அஸ்தியையும் மகளுக்கு கேட்டதுபோல கொரியரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
    ×