search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Govt"

    • மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டம்.
    • விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    டெல்லியில் அபாய அளவை கடந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் காற்று மாசுவால் சூழ்ந்து காணப்படுகிறது.

    காற்று மாசுவை கட்டுப்படுத்த டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோல், டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த வாகனக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் இன்று வந்தது.

    அப்போது, தாஜ்மகால் வழக்கில், மாசடைவதிலிருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    பசு பாதுகாப்பு பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை உத்தரபிரதேச அரசு நியமனம் செய்துள்ளது. #HemaMalini #CowSevaAyog
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்’ என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.

    இந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதன் பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.

    பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். #HemaMalini
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. #UPgovt #ESMAinUP
    லக்னோ:

    அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு எனப்படும் ‘எஸ்மா சட்டம்’ மிக முக்கியமான துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்வதற்காக பாராளுமன்றத்தால் 1968-ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டமாகும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைக்கேற்ப அவசியம் ஏற்படும்பட்சத்தில் எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம்.

    இந்த சட்டம் அமலில் இருக்கும்போது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

    தபால், விமான நிலையம், துறைமுகம், ரெயில்வே உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் வேலைநிறுத்தத்தால் மக்களுக்கான சேவைகள் பாதிக்காத அளவில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த சட்டம் அமலில் இருக்கும்போது போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு போராட்டம் நடத்த முடியாதவாறு எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தக்கோரி அம்மாநில அரசு பணியாளர்கள் நாளை முதல் (6-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசின் தலைமை செயலாளர் அனுப் சந்திரா பாண்டே இதற்கான உத்தரவை நேற்றிரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #UPgovt #ESMAinUP
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெருக்களில் திரியும் பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #UPGovt #Gaukalyancess #StrayCattle
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கடந்த மாதம் 27-ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, தொழுவங்கள், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதற்கு தேவையான செலவினங்களுக்காக சில பொருட்களின் மீது கூடுதலாக அரை சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த வகை பொருட்களின்மீது கூடுதல் செஸ் வரி விதிப்பது என்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் இதுதொடர்பான அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.



    இந்த அறிவிப்பின்படி மது வகைகள், சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், பசுக்களின் பராமரிப்புக்காக விவசாய விளைபொருள் விற்பனை கூடங்கள் தற்போது செலுத்திவரும் ஒரு சதவிகிதம் வரியும் இரண்டு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் ஆளும்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கோசாலைகளை அமைத்து பசுக்களை பராமரித்து பாதுகாப்பது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாக இருக்குமானால் இதை மத்திய அரசு நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பசுக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடைமைகளில் ஒன்று. இதற்காக தனியாக புதிய வரியை திணித்து மக்களை ஏன் துன்புறுத்த வேண்டும்? என சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுதரி குறிப்பிட்டுள்ளார். #UPGovt #Gaukalyancess #StrayCattle
    உத்தரப்பிரதேசத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #KumbhMela #UPGovt #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன.

    அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.

    இதனால் விசே‌ஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள்.


    அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #KumbhMela #UPGovt #YogiAdityanath
    உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். #RamStatue #UP
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவாஸ்தி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

    ‘‘ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பீடம் பகுதியில் மியூசியம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ‘‘இந்த வேலையை தொடங்குவதற்காக ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அத்துடன் மணல் உறுதி சோதனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.



    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.   #RamStatue #UP
    அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த மஹ்ந்த் கைது செய்யப்பட்ட நிலையில், ராமருக்கு எதிரான போருக்கு உ.பி. அரசு தயாராகி வருகிறது என பிரவின் தொகாடியா கூறியுள்ளார். #PravinTogadia
    லக்னோ:

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா. இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்டவரான இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்தர்ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரில் இருந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் அயோத்தி நோக்கி நடைபயணம் செல்வோம் என பிரவின் தொகாடியா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை வலுக்கட்டாயமாக உண்ணாவிர பந்தலில் இருந்து வெளியேற்றிய போலீசார் பின் கைது செய்தனர்.


    கைது செய்யப்பட்ட மஹந்த்

    இந்த நடவடிக்கைக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயோத்தி நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தொகாடியா, உத்தரப்பிரதேச மாநில அரசு ராமருக்கு எதிரான போருக்கு தயாராகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

    அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என அமைதியான முறையில் போராடுவதும் குற்றமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸை கைது செய்ததன் மூலம் மொகலாய மன்னர் பாபரின் ஆட்சிக்காலம் போல உத்தரப்பிரதேச மாநில அரசு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதாக தொகாடியா நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளை மாநில மைய கல்வித் திட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என அம்மாநில மந்திரி மொஹ்சின் ராஜா தெரிவித்துள்ளார். #MohsinRaza #Madrassa
    லக்னோ:

    நாடு முழுவதும் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு இஸ்லாம் குறித்தும், இஸ்லாத்தை பின்பற்றும் வழிமுறைகள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உத்தரப்பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை மந்திரி மொஹ்சின் ராஜா, மதரசாக்களை மாநில மைய கல்வி திட்டத்துக்குள் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள மதக்கல்வி நிறுவனங்களை அந்தந்த மாநில மைய கல்வித்திட்டத்துக்குள் இணைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடியை தாம் சந்தித்து பேச இருப்பதாகவும் மந்திரி மொஹ்சின் ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக மதரசாக்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என இவர் கூறிய கருத்து சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. #MohsinRaza #Madrassa
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒழுங்காக பணியாற்றாத அரசு ஊழியர்களை 50 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. #UPGovt
    லக்னோ:

    அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றுவது இல்லை என்பது அனைத்து தரப்பினரும் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு ஆகும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு, கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 31-ம் தேதியில் இருந்து இந்த வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் 1986-ம் ஆண்டு முதல் நடப்பில் இருந்து வருவதாகவும், ஆனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் இது பின்பற்றப்படவில்லை எனவும், இனி வரும் காலங்களில் இந்த சட்டம் தீவிரமாக பின்பற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  #UPGovt
    ×