search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pravin togadia"

    புதிய அரசியல் கட்சியை தொடங்கிய வி.ஹெச்.பி. முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா, வரும் பாராளுமன்ற தேர்தலில் அயோத்தி தொதியில் போட்டியிடுகிறார். #PravinTogadia #HinduSthanNirmanDal #Ayodhya
    புதுடெல்லி:

    வி.ஹெச்.பி. முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர்.

    இந்நிலையில், பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.

    மேலும், வரும் பொது தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியா தொகுதியில் போட்டியிட உள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கப் போவதில்லை. நம்பகத்தன்மையுடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். #PravinTogadia #HinduSthanNirmanDal #Ayodhya
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த விவகாரத்தை தேர்தலுக்காகவே பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயன்படுத்துவதாக பிரவீன் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார். #RSS #BJP #RamTemple #Ayodhya
    அகமதாபாத்:

    விஜயதசமி விழாவையொட்டி இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இதுகுறித்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் குறித்து பேச ஏன் நான்கரை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், கடந்த 2017-ம் ஆண்டிலேயே ராமர் கோவில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்ற தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்காக தன்னையும், தனது ஆதரவாளர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தண்டித்ததாகவும் கூறியுள்ளார்.

    மேலும், நான்கரை வருடங்களுக்கு பிறகு இந்த விவகாரம் குறித்து சட்டம் இயற்ற சொல்லப்படுவது, தேர்தல் நெருங்குவதால்தான் என பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார். #RSS #BJP #RamTemple #Ayodhya
    அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த மஹ்ந்த் கைது செய்யப்பட்ட நிலையில், ராமருக்கு எதிரான போருக்கு உ.பி. அரசு தயாராகி வருகிறது என பிரவின் தொகாடியா கூறியுள்ளார். #PravinTogadia
    லக்னோ:

    விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா. இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்று கொண்டவரான இவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அந்தர்ராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்னும் புதிய அமைப்பை தொடங்கி அந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார்.

    அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நகரில் இருந்து அக்டோபர் மாதம் 21-ம் தேதி முதல் அயோத்தி நோக்கி நடைபயணம் செல்வோம் என பிரவின் தொகாடியா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸ், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை வலுக்கட்டாயமாக உண்ணாவிர பந்தலில் இருந்து வெளியேற்றிய போலீசார் பின் கைது செய்தனர்.


    கைது செய்யப்பட்ட மஹந்த்

    இந்த நடவடிக்கைக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச செயல் தலைவர் பிரவின் தொகாடியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயோத்தி நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தொகாடியா, உத்தரப்பிரதேச மாநில அரசு ராமருக்கு எதிரான போருக்கு தயாராகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

    அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என அமைதியான முறையில் போராடுவதும் குற்றமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மஹந்த் பரம்ஹன்ஸ் தாஸை கைது செய்ததன் மூலம் மொகலாய மன்னர் பாபரின் ஆட்சிக்காலம் போல உத்தரப்பிரதேச மாநில அரசு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதாக தொகாடியா நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
    இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கோரிக்கைகள் விடுவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் பிரதமருக்கு ஆணையிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
    மும்பை:

    விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து ராஜ்ஜியம் என்பது இஸ்லாமியர்களுக்கு இடமில்லை என்பது பொருள் அல்ல என்ற பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    பசுக்களை கொல்பவர்களையும், பாகிஸ்தான் கொடியேந்தி காஷ்மீரில் இருப்பது போன்ற இஸ்லாமியர்கள் இல்லாததே இந்து ராஜ்ஜியம் என தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.



    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பிரதமர் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்ட தொகாடியா, எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு வந்தபோது அதில் முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனக்கூறிய பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவே இறுதியானது என கூறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கோரிக்கைகளை விடுப்பதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் உத்தரவிட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #PMModi #AyodhyaRamTempleIssue #PravinTogadia #RSS
    ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக பிரவீன் தொகாடியா அறிவித்துள்ளார். #PravinTogadia
    பைசாபாத்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பைசாபாத் மற்றும் அயோத்திக்கு இன்று சென்ற பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்திற்கு தொடர்புடைய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், பேரணி நடத்தும் தேதியை அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த உள்ளேன். ராம ஜென்ம பூமிக்காக இந்துக்கள் செய்த தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.

    ராமர் கோவில் விஷயத்தில் மோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PravinTogadia
    நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என விஎச்பி முன்னாள் தலைவர் பிரவின் தொஹாடியா தொடங்கியுள்ள புதிய அமைப்பு அறிவித்துள்ளது.
    லக்னோ:

    விஷ்ய இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த பிரவீன் தொஹாடியா சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகியதோடு, குஜராத் அரசு தன்னை கொலை செய்ய பார்க்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனை அடுத்து, ஹிந்து ஹி ஆகே என்ற புதிய அமைப்பை தொஹாடியா தொடங்கினார்.

    இந்நிலையில், இந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த் பராஷர் நடிகர் சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். சல்மான்கான் தயாரிப்பில் லவ்ராத்திரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நவராத்திரி பண்டிகைக்கு இந்த படம் திரைக்கு வர உள்ளது.

    இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த செயல் இருப்பதாக கூறி சல்மான்கானை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும், மாநில அரசுகள் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
    ×