search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தியா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.
    • இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    ராம நவமி 2024: ராமர் பிறந்த நாளாக ராம நவமி கொண்டாடப் படுகிறது. ராம நவமியின் புனித திருவிழா இந்த ஆண்டு சித்திரை 04ஆம் தேதி ஏப்ரல் 17ஆம் நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

    ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா ராமர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அயோத்தியில் ராமர் பிரதிஷ்டைக்குப் பிறகு முதல் ராம நவமி ஒரு தலைமுறை மைல்கல் ஆகும். இது நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்துடன் பல நூற்றாண்டுகளின் பக்தியை ஒன்றிணைக்கிறது.

    கோடிக்கணக்கான இந்தியர்கள் காத்திருக்கும் நாள் இது. இந்த புனிதமான நோக்கத்திற்காக எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

    பிரபு ஸ்ரீராமின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு, நம் வாழ்வில் ஞானத்துடனும் தைரியத்துடனும் ஒளியூட்டி, நீதி மற்றும் அமைதியை நோக்கி நமது பாதைகளை வழிநடத்தட்டும்.

    ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர் இந்தியாவின் அடித்தளம்...

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
    • ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது.

    இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்த்துள்ளது.

    அதாவது, நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் உள்ள 9000 திரைகளில் கும்பாபிஷேக நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் டோனிக்கு ஏற்கனவே அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

     

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    • விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்பு.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள்.
    • உயரதிகாரிகள் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. உலக இந்து அறக்கட்டளையின் நிறுவனரும், உலகளாவிய தலைவருமான சுவாமி விக்யானானந்த், "தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

    அழைக்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், போட்ஸ்வானா, கனடா, கொலம்பியா, டென்மார்க், டொமினிகா, காங்கோ ஜனநாயக குடியரசு (டிஆர்சி), எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கானா, கயானா, ஹாங் ஆகியவை அடங்கும்.

    காங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, மலாவி, மொரீஷியஸ், மெக்சிகோ, மியான்மர், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சியரா லியோன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை , சுரினாம், ஸ்வீடன், தைவான், தான்சானியா, தாய்லாந்து, டிரினிடாட் & டொபாகோ, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, யுகே, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜாம்பியா இடம்பெறுகிறது.

    ராமர் கோவில் நிகழ்ச்சியில் நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும், அனைத்து விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள் என்றும் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூடுபனி மற்றும் வானிலை காரணமாக, பிரதிநிதிகள் நிகழ்வுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும், வெளிநாட்டு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக சுவாமி விக்யானானந்த் முன்பு கூறியிருந்தார். ஆனால் இட பற்றாக்குறை காரணமாக விருந்தினர் பட்டியலைக் குறைக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.
    • பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22ம் தேதி அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா அன்று, கர்நாடகாவில் உள்ள ராமர் கோவில்களில் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் மேலும் கூறியதாவது:-

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பு எனக்கு வரவில்லை. ஸ்ரீராமனை தரிசிக்க நாங்கள் அவர்கள் (பாஜக) பின்னால் ஓடவில்லை.

    நாங்களும் ராமரை வணங்குகிறோம். ஆனால் அவர்கள் (பாஜக) ராமர் கோவில் விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம். ஸ்ரீராமனை அல்ல.

    நான் ஜனவரி 22க்குப் பிறகு, நேரம் கிடைக்கும்போது அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமரை தரிசிப்பேன். நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. பாஜகவின் அரசியலை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன
    • வறுமை எண்ணெயை எடுக்க தள்ளி விட்டதாக அகிலேஷ் தெரிவித்தார்

    இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீஇராமருக்கான கோயில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறக்கப்பட உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் தீபாவளியை குறிக்கும் வகையிலும், ஸ்ரீஇராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டியும், சரயு நதிக்கரையில், 25 ஆயிரம் தன்னார்வலர்களை கொண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

    கின்னஸ் உலக சாதனை பதிவு நிறுவனம், டிரோன் மூலம் இதனை பதிவு செய்து எண்ணிக்கையை உறுதி செய்து, இதை ஒரு உலக சாதனை என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டார்.

    அந்த வீடியோவில் நதிக்கரையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகளில் இருந்து சில குழந்தைகள் எண்ணெயை எடுத்து பாத்திரங்களில் ஊற்றி கொள்கின்றனர்.

    இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் கருத்தை பதிவிட்ட யாதவ் தெரிவித்திருப்பதாவது:

    பக்தி ஒரு புறம், வறுமை ஒரு புறம். எரியும் விளக்குகளில் இருக்கும் எண்ணெயை குழந்தைகள் எடுக்கும் நிலைக்கு வறுமை அவர்களை தள்ளி விட்டது. ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளி பெற செய்யும் ஒரு பண்டிகையை நாம் கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    அயோத்தி வழக்கு விசாரணையில், இந்து பயங்கரவாதம் என வக்கீல் ராஜீவ் தவான் வாதிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ஒருவர் தவானை நோக்கி முன்னேறியதால் சுப்ரீம் கோர்ட் அறையில் பரபரப்பு ஏற்பட்டது. #Ayodhya
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அமர்வு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல கட்டமாக நடந்து வரும் விசாரணையில் இடைக்கால தீர்ப்புகளை வழங்கக்கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    ஆனால், மூல வழக்கின் விசாரணை முடியாமல் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 

    இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “டிசம்பர் 6 அன்று நடந்தது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. அன்றைய தினம் இந்துக்கள் தாலிபான்களை போல நடந்து கொண்டனர்” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    இதனை அடுத்து, ராஜீவ் தவானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி மற்றொரு வக்கீல், ராகுல் தவானை நோக்கி முன் நகர்ந்து வந்தார். இதனால், கோர்ட் அறையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. உடனே, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வக்கீலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.  
    ×