search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stray cattle"

    • குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
    • கால்நடைகளை பராமரிக்க வசதியில்லாதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் (திமுக) தலைமையில் நடந்தது. இதில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன் கூட்டத்தில் பேசும்போது, என் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை, கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆணையர் பதிலளிக்கையில், அந்த பகுதியில் துப்புரவு பணிகளை விரைவாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    அடுத்தபடியாக நகராட்சி உறுப்பினர் சரவணன் பேசுகையில், என் வார்டு அடங்கிய பகுதியில் ஆடு-மாடு வதைக்கூடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அங்கு ஏற்கெனவே செத்த கால்நடைகளை இறைச்சிக்காக கொண்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆணையர் பதில்அளிக்கையில், அனைத்து பகுதிகளிலும் மாதம் 4 முறை மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

    காட்டேரி வார்டு உறுப்பினர் குமரேசன் பேசும்போது, என் வார்டில் யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலைக்கு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லை. எனவே பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என் வார்டில் அனைத்து பகுதிகளிலும் போதிய மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு தலைவர் மின்சார வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    குன்னூர் நகராட்சி கூட்டத்தின்போது, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் சிறிய அளவில் வீடுகளை கட்டும்போது அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். மேலும், நகராட்சியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நடக்கிறது. எனவே அவற்றை பிடித்து சென்று பராமரிக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினா். அதற்கு கால்நடைகளை பராமரிக்க வசதியில்லை, எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் உறுதியளித்தார்.

    முன்னதாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ள குன்னூா் நகா்மன்ற உறுப்பினா் ராமசாமிக்கு நகா்மன்ற துணைத் தலைவா் வாசிம் ராஜா (திமுக), அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தெருக்களில் திரியும் பசுக்களை பராமரிக்க அரை சதவீதம் செஸ் வரி விதிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #UPGovt #Gaukalyancess #StrayCattle
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கடந்த மாதம் 27-ம் தேதி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, தெருக்களில் திரியும் பசுக்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 750 கோசாலைகளில் பசுக்களுக்கு சரியான உணவு, தொழுவங்கள், குடிநீர் வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதற்கு தேவையான செலவினங்களுக்காக சில பொருட்களின் மீது கூடுதலாக அரை சதவீதம் செஸ் வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த வகை பொருட்களின்மீது கூடுதல் செஸ் வரி விதிப்பது என்பது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் இதுதொடர்பான அரசு அறிவிக்கை வெளியிடப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்.



    இந்த அறிவிப்பின்படி மது வகைகள், சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வருமானத்தின் மீதான வரிவிதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், பசுக்களின் பராமரிப்புக்காக விவசாய விளைபொருள் விற்பனை கூடங்கள் தற்போது செலுத்திவரும் ஒரு சதவிகிதம் வரியும் இரண்டு சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

    அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தின் முன்னாள் ஆளும்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    கோசாலைகளை அமைத்து பசுக்களை பராமரித்து பாதுகாப்பது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையாக இருக்குமானால் இதை மத்திய அரசு நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தவில்லை? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பசுக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடைமைகளில் ஒன்று. இதற்காக தனியாக புதிய வரியை திணித்து மக்களை ஏன் துன்புறுத்த வேண்டும்? என சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுதரி குறிப்பிட்டுள்ளார். #UPGovt #Gaukalyancess #StrayCattle
    ×