search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thangar Bachan"

    • தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும்.
    • மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து கடலூர் முதுநகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் செய்துள்ள வேலைகள் தற்போது குறிப்பிடுகிறேன். இதில் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.1507 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பிரதமர் வீடு கட்டு திட்டம் மூலம் 5803 குடும்பம், 3 லட்சத்து 7 ஆயிரம் கழிப்பறை, 2 லட்சத்து 40 ஆயிரத்து 800 மக்களுக்கு சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு மூலம் 2 லட்சத்து 88 ஆயிரம், 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை . ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெற செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.

    விவசாய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க . ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி 3 முறை பெட்ரோல் விலை குறைத்துள்ளார்.

    ஆகையால் தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானை அதிக வாக்கு வித்தியாசத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் செல்லும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வருவதால் பா.ஜ.க. வெற்றி பயணத்தை நோக்கி செல்கின்றது. 10 ஆண்டு மோடி ஆட்சி மக்களின் ஆதரவுடன் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படம் 'கருமேகங்கள் கலைகின்றன'.
    • இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தை பார்த்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இயக்குனர் தங்கர்பச்சான் படைத்திருக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தை பார்த்தேன்; ரசித்தேன். இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது. இந்தத் திரைப்படத்தை பொதுமக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டும்.


    கருமேகங்கள் கலைகின்றன படம் பார்த்த அன்புமணி ராமதஸ்

    இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி. உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!" என்று பதிவிட்டுள்ளார்.





    • இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தி தொடங்கியது.

    இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.


    வைரமுத்து

    இந்நிலையில் வைரமுத்து, இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்துக்குப் பாட்டமைக்க கலைமேகங்கள் கூடிய தருணம். தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ், மற்றும் நான். மெட்டுக்குப் பாட்டெழுதினேன். அதில் சில காட்சிகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.     



    தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்தில் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தங்கர் பச்சான். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ள இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் டி.வீரசக்தி தயாரிக்கிறார். இதில் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் நடிகையின் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 

    தங்கர் பச்சான்
    தங்கர் பச்சான்

    ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ்-தங்கர் பச்சான் கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக என்.கே.ஏகாம்பரமும், கலை இயக்கத்தை முத்துராஜ் தங்கவேல் மேற்கொள்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் 25 முதல் இரு கட்டங்களாக தொடங்குகின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் பிற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    அர்ஜுன்.எம்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா - லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகி வரும் `யங் மங் சங்' படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் சீனாவில் படமாகி இருக்கிறது. #YangMangChang #Prabhudeva
    பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், அவர் தற்போது `யங் மங் சங்', `பொன் மாணிக்கவேல்', `தேவி 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் `யங் மங் சங்' படத்தை அர்ஜுன்.எம்.எஸ். இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவா ஜோடியாக லக்‌ஷ்மி மேனனும், வில்லனாக பாகுபலி வில்லன் பிரபாகரும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.



    தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்டு 1980களில் நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் உருவாகி வருகிறது.

    வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பாசில், நிரஞ்சன் படத்தொகுப்பை கவனிக்கின்றனர். #YangMangChang #Prabhudeva #LakshmiMenon

    ×