search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sarees"

    • 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம், மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பசவகல்யாண தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்ணள்ளி என்ற சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் ஏராளமான சேலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்த பறக்கும் படையினர் லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த சேலைகள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆவணங்களை கேட்டபோது அவர் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சேலைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுப்பற்றி தெரியவந்ததும் வணிக வரி உதவி கமிஷனர் மகேஷ் பாட்டீல் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த சேலைகள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது கடைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் பிறந்தநாள் விழா.
    • குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வார்டு ஏழை பெண்களுக்கு புடவைகளை பரிசாக வழங்கி உதவினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ், வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
    • கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    தஞ்சாவூர்:

    கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 15.9.2022 முதல் "தீபாவளி"2022-யை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை" நடைபெற்று வருகிறது.

    இச்சிறப்பு தள்ளுபடி விற்பனை 30.11.2022 வரை உள்ளது . அதன்படி தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்களை உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

    மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையா ளர்களிடமிருந்து பெறப்பட்டு, 11-வது மற்றும் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் போனஸாக வழங்கி மொத்த முதிர்வு தொகைக்கு 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்துள்ளார்.

    • அம்மனுக்கு 108 புடவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
    • கோவிலில் வைத்துள்ள நவராத்திரி கொலுவை பக்தர்கள் கண்டு களித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் பால விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு தினமும் மாலையில் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    ஊஞ்சல் சேவையின் போது பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், கீேபார்டு வாசித்தல், கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு 108 புடவைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார் குழலி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    கோவிலில் வைத்துள்ள நவராத்திரி கொலுவையும் பக்தர்கள் கண்டு களித்தனர். 

    • புதிய வடிவமைப்புகளில் சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் கூட்டு றவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்து தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சீபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டு உள்ளன.

    தஞ்சாவூர் வைரைம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

    கடந்த தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் தஞ்சாவூர் மண்டலத்தில் ரூ.7 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.13 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் வைரம் விற்பனை நிலையத்தில் கடந்த தீபாவளிக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 23-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டு, 11- வது மற்றும் 12 -வது மாத சந்தா தொகையை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி,

    மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்எம்.அ ன்பழகன் ,அரசு அலுவல ர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்கள் எம்.ஸ்ரீதர், ஆர்.சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு.
    தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுவதில் பட்டுப்புடவைகளுக்கு தனித்துவமான இடம் உண்டு. சாதாரண உடையில் வருபவர்கள் கூட பட்டுச்சேலை உடுத்தி வந்தால் தனி மிடுக்குடன் தோற்றமளிப்பார்கள். தமிழகத்தில் காஞ்சீபுரம் பட்டு, ஆரணி பட்டு என பல்வேறு வகையான பட்டுகள் இருந்தாலும் திருபுவனம் பட்டுக்கு தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற ஊர்களில் உற்பத்தி செய்யும் பட்டுப்புடவைகளை விட, திருப்புவனம் பட்டு கலைநுணுக்கம் மிக்கது. ஜவுளி கடைகளில் திருபுவனம் பட்டுப்புடவைகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். அதற்கு காரணம், அதன் விசிறி மடிப்பு. அதுவே திருபுவனம் பட்டுக்கு கூடுதல் பெருமையும் சேர்க்கிறது. தற்போது திருபுவனம் பட்டுப்புடவைக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

    கோவில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது திருபுவனம். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நெசவுத்தொழில்தான் செய்து வருகிறார்கள். அவர்கள் கைதேர்ந்த நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ள பட்டுப்புடவைகள் நெய்வதில் திறமை மிக்கவர்கள். ஒரு பட்டுப்புடவை உற்பத்தி செய்ய குறைந்தது 15 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறார்கள். மாதத்திற்கு ஒரு குடும்பம் 2 சேலைகள் வரையே தயார் செய்கிறது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருமே பங்கு பெறுகிறார்கள். இங்கு ஏராளமான பட்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (திகோசில்க்ஸ்).

    இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகளில் குறிப்பிடத்தக்கது, வனசிங்காரம். இது முழுவதும் ஜரிகை இழைகளினால் சிறந்த வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட பட்டுப்புடவை. இந்த பட்டுப்புடவை திருபுவனம் நெசவாளர்களின் கைத்திறனுக்கு சான்றாகவும் விளங்குகிறது. இதில் மான், மயில், புலி ஆகிய உருவங்கள் மிகவும் தத்ரூபமாக இடம்பிடித்து கண்களுக்கு விருந்தளிக்கும். இதே போல் பலவண்ணங்களில் புதிய புதிய டிசைன்களை நெசவு தொழிலாளர்கள் உருவாக்குகிறார்கள். இந்த சங்கத்தின் கைதேர்ந்த நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ‘ஜாங்களா’ ரக கல்யாண பட்டுப்புடவைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ரஷிய முன்னாள் அதிபர் பிரஷ்னேவும், ராணி எலிசபெத்தும் இந்தியா வந்தபோது அவர்களுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடைகள் இங்குதான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

    திருபுவனம் பட்டுச்சேலையில் இடம்பிடிக்கும் ஒரிஜினல் ஜரிகைகளும் அதற்கு கூடுதல் பெருமைத் தேடி தருகிறது. ஜரிகை எடையில் 40 சதவீதம் வரை வெள்ளியும், 0.50 சதவீதம் தங்கமும் உள்ளது. பட்டுப்புடவை ஒன்றின் எடை 400 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும். இதில் 475 கிராம் பட்டும், மீதமுள்ளது ஜரிகையின் எடையாகவும் அமைந்திருக்கும்.

    சாயமேற்றப்பட்ட பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவை சங்கத்தின் தனி கண்காணிப்பாளர்களின் கீழ் புடவையாக நெசவு செய்யப்படுகிறது. மக்கள் மத்தியில் சேலைகளின் எடையை பொறுத்தே அதன் வலு இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் நெசவு செய்ய உபயோகப்படுத்தப்படும் பட்டுநூலின் வலு மற்றும் அடர்த்தியின் அடிப்படையிலேயே அதன் ஆயுள் நீடிக்கிறது. திருபுவனம் பட்டு ரக சேலைகள் உடுத்திக்கொள்வதற்கு அழகாகவும், உறுத்தாமலும் இருக்கும். சேலைகளுக்கு வெளிப்படையான முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, தரம், ரசனைக்கேற்ற வண்ணம் மற்றும் புதிய வடிவமைப்புகளில் புடவைகளை உருவாக்குவதற்கு சங்கத்தில் 3 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவும் உள்ளது.


    இந்த கூட்டுறவு நிறுவனம் மூலம் 1992-ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வனசிங்காரம் என்ற பட்டுப்புடவை சிறந்த புடவை வடிவமைப்பிற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க இணை இயக்குனர் மகாலிங்கம், ‘‘2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திருபுவனம் பட்டுச்சேலை என்ற சொல்லை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. பட்டுக்கு தனி மரியாதை கிடைப்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் முன்னேற்றம் அடையும். பட்டு சேலை உற்பத்தி மூலம் பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள் என 1 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பட்டு உற்பத்தி இணையத்தின் மூலம் பட்டு நூல் கொள்முதல் செய்து அதனை சாயம் போட்டு நெசவாளர்களுக்கு வினியோகிக்கிறோம். அவர்கள் அதை புடவையாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளுக்கு எடை அதிகம். இவற்றின் எடை குறைவு. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறையில் இருந்து வாங்குகிறோம். கலை நயத்துடன் தயார் செய்வதால் பெண்களுக்கு இதை உடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதனால் தான் திருபுவனம் பட்டுச்சேலையை தேடி வருகிறார்கள்.

    பருத்தி என்பது அரசன் என்றால் பட்டு, ராணி போன்றது. இதுவரை சாமுத்ரிகா, ஜாங்களா, வனசிங்காரம், கோகுலவந்தனா என 30-க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பழங்கால மற்றும் நவீன கால ரகங்களை சேர்த்து புதிய ரகங்களை உருவாக்கி வருகிறோம்’’ என்றார்.
    தெலுங்கானா மாநிலத்தில் 3 ரூபாய்க்கு விற்ற புடவையை வாங்க வந்த பெண்களுக்குள் ஏற்பட்ட மோதல் மற்றும் நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். #warangal #sarees #shoppingmall
    நகரி:

    தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு புடவை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

    இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலை முதல் அந்த கடையில் பெண்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே காலை 8 மணிக்கு துணிக்கடை திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் காத்து நின்ற பெண்கள் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.

    பெண்கள் ஒருவருக் கொருவர் அடிதடியிலும் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து அந்த துணிக்கடையை போலீசார் மூடினர். இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளம்பரங்களை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். கடை முன்பு திரண்டிருந்த பெண்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். #warangal #sarees #shoppingmall
    ×