search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புடவை"

    • கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது.
    • பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகிறது.

    கல்யாண சீசன் முழு வீச்சில் தொடங்கி விட்டது. தற்போது ஆரெம்கேவி இயற்கை வண்ண சாயங்களை கொண்டு, கைவினை நெசவாளர்களால், கோர்வை மற்றும் பெட்னி போன்ற பாரம்பரிய தொழில்நுட்பங்களுடன் மறுமலர்ச்சி எனும் பெயரில் பட்டுப்புடவைகளை தயாரித்து வழங்குகின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் வண்ணம் நம்முடைய கட்டிடக்கலை அதிசயங்கள் கோவில் சுவர்கள் இயற்கை மற்றும் அக்கால அரச தோற்றங்கள் போன்றவை இந்த மறுமலர்ச்சி புடவையில் காண முடியும். இத்தகைய அற்புத புடவைகளின் தொகுப்பை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என ஆரெம்கேவி இயக்குனர் சங்கர் குமாரசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

    நம் கலை வடிவங்கள் இயற்கை அழகு போன்றவற்றை இயற்கை வண்ணத்தில் கைவினைகளின் புத்துருவாக்க சிந்தனையுடன் இந்த மறுமலர்ச்சி புடவைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அவைகள் முறையே:-

    கோடாலி கருப்பூர் புடவை

    18-ம் நூற்றாண்டில் தஞ்சை அரச பரம்பைர மட்டுமே பயன்படுத்திய டிசைன்கள், மல்பரி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட பச்சை வண்ணம் ஏற்றப்பட்ட அற்புதமான புடவை இயற்கையின் "மறுமலர்ச்சி" படைப்பு.

    பைத்தானி முந்தானையுடன் டிஷ்யூ மீனாக்காரி புடவை

    18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பரம்பரை பெண்கள் விழாக்காலத்தில் அணிந்த, பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையும், மீனாக்காரி வேலைப்பாடமைந்த டிஷ்யூ புடவை.

    உப்படா கிளி சித்திர புடவை

    மரப்பிசினிலிருந்து எடுக்கப்பட்ட கருஞ்சிவப்பு இயற்கை வண்ணத்தில் பாரம்பரியமிக்க கிளி வடிவங்களோடு உப்படா நெசவு றையில் நெய்யப்பட்டது.

    இயற்கை வண்ண 2000 புட்டா புடவை

    தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலின் வரலாற்று அடையாளங்களிலிருந்து மீட்டுருவாக்கம் செய்து 2000 பூக்கள் மிளிரும் காட்சியை இண்டிகோ இயற்கை வண்ணமேற்றி நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை.

    உடல்பேட்டு பேல்தார் புடவை

    செவ்வல்லி கொடியும் மரப்பிசினும் கலந்த செங்காவி வண்ணத்தில் தூய ஜரிகையும் பச்சை வண்ணமும் கொண்ட கிரிம்சன் கோடுகளோடு அழகில் மிளிரும் அற்புத புடவை.

    பவுன் புட்டா புடவை

    பைத்தானி முறையில் நெய்யப்பட்ட முந்தானையில் மீனாக்காரி வேலைப்பாடமைந்த மெல்லிய கருஞ்சிவப்பு இயற்கை வண்ணம் உடலெங்கும் தூய ஜரிகை புட்டாக்கள் கொண்ட புடவை. 18ம் நூற்றாண்டில் மராத்திய அரச பெண்கள் மட்டுமே பயன்படுத்திய இந்தப் புடவை மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

    கந்தபெருண்டா புடவை

    மைசூர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட கருஞ்சிவப்பு கந்தபெருண்டா புடவை, சிக்கலான தங்க ஜரி வேலைப்பாடுகளுடன் கர்நாடகாவின் மாநில அடையாளத்தை பிரதிபலிக்கிறது மற்றும் இயற்கையாகவே லாக்சாயம் பூசப்பட்டது.

    கமலம் புடவை

    கமலம் பட்டுப் புடவை இயற்கையாகவே சப்பான் மரத்தால் சாயமிடப்பட்டு, தாஜ்மஹாலில் இருந்து உத்வேகம் பெறுகிறது, பீச் மற்றும் கோல்டன் ஜாரி வடிவங்கள் மற்றும் நேர்த்தியான பார்டர் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தலைசிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டது.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், ‘புடவை’ என்று பெயர்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    * நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

    பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

    * கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

    இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

    * எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

    ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

    * பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

    புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

    * புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

    'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    * புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

    உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

    * சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

    நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

    2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

    ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

    • புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன.
    • இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின

    பாரம்பரிய ஆடைகளில் புடவைக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு. இதில் பட்டு, காட்டன், ஷிபான் என பல ரகங்கள் உள்ளன. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போலவே இதன் வரலாறும், சுவாரசியம் மிக்கது

    பண்டைய காலத்தில் உடல் முழுவதும் சுற்ற அணியப்படும் ஓர் ஆடையாகத்தான் புடவை இருந்தது.

    புடவை அணிவதற்குகென்று எந்தவிதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்பு சங்ககால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர்.

    அந்த காலத்தில் பெண்கள் தொப்புள் தெரியும் படிதான் புடவையை அணிந்தார்கள். பிறகு அவ்வாறு அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னரே தற்போது உடுத்தும் முறை தோன்றியது,. அந்த காலத்தில் தைக்கப்படாத ஆடைகள் அணிபவர்கள் சிறந்தவர்கள் எனும் நியதி இருந்தது. அதன் காரணமாகவே விழா, கோவில் திருவிழக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்கள் புடவை அணிய வேண்டும் என்பது கட்டாயமானது.

    முகலாயர்களின் வருகைக்கு பிறகே புடவையில் கற்கள், ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை, உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இடுப்பை மறைத்தபடி நீண்ட ரவிக்கை அணிந்து அதன்மேல் புடவை உடுத்த ஆரம்பித்தார்கள். இந்த முறைக்கு நிவி ஸ்டைல் என்று பெயர்.

    ஆரம்ப காலத்தில் பட்டுப்புடவைகள் பிரபலமாக இருந்தன. பருத்தி அணிந்தால் மரியாதை குறைவாக கருதி புறக்கணிந்தனர்.

    நாம் வீர மங்கைகளாக கருதும் ஜான்சி ராணி, ருத்ரமா தேவி போன்ற பலரும் பாரம்பரிய உடைகளாக புடவையை அணிந்துதான் போரிட்டனர்.

    தென்னிந்தியாவில் புடவைகள் பெண்களின் பிரதான ஆடையாக இருந்தாலும் இந்தி சினிமாக்கள் மூலம் தான் புடவைகளின் வகைகள் பிரபலமாயின.

    ஆரம்பத்தில் புடவை ஒரு நிறத்திலும், ரவிக்கை வேறு நிறத்திலும் அணிந்தனர். காலப்போக்கில் புடவையின் நிறத்திற்கு ஏற்றாற்போல் அணியத்தொடங்கி இப்போது பல டிசைன்களில் அணிந்து வருவதை பார்க்கிறோம்.

    புடவையில் 80 வகையான ரகங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டிராவில் பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, வங்காளத்தில் பல்சுரி பட்டு என பல ரகங்கள் உண்டு.

    • புடவையை சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும்.
    • பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

    புடவை கட்டும்போது 'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

    புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

    பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

    • பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது பட்டு புடவைக்கு தான்.
    • பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

    நம் பாரம்பரிய உடையான புடவையிலே பெண்கள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது இந்த பட்டு புடவைக்கு தான். பெண்கள் நகைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அதிகமாகவே இந்த பட்டுப் புடவைகளுக்கு கொடுப்பார்கள். அதிலும் கல்யாண பட்டு என்றால் அவர்கள் ஆயிசுக்கும் அதை பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அப்படி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பட்டுப் புடவையில் கறை படிந்து விட்டால், அதை சுத்தம் செய்வது பெரும் வேலை.நம் வீட்டிலேயே சுலபமாக அந்த கறைகளை நீக்கிவிடலாம்.

    பட்டுப்புடவையில் இருக்கும் சின்ன சின்ன கறைகளை எப்படி சுலபமாக சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

    ஒரு பவுலில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மையில்டான ஷாம்பு கலந்து பட்டுப் புடவையில் கறைகள் இருக்கும் இடத்தை மட்டும், இந்த பவுலில் இருக்கும் தண்ணீரில் முக்கி எடுத்து லேசாக கசக்கினாலே போதும் கறை நீங்கி விடும். இதனால் ஓரிடத்தில் இருக்கும் சாயம் மற்ற இடத்திற்கு மாறாது அதே நேரத்தில் துணியில் உள்ள கறையும் மாறாமல் இருக்கும்.

    பட்டுப் புடவையை பராமரிப்பதில் உள்ள முக்கியமான பிரச்சனை புடவையில் பட்டு விடும் எண்ணெய் கறை தான். அந்த கறைகளை போக்க கறை இருக்கும் இடத்தில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை கொட்டி, ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து லேசாக தேய்த்துக் கொடுங்கள். எண்ணெய் கறையை மொத்தமும் அந்த பவுடர் எடுத்துக் கொள்ளும். அதன் பிறகு புடவையில் அந்த பவுடரின் கறை தெரியும். அதற்கு குகுளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து பவுடர் கறை இருக்கும் இடத்தில் லேசாக துடைத்து விடுங்கள். காய்ந்த பிறகு புடவையில் எண்ணெய் கறையும் இருக்காது, பவுடர் கறையும் மறைந்து விடும்.

    பட்டுப் புடவையில் விடாப்பிடியான கறைகள் இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். அதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கிளிசரின். பட்டுப்புடவையில் கறை இருக்கும் பகுதியின் அடியில் ஒரு வெள்ளை அட்டையை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கறை இருக்கும் இடத்தில் மட்டும் இந்த கிளிசரனை பட்ஸ் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். கறை இருக்கும் இடத்தில் மட்டும் தான் இந்த கிளிசரினை தடவ வேண்டும். துடைக்கும் போதே கறைகள் வந்து விடும் மிகவும் அழுத்தி துடைக்க கூடாது. கறை மொத்தமும் வந்த பிறகு, குளிர்ந்த தண்ணீரில் காட்டன் துணியை நனைத்து கிளிசரின் வைத்து துடைத்து இடத்தில் துடைத்து விட வேண்டும். இதுவும் கண்டிப்பாக செய்ய வேண்டும். கிளிசரணை மட்டும் வைத்து துடைத்து விட்டு விட்டால் கிளிசரின் கம் போல இருக்கும் அது புடவையில் பிடித்துக் கொண்டு புடவை பார்க்க நன்றாக இருக்காது. இந்த கிளிசரின் வைத்து துடைக்கும் முறையை மட்டும் கவனமாக செய்ய வேண்டும். இது அதிகமாகவும் சேர்த்து விடக் கூடாது அதே நேரத்தில் அதிகமாக சாயம் போக கூட புடவையில் இதை தேய்க்கும் முன்பு ஒரு முறை லேசாக தொட்டு பரிசோதித்து விட்டு அதன் பிறகு செய்து கொள்ளுங்கள்.

    பட்டுப்புடவையில் எதிர்பாராமல் காபி, டீ, வேறு ஏதாவது கறை பட்டால் கவலைப்படவேண்டாம். பொராக்ஸ்பவுடரை தண்ணீரில் கரைத்து பட்டுப்புடவையை கொஞ்சநேரம் ஊறவைத்துவிட வேண்டும். பின்னர் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரில் துணியை அலசி பிழியாமல் புடவையிலுள்ள தண்ணீரை வடியவிட்டு காயவிட்டால் புடவையில் இருந்த கறை காணாமல் போய்விடும்.

    • ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது.
    • சேலையின் விலை ரூ.5 ஆயிரம், ஜாக்கெட் தையல் கூலி ரூ.15,000.

    அழகை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். அதிலும் பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகை விரும்புவார்கள், ரசிப்பார்கள். இது அவர்களின் இயல்பான குணம்.

    அதனால் தான் ஆடை அலங்காரங்களை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களுக்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். விதவிதமான ஆடை வடிவமைப்புகளை டிசைனர்கள் உருவாக்கி கொண்டே வருவார்கள்.

    புதிதாய் கலை நயத்துடன் என்ன வந்தாலும் அதை வாங்கி அணிந்து பயன்படுத்துவதில் பெண்கள் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இதை ஜவுளி கடைகளுக்கு செல்லும்போது எல்லோரும் பார்க்கவும் முடியும், உணரவும் முடியும்.

    எத்தனை சேலைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.கல்லிலே கலை வண்ணம் கண்டான்.... என்று தான் முன்பெல்லாம் சொல்ல கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் இப்போது பெண்களின் சேலை- ஜாக்கெட்டுகளில் தங்கள் கற்பனை களையும், கைவண்ணத்தையும் காட்டி கவருகிறார்கள்.

    இப்போது பெண்களை கவருவதில் பிரபலமாக இருப்பது ஆரி ஒர்க் என்ற கலைநயம் மிக்க தையல்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வட மாநிலங்களில் பிரபலமாக இருந்த இந்த வேலைப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் பரவத் தொடங்கியது.

    இப்போது தமிழகம் முழுவதும் இந்த ஆரி ஒர்க் தையல் தான் பெண்களிடம் பிரபலமாக இருக்கிறது. ஒரு பட்டு புடவை குறைந்த பட்சம் ரூ. 5000- க்கு எடுத்து விடுவார்கள். ஆனால் அதற்கான ஜாக்கெட்டை இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு மூலம் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கிறது. கேட்டால் அடேங்கப்பா என்று ஆச்சரியப்பட தோன்றும்.

    ஆனால் இதுதான் இன்று பெண்களிடையே மிகப்பெரிய மோகத்தை உருவாக்கி இருக்கிறது. மணப்பெண்ணுக்கு பட்டு சேலையின் மதிப்பு சராசரியாக ரூ.25 ஆயிரம் என்றால் அவர்களுக்கு ஜாக்கெட் தைப்பதற்கான கூலி ரூ. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆகிறது. குடும்பச் சூழ்நிலையை கருதி ரூ.2000 முதல் 5000 அல்லது 10 ஆயிரத்திற்குள் முடித்து விடுபவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த வேலைப்பாடு ஜாக்கெட்டில் தங்க நிறத்திலான முத்துக்களை தங்கம் மற்றும் வெள்ளை நிறத்திலான மிகச்சிறிய அளவிலான முத்துக்களை வடிவத்திற்கு ஏற்ப கோர்ப்பது தான். என்ன வடிவத்தை என்ன வேலை பாட்டை விரும்புகிறோமோ அதை அந்த ஜாக்கெட்டில் கொண்டு வர முடியும். விதவிதமான பறவைகள் பூக்கள் செடி கொடிகள் இலைகள் போன்று பல்வேறு விதமான வடிவமைப்பு-களை இந்த ஜாக்கெட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

    இப்போது அதையும் தாண்டி ஜாக்கெட்டில் இதே வேலைப்பாட்டில் பெயர்களையும் பொறித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அதிலும் ஒரு படி மேலே போய் விட்டார்கள். காதலித்து திருமணம் செய்பவர்கள் காதலித்த காலத்தில் சில சுவாரஸ்யமான அனுபவங்களை சந்தித்து இருப்பார்கள். அதைக் கூட கற்பனையில் காட்சியாக்கி தங்கள் பட்டுக்களில் பார்டரில் இந்த ஆரி ஒர்க் மூலம் செதுக்கி விடுகிறார்கள்.

    இந்த தொழிலில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுகிறார்கள். நம்மூர் தையல்காரர்களும் இந்த ஆரி ஒர்க் வேலைப்பாடு செய்வதற்காக வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிழைக்க தெரிந்தவன் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிப்பான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இது கலைஞர்களின் கற்பனை திறனை வெளிப்படுத்தி சம்பாதிக்கும் அற்புதமான கலை வேலைப்பாடு.

    • புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
    • பெண்களுக்கு விதவிதமான புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி, பொங்கல் சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி இந்த பொங்களுக்கு என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    * சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும் ,உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன. பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    • இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
    • எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது.

    உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும், உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

    இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது. இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது. இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    • மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.
    • சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.

    திருமணத்துக்கு எடுக்கப்படும் முகூர்த்தப்பட்டு சேலையை பெண்கள் பல ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்து பாதுகாப்பது வழக்கம். ஆனால் அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்தினால் அதன் ஆயுள் காலத்தை மேலும் கூட்ட முடியும். சிலர் பட்டு சேலையை ஏதாவது விழாவுக்கு கட்டிக்கொண்டு செல்வார்கள். வீட்டிற்கு திரும்பியதும் உடனே மடித்து பெட்டியில் வைத்து விடுவார்கள்.

    வியர்வை ஈரத்துடன் அந்த சேலை மடித்து வைக்கப்படுவதால் அதனை பூச்சிகள் அரித்து பட்டுச்சேலையின் சரிகை கருத்துப்போய் விடுகிறது. இதனால் சேலையின் பளபளப்பு குறைந்து அது கிழிந்து விடும் நிலைக்கு உள்ளாகிறது. அதனை தவிர்க்க சேலையை கழற்றியதும் உடனடியாக மடித்து வைக்காமல் மின்விசிறி காற்றில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதனை அயர்ன் செய்து பீரோவில் வைத்து அத்துடன் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைத்தால் சேலைகளை பூச்சி அரிக்காது.

    மாதம் ஒருமுறை எல்லாப் பட்டு புடவைகளையும் வெளியில் எடுத்து நிழல்பட உலர்த்தி அயர்ன் செய்து வைத்தால் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் அந்த சேலைகள் புதியதுபோலவே இருக்கும். மேலும் அதை பாதுகாக்க துணிப்பைகளை தைத்து அதில் சேலையை மடித்து வைத்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜரிகை கருக்காது. அத்துடன் மஸ்லின் துணியிலும் பட்டுப்புடவையை சுற்றி வைக்கலாம்.

    பட்டுப்புடவைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அவற்றை மரபீரோவில் வைத்து பராமரிக்கலாம். பட்டுச்சேலை மற்றும் பட்டு ஜாக்கெட் அணிந்து வெளியே சென்று திரும்பும்போது ஜாக்கெட் வியர்வையில் நனைந்து இருக்கும். அதனை லேசாக ஷாம்பு போட்டு கசக்கி அலசி காய வைக்க வேண்டும். அதற்கு சோப்புகளை பயன்படுத்தக்கூடாது.ஏனெனில் அதிக காரத்தன்மை கொண்ட சோப்பை பயன்படுத்துவதால், ஜாக்கெட் பொலிவிழந்து கிழிந்து விடும். இந்த ஆலோசனைகள் பட்டுச்சேலை, ஜாக்கெட்டுகளுக்கு மட்டும் அல்ல... பாரம்பரிய பட்டு ரகங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

    • காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும்.
    • தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும்.

    இந்திய பெண்கள் ஆடைகள் என்றாலே நினைவுக்கு வருவது புடவை மட்டும் தான். ஆனால் புடவையும் தவிர்த்து மேலும் இந்திய பெண்களுக்கு பல ஆடைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளையும் தற்காலத்திற்கு ஏற்றார் போல் அவை அடைந்த மாற்றத்தையும் காண்போம்.

    புடவை- இந்திய பாரம்பரிய உடை என்றால் நினைவுக்கு வருவது புடவை. ஆனால் அந்த புடவை வகையில் 80 வகைகள் உள்ளது என்பது தெரியுமா? பெங்காளி, ஓடி, குடகு, மலையாளி, என 80 வகையாக புடவை கட்டும் விதங்கள் உள்ளன. புடவை என்பது ஒரு ரவிக்கை மற்றும் உள்ளாடையை கொண்டது. ரவிக்கை மற்றும் உள்ளாடை மீது புடவையை சுற்றி கட்டுவது பாரம்பரிய முறையாகும். தற்காலங்களில் புடவை தைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு வசதி என்னவென்றால் நீங்கள் அதை கவுன் போலவே மாட்டிக் கொள்ளலாம். தற்காலத்திற்கு ஏற்றார் போல் புடவை பல மாற்றங்களை அடைந்துள்ளது. புடவையில் பிரில் வைப்பது ரவிக்கைகளில் பப்ஸ் வைப்பது, ஒன்-ஷோல்டர், ஆப் - ஷோல்டர் போன்ற பல வகையான மாற்றங்களை அவை அடைந்துள்ளன. இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும்.

    காக்ரா சோலி- காக்ரா சோலியை லெகங்கா ஜோலி என்றும் அழைக்கப்படும். இது ஒரு துப்பட்டா ஒரு ரவிக்கை மற்றும் இடுப்பில் இருந்து முழங்கால் வரை நீண்ட ஆடை உள்ளடக்கியது. இது முகலாயர் காலத்தில் அறிமுகமானது. புடவைக்கு அடுத்து பெண்களால் பெரிதும் விரும்பப்படும் ஆடையாகும். இதன் வடிவமைப்பில் தற்போதைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. துப்பட்டாவிற்கு பதிலாக பௌ வைப்பது, பொத்தான் வைத்த ஷர்ட்களோடு அணிவது, நீண்ட மற்றும் குறுகிய சோலியோடு அணிவது மேலும் இடுப்பில் அணியப்படும் ஆடையின் அளவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. இது எல்லாவிதமான விழாக்களிலும் அணியக்கூடியது.

    லஞ்சா - லெகங்கா சோலியின் இன்னொரு வடிவம் தான் லஞ்சா. வேறுபாடு என்னவென்றால் ரவிக்கையின் அமைப்பும், இடுப்பில் அணியும் ஆடையின் அமைப்பும். இடுப்பில் இருந்து அணியும் ஆடையின் நீளம் காக்ரா சோலியை விட அதிகமாக இருக்கும். அதே போல் ரவிக்கை நீளம் இடுப்பை தாண்டி நீளும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு ஆடை வகையாகும். திருமணங்கள் விழா காலங்கள் போன்றவற்றில் முகலாய அரச வம்சத்தில் இன்றளவும் அணியப்படும் பாரம்பரிய உடையாகும். தற்காலத்திற்கு ஏற்றார் போல் லஞ்சாவில் ரவிக்கைக்கு பதிலாக ஜாக்கெட்டும் இடுப்பில் இருந்து அணியப்படும் ஆடையில் நிறைய பிரில்கள் வைத்து நவீனமாக்கப்பட்டுள்ளது. இதை பெண்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். திருமணங்களில் மணப்பெண் ஆடையாகவும் இது உள்ளது.

    தோத்தி குர்தா- தோத்தி என்பது இந்திய ஆண்களின் பாரம்பரிய உடையாகும். ஒரு நீளமான துணி இடுப்பில் சுற்றிக் கொள்வது தோத்தி எனப்படும். பெரும்பாலும் இந்திய ஆண்கள் பகலிலும் இரவிலும் இதை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது பெண்களும் நிறைய பயன்படுத்துகிறார்கள். பருத்தி மற்றும் மஸ்லின் துணிகளை கொண்டு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெண்கள் சில்க் மற்றும் சாட்டின் துணிகளை கொண்டு தோத்தி குருதா தைத்து கொள்கிறார்கள். இது ரெடிமேடாகவும் கிடைக்கும். அப்படியே வாங்கி அணிந்து கொள்ளும் வகையிலும் விற்கப்படுகிறது. தற்காலத்துக்கு ஏற்றார் போல் இது மாற்றம் அடைந்திருக்கிறது. புடவை கட்டுவது போல இதை வடிவமைத்திருக்கின்றார்கள். இடுப்பில் பெல்ட்டும் அணிந்து கொள்ளலாம்.

    சல்வார் சூட்- புடவை அல்லது காக்ரா ஜோலிக்கு அடுத்ததாக விரும்பப்படும் இந்திய பாரம்பரிய உடைகளில் ஒன்று சல்வார் கமீஸ். இது மிகவும் வசதியான ஒரு ஆடை. இது சல்வார் கமீஸ் மற்றும் துப்பட்டாவும் ஒருங்கிணைப்பாகும். சல்வார் என்பது ஒரு தளர்வான பைஜாமா ஆகும். இடுப்பு பகுதியில் மட்டும் அது இறுக்கமாக இருக்கும் மற்றும் கணுக்கால் பகுதியில் இறுக்கமாக இருக்கும். இடையில் காற்றில் பறப்பது போல் தளர்வாக இருக்கும். கம்மீஸ் என்பது மேலாடை ஆகும். இது சல்வாருக்கு மேல் அணியப்படுவது. முழங்கால் அளவு நீண்டிருக்கும். காலத்துக்கு ஏற்றார் போல் இதில் பல மாற்றங்கள் அடைந்து கொண்டே இருக்கின்றன. தற்காலத்தில் மிகவும் குறுகிய அளவு கொண்டு அரை ட்ரவுசர் போலவும் இருக்கின்றன. சில சமயங்களில் மேலே போடப்படும் துப்பட்டா பல வகைகளில் வடிவமைக்கப் படுகின்றன. இடுப்பில் அணியப்படும் சல்வார் பல ப்ளீட்ஸ் கொண்டதாகவும் வடிவமைப்பில் சில மாற்றங்களோடும் வந்து கொண்டிருக்கின்றன.

    அனார்கலி சூட்- அனார்கலி சூட் என்பது நீண்ட குர்தாமற்றும் இறுக்கமான சுடிதார் பேண்டிகளின் தொகுப்பாகும். குர்தா இடுப்பு வரை இறுக்கமாக இருந்து பின்பு முட்டிக்கு கீழ் வரை தளர்வாக இருக்கும். இது ஒரு அரசு பாரம்பரிய உடையாகும். வசதியான உடையும் ஆகும். தற்போது அனார்கலி சூட்சில் பல நவீனமான அலங்கார வகைகள் வந்துள்ளன. ஜாக்கட் ஸ்டைல், கேப் ஸ்டைல், ஃப்ளோர் லென்த் கவுன் போன்றவை ஆகும். சமீப காலங்களில் இது பெரிதும் விரும்பப் படும் ஆடையாக உள்ளது.

    குர்தா மற்றும் சுடிதார்- இது குர்தி மற்றும் சுடிதார் ஒருங்கிணைக்கப்பட்டதாகும். சுடிதார் கால்களின் அளவைவிட மிக நீண்டு இருக்கும். இதனால் கணுக்கால் பகுதியில் சுருட்டி வைப்பார்கள். இது வளையல் போல் தோற்றம் அளிப்பதால், இதற்கு சுரிதார் என்று பெயர் வந்தது. சூரி என்றால் வளையல் என்று பொருள். இதுவும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் பஞ்சாபி பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் வகையாகும். ஆனால் தற்போது இந்தியாவிலும் பெண்கள் அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் குர்தி தரையை தொடும் அளவு நீண்டதாக மேற்கத்திய நாடுகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. குர்தியின் நீளமும் குறைக்கப்பட்டு கணுக்கால அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல வகைகளில் விருப்பத்திற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    பெண்களின் ஷர்வாணி- ஷர்வாணி என்பது ஆண்களுக்கான உடையாகும். இது முகலாயர் காலத்தில் அணியப்பட்டு வந்த உடையாகும். அரசாங்க மற்றும் உயர்ந்த மனிதர்கள் அணியக்கூடிய ஆடையாகும். ஆனால் தற்போது ஷர்வாணி உடையாகிப்போனது. இது காட்டன், காட்டன் சில்க், ஷிபான், பட்டு போன்ற பல வகை துணி வகைகளால் செய்யப்படுவது. இதன் மேலாடை எம்ராய்டரி மற்றும் கலைநயத்தால் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இது பெண்களுக்கு புது வகையான ஆடை வகையாகும். திருமணம் பண்டிகைகள் மற்றும் பல விழாக்களில் இதை அணிந்து கொள்ளலாம். தற்காலத்தில் ஷர்வாணி மேலாடையில் காலர் வைத்தும் காலர் இல்லாமலும் கட் வைத்தும் பல வடிவங்களில் நவீனமாக வடிவமைக்கப்படுகிறது.

    இண்டோ- வெஸ்டர்ன் சுட்ஸ்- குர்த்தியோடு இணைக்கப்பட்ட தளர்வான டவுசர்களின் தொகுப்பாகும். பல்லாசு சூட் தற்காலத்தில் இது மிகவும் விரும்பப்பட்டு அணியப்படும் ஆடை வகையாகும். இதில் பல வகைகளும் உண்டு. நீண்ட, குறுகிய, ஏ-லைன் போன்ற பல வடிவமைப்புகள் இதில் வருகின்றது. மேற்கத்திய ஆடை வகைகளின் தாக்கம் இதில் இருக்கும். பொதுவாக இது துப்பட்டா இல்லாமல் அணியப்படும். பூட்-பாண்ட், கிராப்டு-பாண்ட், சிகரட்-பாண்ட் போன்றவற்றோடு குர்தி பொருந்தி வரும். பொதுவாக இந்த வகையில் துப்பட்டா அணியப்படுவதில்லை. பல வகையான பாண்டு வகைகளோட இது பொருந்தி வருகிறது.

    இந்திய கவுன்- இந்திய கவுன்கள் பெரும்பாலும் துப்பட்டா சேர்ந்தே வருகின்றது. இது ஒரு மேல் நாட்டு கலாச்சார வகை ஆடையாகும். இதில் பலவகைகள் உண்டு. ஒன்-சோல்டர், பெல்-ஸ்லீவ்டு கவுன்ஸ், சாரி-ஸ்டைல் கவுன் போன்று பல வகைகள் இருக்கின்றன. இதன் மேலாடையில் இந்திய கலாச்சாரப்படி பல அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. எம்பிராய்டிங், மணி வைத்து தைப்பது போன்று பல வகைகளில் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது இது புடவையைப் போன்ற வடிவமைப்பில் கிடைக்கின்றது. பெரும்பாலான பெண்கள் இதை விரும்பி அடைகின்றனர்.

    சறாரா மற்றும் கறாரா சூட்- சறாரா மற்றும் கறாரா சூட் குர்தி, துப்பட்டா மற்றும் சறாரா/ கறாரா இவற்றின் தொகுப்பாகும். குர்தி நீண்டும் இருக்கும் குறைவாகவும் இருக்கும் நடுத்தர அளவிலும் இருக்கும். இது முட்டிவரை இறுக்கமாக இருந்து அதன் பின் தளர்வாக இருக்கும். இவை தங்க நிற இழை மற்றும் பைப்பிங் போன்றவற்றால் அலங்காரப்படுத்தப்படும். இது முகலாய காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். இன்றளவும் லக்னோவில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இதை அணிந்து கொள்கிறார்கள். பாகிஸ்தானில் மணப்பெண்கள் இதை திருமண ஆடையாகவே அணிந்து கொள்கின்றார்கள். தற்காலத்தில் உயர்ந்த இடுப்பு சறாரா மற்றும் கறாரா சூட்டும் கிடைக்கின்றன.

    மேலே சொன்ன வகைளில் உங்களின் விருப்பமான ஆடையைகளை வாங்கி மகிழுங்கள்.

    • காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும்.
    • துணிகளுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    வண்ணங்கள் நம் கண்களுக்கு அழகையும் மனதிற்கு இனிமையையும் அளிக்கக் கூடியவை. வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமை. இந்த காரணத்தினால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டன. நம் தமிழக கோயில்களிலும் அஜந்தா எல்லோரா குகைகளிலும் இன்னும் உலகில் பல்வேறு இடங்களிலும். இன்றும் அழகாய் வண்ணமயமாய் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்களினால் தீட்டப்பட்டவையே. காலத்தை கடந்து நிற்கும் இயற்கை சாயங்களின் அற்புத தன்மையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. துணிகளுக்கும் இவ்வாறே இயற்கை சாயங்களை உபயோகித்து வண்ண உடைகளை அணிந்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கை சாயங்கள் துணிகளில் கொண்டுவரப்பட்டன. செயற்கை சாயங்கள் வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் அவைகள் இயற்கை சாயத்திற்கு மாற்றாக எல்லா இடங்களிலும் குறிப்பாக துணி நெசவுகளில் உபயோகப்படுத்தப்பட ஆரம்பித்தது. ஆனால் இந்த செயற்கை நிறமூட்டிகளினால் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்று சமுதாய அக்கறை கொண்டவர்களும் புதுமை நோக்கம் கொண்டவர்களும் நினைக்கத் தொடங்கினர். அவ்வாறு நினைத்த ஆர்எம்கேவி நிறுவனத்தினர் களின் கருத்தில் உதித்து பத்தாண்டு கால ஆராய்ச்சிகளுக்கு பின்பு டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து பிரத்தியேக உத்திகளையும் கண்டுபிடித்து அந்த இயற்கை சாயங்களை தங்கள் துணிகளில் ஏற்றி அழகான பட்டு சேலைகளை நெய்து உள்ளனர்.

    இதைப் பற்றி கூறிய ஆர்எம்கேவி நிறுவனத்தினர், "ஆர்எம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் கலெக்சன். இயற்கை சாயங்களை உருவாக்கும் பண்டைய கால வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவற்றை பற்றி தெரிந்தவர்களும் மிகக் குறைவான எண்ணிக்கைகளில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே.

    நாங்கள் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டு அறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்சன்ஸ் சேலைகள், மஞ்சுஸ்தா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் ஆம்பர் நிற சாயங்களை கொண்டுள்ளது. அரக்கு மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நீல நிற சாயத்தையும், வெந்தயம், நெல்லிக்கனி, சிவப்பு மண், மாதுளை பழத்தோல்கள், மல்பெரி இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை சாயங்களை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருள்களில் சிலவாகும்.

    துணியை நெய்து சேலை உருவாக்கிய பின் தான் பொதுவாக துணிக்கு சாயம் ஏற்றப்படும். ஆனால் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும். அந்த முறையில் நாங்கள் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்களை ஏற்றி தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்கிறோம். எனவே இனி வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயம் இடப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலையை தங்கள் கலெக்ஷனில் இனி வரும் விழா காலங்களில் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள்

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள் என்ற புதிய லெனோ தொழில்நுட்பம் பற்றி அவர்கள் மேலும் கூறுகையில் "40 சதவீதம் எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இவை. பட்டுத்துணி நெசவில் லெனோ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஆரம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டு நூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் காற்றோட்டமிக்க வடிவமைப்புடன் கைகளால் நெய்யப்பட்ட புதுமையான படைப்பாகும். மிக லேசான எடை கொண்ட இந்த சேலையை தற்கால இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளோம்.

    இந்த லெனோ சேலைகளில் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் பிரத்தியேகமான புதுமை படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப் புடவைகளும் தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தரமான நேர்த்தியான பட்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை எங்கள் தேர்ந்த நெசவாளர்கள் காப்புரிமை பெற்ற லினோ நெசவு தொழில்நுட்பத்தின் மூலம் கைகளால் நெய்ய்கிறார்கள். இதனால் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிகவும் லேசாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இளைஞர்களை கவரும் விதத்தில் உள்ளது. எளிமை மற்றும் உயிர்ப்பு கொண்ட இந்த சேலைகளை எந்த விழாவிற்கும் கொண்டாட்டத்திற்கும் வாங்கி அணியலாம்.

    1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது ஆர்எம்கேவி டிசைன் ஸ்டூடியோ பல தனித்துவமான பட்டு சேலைகளை உருவாக்கியுள்ளது. சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள், குரல் ஓவியம் போன்ற தீம் புடவைகளும், எந்த பக்கமும் திருப்பி அணிந்து கொள்ளக்கூடிய கிராண்ட் ரிவர்சல் புடவைகள், 50,000 நிறங்கள் கொண்ட சேலை, வர்ணஜாலம் ரகங்கள், நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லெனோ லைட் சேலை போன்றவை எங்களின் தனித்துவத்தை பறைசாற்றுபவைகள் ஆகும். இவற்றைக் கடந்து எங்களிடத்தே பேன்சி சேலைகள் எம்ராய்டரி சேலைகள் சல்வார் கம்மீஸ் பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் என்று பலவிதமான ஆடைகளும் விற்பனைக்கு உள்ளன," என்றனர்.

    • செமி பேம்பு புடவைகள் எடை குறைவாக இருக்கும்.
    • ப்யூர் சில்க் புடவைகள் குறைந்த எடை கொண்டது.

    ஒவ்வொரு பண்டிகை காலத்திற்கும் புதுவிதமான துணி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. அதுவும் தீபாவளி சமயம் என்றால் புதுப்புடவைகளின் வரவிற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். சரி என்னென்ன புடவைகள் வந்திருக்கின்றன. என்னுடன் ஷாப்பிங் வரத் தயாரா?

    *சினியா சில்க் புடவைகள் : மிகவும் மென்மையான, குறைந்த எடை கொண்ட இந்தப் புடவைகள் பனாரசி பார்டர்களுடன் வந்திருக்கும் ப்யூர் சில்க் புடவைகள் ஆகும். இந்த புடவைகளில் ஷார்ட் அண்ட் லாங் பார்டர்களுடன் பாரம்பரிய வண்ணங்களில் ப்ரோக்கேட் மற்றும் ஜியாமெட்ரிக் டிசைன்களில் ஏராளமான புதுவரவுகள் வந்திருக்கின்றன. பார்டரும், பல்லுவும் ஒரே நிறத்தில் இருக்க அதற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் உடல் பகுதியானது இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு இருப்பது மிகவும் அழகாக உள்ளது. உடல் பாகம் சிவப்பு நிறத்திலும் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு கிளி பச்சை நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு மஜந்தா நிறத்தில் இருப்பது போலவும்,உடல் பாகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பார்டர் மற்றும் பல்லு பச்சை நிறத்தில் இருப்பது போலவும், உடலுக்கு பீச் கிரீன் நிறம் என்றால் பார்டர் மற்றும் பல்லு கத்தரிப்பூ நிறத்தில் இருப்பது போலவும் கான்ட்ராஸ்ட்டாக வண்ணங்களை கொடுத்து இந்தப் புடவைகளை மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இந்தப் புடவைகள் அனைத்திற்கும் பிளெயின் வண்ணத்தில் பிளவுஸ் இணைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

    இந்த சினியா சில்க் புடவைகளிலேயே காப்பர் மற்றும் சில்வர் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்டிங் புடவைகள் பார்வைக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அணிவதற்கு நேர்த்தியாகவும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்திருப்பது அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கின்றது.இந்த புடவைகளின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மிகவும் சிம்பிளான சரிகை பார்டர்கள் கொடுக்கப்பட்டிருப்பது அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

    *செமி பேம்பு புடவைகள் : எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் பத்திக் டிசைன்களுடன் எளிமையான கடி சரிகை பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வாங்கக் கூடிய விலையில் வந்திருப்பது வரவேற்கும் விதத்தில் இருக்கின்றது. உடல் பகுதி மற்றும் பல்லு ஒரே வண்ணத்திலும் , உடல் பகுதியும் பல்லுவும் காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போன்றும் புடவைகள் வந்துள்ளன.

    *செமி ரா சில்க் புடவைகள் : வேறுபட்ட வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான டிசைன்களில் பார்டர்கள் இல்லாமல் வரும் இந்த செமி ரா சில்க் புடவைகளின் அழகைக் கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஃபிளோரல் டிசைன்கள் உடல் பகுதியிலும் பல்லுவிலும் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டு கண்கவர் வண்ணங்களில் வந்திருக்கும் இந்த புடவைகளை உடுத்திப் பார்க்கும் பொழுதுதான் அதனுடைய அழகு முற்றிலுமாகத் தெரியும்.சரிகை மற்றும் நூலினால் நெய்யப்பட்டிருக்கும் டிசைன்கள்,பார்ப்பவர்களை வாங்கத் தூண்டும் வண்ணங்களில் வந்திருக்கும் இந்தப் புடவைகளை மிகவும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

    *பனாரசி ஜார்ஜெட் புடவைகள்: அனைத்து வகையான விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் விதத்தில் ரிச் ஆன்டிக் பார்டர்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அசத்தலாக வந்திருக்கும் இந்தப் புடவைகள் நம்மிடம் கட்டாயம் இருக்க வேண்டிய புடவைகளில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். ஆரஞ்சு வண்ணத்திற்கு வெளிர் நீலம், க்ரீம் வண்ணத்திற்கு மஜந்தா, மஞ்சள் வண்ணத்திற்கு மஜந்தா,க்ரீம் வண்ணத்திற்கு கருப்பு என ஆன்டிக் பார்டர்களுடன் வரும் இந்தப் புடவைகள் விருந்து உபச்சார நிகழ்ச்சிகள், வரவேற்பு நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள் என அனைத்திற்கும் உடுத்திச்செல்வதற்கு ஏற்றவை.

    *செமி லினன் புடவைகள் : மென்மையாகவும், உடுத்துவதற்கு எளிதாகவும், எடை குறைவாகவும், சிறு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்றவையாகவும் இருக்கும் இந்த புடவைகளில் பாந்தினி, கலம்காரி மற்றும் அஜ்ராக் என பலவிதமான பிரிண்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன.கடி ஜரி பார்டர்,மதுபானி பிரிண்டட் பார்டர், பைப்பிங் பார்டர் மற்றும் எளிமையான ஜரி பார்டர்கள் என இந்தப் புடவைகளை அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.அனைவரும் வாங்கக் கூடிய விலையில் இந்தப் புடவைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும்.

    *பியூர் ஜூட் சில்க் : ஜரி மற்றும் சில்க் த்ரெட்டில் உடலில் சிறு எம்பிராய்டரியும், பார்டரில் அதைவிட சற்று பெரிய அளவில் எம்பிராய்டரி செய்யப்பட்டு எளிமையான பல்லுவுடன் வந்திருக்கும் இந்த ஜூட் சில்க் புடவைகள் உடுத்துவதற்கு எளிதாகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றன.பல்லுவில் டாசில்ஸ் வைத்து வருவது புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. ஜூட் சில்கில் ஜகார்ட் மற்றும் பார்டர்களுடன் வரும் புடவைகள் அருமையாக இருக்கின்றன.

    ×