search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ்: மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம்
    X

    நேச்சுரல்ஸ் கலெக்ஷன்ஸ்: மீண்டும் இயற்கைக்கு திரும்புவோம்

    • காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும்.
    • துணிகளுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    வண்ணங்கள் நம் கண்களுக்கு அழகையும் மனதிற்கு இனிமையையும் அளிக்கக் கூடியவை. வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமை. இந்த காரணத்தினால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வண்ணங்கள் கொண்டு ஓவியங்கள் தீட்டப்பட்டன. நம் தமிழக கோயில்களிலும் அஜந்தா எல்லோரா குகைகளிலும் இன்னும் உலகில் பல்வேறு இடங்களிலும். இன்றும் அழகாய் வண்ணமயமாய் இருக்கும் ஓவியங்கள் எல்லாமே இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட சாயங்களினால் தீட்டப்பட்டவையே. காலத்தை கடந்து நிற்கும் இயற்கை சாயங்களின் அற்புத தன்மையை அவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. துணிகளுக்கும் இவ்வாறே இயற்கை சாயங்களை உபயோகித்து வண்ண உடைகளை அணிந்து வந்தனர் நம் முன்னோர்கள்.

    ஆனால் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் செயற்கை சாயங்கள் துணிகளில் கொண்டுவரப்பட்டன. செயற்கை சாயங்கள் வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்த காரணத்தினால் அவைகள் இயற்கை சாயத்திற்கு மாற்றாக எல்லா இடங்களிலும் குறிப்பாக துணி நெசவுகளில் உபயோகப்படுத்தப்பட ஆரம்பித்தது. ஆனால் இந்த செயற்கை நிறமூட்டிகளினால் நச்சு கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதை இப்போது அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இயற்கை சாயங்களுக்கு நாம் ஏன் மாறக்கூடாது என்று சமுதாய அக்கறை கொண்டவர்களும் புதுமை நோக்கம் கொண்டவர்களும் நினைக்கத் தொடங்கினர். அவ்வாறு நினைத்த ஆர்எம்கேவி நிறுவனத்தினர் களின் கருத்தில் உதித்து பத்தாண்டு கால ஆராய்ச்சிகளுக்கு பின்பு டஜன் கணக்கில் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து பிரத்தியேக உத்திகளையும் கண்டுபிடித்து அந்த இயற்கை சாயங்களை தங்கள் துணிகளில் ஏற்றி அழகான பட்டு சேலைகளை நெய்து உள்ளனர்.

    இதைப் பற்றி கூறிய ஆர்எம்கேவி நிறுவனத்தினர், "ஆர்எம்கேவி நேச்சுரல்ஸ் என்பது கைகளால் நெய்யப்பட்ட 100% சுத்தமான இயற்கை சாயங்களால் ஆன காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் கலெக்சன். இயற்கை சாயங்களை உருவாக்கும் பண்டைய கால வழிமுறைகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவற்றை பற்றி தெரிந்தவர்களும் மிகக் குறைவான எண்ணிக்கைகளில் உள்ள கைவினைஞர்கள் மட்டுமே.

    நாங்கள் இயற்கை சாயங்களை தயாரிப்பதற்கான வழிமுறைகளை கண்டு அறிந்ததோடு எங்கள் முயற்சியிலேயே பிரத்தியேக நிறங்களையும் புதிதாக உருவாக்கியுள்ளோம். நேச்சுரல்ஸ் கலெக்சன்ஸ் சேலைகள், மஞ்சுஸ்தா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட உயரிய சிகப்பு மற்றும் ஆம்பர் நிற சாயங்களை கொண்டுள்ளது. அரக்கு மிகவும் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கவும், இண்டிகோ நீல நிற சாயத்தையும், வெந்தயம், நெல்லிக்கனி, சிவப்பு மண், மாதுளை பழத்தோல்கள், மல்பெரி இலைகள் மற்றும் சாமந்திப்பூ போன்றவை சாயங்களை உருவாக்குவதற்கு பயன்படும் இயற்கை உட்பொருள்களில் சிலவாகும்.

    துணியை நெய்து சேலை உருவாக்கிய பின் தான் பொதுவாக துணிக்கு சாயம் ஏற்றப்படும். ஆனால் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் நூலிலேயே சாயம் ஏற்றிய பின் நெய்யப்படுவதாகும். அந்த முறையில் நாங்கள் பட்டு நூல்கள் தயாரிக்கும் செயல்முறை நிறைவு பெற்றவுடன் அவற்றிற்கு இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்ட சாயங்களை ஏற்றி தேர்ந்த நெசவாளர்களால் தறிகளில் நெய்கிறோம். எனவே இனி வாடிக்கையாளர்கள் இயற்கை முறையில் சாயம் இடப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலையை தங்கள் கலெக்ஷனில் இனி வரும் விழா காலங்களில் வாங்கி சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள்

    ஆர்எம்கேவி லெனோ சேலைகள் என்ற புதிய லெனோ தொழில்நுட்பம் பற்றி அவர்கள் மேலும் கூறுகையில் "40 சதவீதம் எடை குறைக்கப்பட்டு கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் இவை. பட்டுத்துணி நெசவில் லெனோ தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை ஆரம்கேவி பெற்றுள்ளது. மிக நேர்த்தியான பட்டு நூல் மற்றும் தூய்மையான சரிகை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த அசல் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் காற்றோட்டமிக்க வடிவமைப்புடன் கைகளால் நெய்யப்பட்ட புதுமையான படைப்பாகும். மிக லேசான எடை கொண்ட இந்த சேலையை தற்கால இளைஞர்களை மனதில் கொண்டு உருவாக்கியுள்ளோம்.

    இந்த லெனோ சேலைகளில் பளிச்சென்ற வண்ணங்கள் மற்றும் பிரம்மிப்பூட்டும் டிசைன்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் பிரத்தியேகமான புதுமை படைப்புகள் அனைத்தையும் போலவே லினோ பட்டுப் புடவைகளும் தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவி மையத்தில் கைகளால் நெய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. தரமான நேர்த்தியான பட்டு நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை எங்கள் தேர்ந்த நெசவாளர்கள் காப்புரிமை பெற்ற லினோ நெசவு தொழில்நுட்பத்தின் மூலம் கைகளால் நெய்ய்கிறார்கள். இதனால் இந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள் மிகவும் லேசாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இளைஞர்களை கவரும் விதத்தில் உள்ளது. எளிமை மற்றும் உயிர்ப்பு கொண்ட இந்த சேலைகளை எந்த விழாவிற்கும் கொண்டாட்டத்திற்கும் வாங்கி அணியலாம்.

    1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எம்கேவி நிறுவனம் கைகளால் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்றது. இதன் கலையம்சம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்காக பல தேசிய விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்கது ஆர்எம்கேவி டிசைன் ஸ்டூடியோ பல தனித்துவமான பட்டு சேலைகளை உருவாக்கியுள்ளது. சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, ஐஸ்வர்ய பூக்கள், குரல் ஓவியம் போன்ற தீம் புடவைகளும், எந்த பக்கமும் திருப்பி அணிந்து கொள்ளக்கூடிய கிராண்ட் ரிவர்சல் புடவைகள், 50,000 நிறங்கள் கொண்ட சேலை, வர்ணஜாலம் ரகங்கள், நேச்சுரல் சில்க் ரகங்கள் மற்றும் லெனோ லைட் சேலை போன்றவை எங்களின் தனித்துவத்தை பறைசாற்றுபவைகள் ஆகும். இவற்றைக் கடந்து எங்களிடத்தே பேன்சி சேலைகள் எம்ராய்டரி சேலைகள் சல்வார் கம்மீஸ் பெண்கள் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ரகங்கள் என்று பலவிதமான ஆடைகளும் விற்பனைக்கு உள்ளன," என்றனர்.

    Next Story
    ×