search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sanitation workers"

    • முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம்.
    • அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.

    சென்னை:

    சென்னை, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.

    முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.

    இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!

    அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.

    வெல்லட்டும் மானுடம்!


    இவ்வாறு முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று சென்னைக்கு 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக, தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் போதாக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். புயல்களின் மிரட்டலும், பருவமழையின் ஆக்ரோஷமும் சென்னை மாநகரை புரட்டியெடுக்க தவறுவதில்லை.

    அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்களை மிகவும் கலங்கவைத்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 மற்றும் டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் பெருமழை கொட்டியது. அந்த 2 நாட்களில் 24 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதாவது, தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் 47 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மூழ்கின.

    அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்தாலே, சென்னைவாசிகளின் பலருடைய நினைவுக்கு வருவது, 2015-ம் ஆண்டு டிசம்பர் மாத நிகழ்வுதான். அதன் தாக்கத்தில் இருந்து இதுவரை சென்னைவாசிகள் வெளியே வர முடியாமல் இருக்கின்றனர். அந்த அளவுக்கு 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்கள் மனதில் பதிந்துவிட்டது.


    அந்த ஆண்டு மட்டுமா... இப்போதும் விடுவதாக இல்லை என்ற ரீதியில் வங்க கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மியான்மர் நாட்டினரால் `மிச்சாங்' என பெயரிடப்பட்ட அந்த புயல் சென்னை மக்களை தண்ணீரால் தத்தளிக்க வைத்துவிட்டு ஆந்திர மாநிலம் நெல்லூரை நோக்கி கடந்துவிட்டது.

    அவ்வாறு கடக்கும் வேளையில் `மிச்சாங்' புயல் சென்னை மாநகர் மீது மழைநீரை வாரியிறைத்ததன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்திவிட்டது.

    மிச்சாங் புயல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

    இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.


    `மிச்சாங்' புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகு நேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.

    சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. தெருக்கள் தோறும் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், கடல் சீற்றம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிச்சாங் புயல் பந்தாடியது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், மழைநீர் வடிகால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் உள்ள திறப்புகள் வழியாக மழைநீர் பொங்கி வழிந்தபடி சாலைகள் தோறும் ஆற்றில் செல்வது போல் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இதனால், வீடுகளில் பெண்கள் சமையல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சுதாரிப்பாக தண்ணீரை நிரப்பி வைக்காதவர்கள் மோட்டரை போட்டு தண்ணீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் தண்ணீர் கீழே செல்ல முடியாமல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையும் நிலவியது.

    புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்த போதிலும், காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவச பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு நடுவே பணிகளுக்கு சென்றனர். அதிலும் பலர் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    புயல் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், மருந்துகடைகள், பாலகம், ஓட்டல்கள் திறந்து இருந்தன. வீடுகளில் சமைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கியதால் ஓட்டல்களில் இட்லி, தோசை போன்றவை விரைவில் காலியாகிவிட்டன. அதைத் தொடர்ந்து, பொங்கல் மற்றும் உடனடியாக தயார் செய்வதற்கு வாய்ப்பாக உள்ள சப்பாத்தி, பூரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இதே போன்று மதிய நேரத்தில் ஆங்காங்கே பிரியாணி கடைகள், துரித உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்கள் திறந்து இருந்தன. மேலும் டீ கடைகளும் சொற்ப அளவில் திறந்து இருந்தன.

    புயல் காரணமாக யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரித்து இருந்த நிலையிலும், ஏதேதோ காரணங்களுக்காக பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணித்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அதாவது, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள்கள் தத்தளித்தபடி சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது, வெள்ளமானது அலைபோல் எழும்பியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.

    சென்னையின் இதயப்பகுதியான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை எனத் தொடங்கி தியாகராயநகர், மயிலாப்பூர், கோயம்பேடு, தென்சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஆலந்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளான பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் நேற்று தொய்வின்றி மழை பெய்து கொண்டிருந்தது.

    இதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சி அளித்தது. இதைப் பார்க்கும்போது சென்னை மாநகரமே தண்ணீரில் மிதப்பது போல் தான் தோன்றியது என்றால் அது மிகை அல்ல. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றதுமே பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரி பகுதி தான் நேற்றைய மழையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லும் அளவிற்கு அங்கு மழையின் தாக்கம் பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.

    வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை சேலையூர் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. அதிலும் இந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டன. இது மட்டுமன்றி, பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் ஏரி உடைந்ததால் வேளச்சேரி நெடுஞ்சாலையில் அந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக அங்குள்ள பல் ஆஸ்பத்திரி அருகே பஸ்கள், டெம்போ வேன் உள்ளிட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், சேலையூரில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், நாராயணபுரம் பகுதி மக்கள் அங்கிருந்து வேளச்சேரிக்கும், சேலையூருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    அந்த பகுதியில் வீடுகள் தரைத்தளம் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலையும் ஏற்பட்டது. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு செல்வதையும் பார்க்க முடிந்தது. தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. இதேபோன்று, முடிச்சூர், அனகாபுத்தூர், மதனபுரம் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன.

    மொத்தத்தில், சென்னையின் பிரதான சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகளுக்குள் செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதோடு, எங்கு பள்ளம் இருக்கும் என்று தெரியாத அளவிற்கு மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே மரங்களும் விழுந்து கிடந்தன. தேனாம்பேட்டை எஸ்.எம்.பாலாஜி பல் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள மரம் ஒன்று விழுந்ததில், ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றும் கார் ஒன்றும் சேதம் அடைந்தது. இதே போன்று, அண்ணாநகர் பகுதியிலும் மரங்கள் விழுந்து கார் சேதம் அடைந்ததை பார்க்க முடிந்தது.

    இதே போன்று, நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மொத்தத்தில் நேற்று பெய்த மழை காரணமாக சாலை போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து முழு வீச்சில் இயங்கவில்லை என்றே கூற முடியும். மெட்ரோ ரெயில் போக்குவரத்து மட்டும் தடையின்றி இயங்கியது.

    கொளத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் தவிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று அயனாவரத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்தில் மழைநீர் புகுந்ததால் 4 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டு பாதுகாப்பாக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.

    தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் கூட தொடர் மழை காரணமாக முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். இன்று(செவ்வாய்க்கிழமை) மழை சற்று ஓய்ந்த பின்னரே மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதே போன்று, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    • 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். வீடுகளில் சேறும் குப்பைகளை தினதோறும் தூய்மை பணியாளர்கள் சேகரித்து சென்று வருகிறார்கள்.

    மொத்தம் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு வந்தனர். ஒரு வார்டுக்கு 52 தொழிலாளர்கள் என்ற அளவில் அவர்கள் தூய்மைபணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தூய்மைபணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது வார்டுக்கு 20 பணியாளர்கள் என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒரு தெருவுக்கு குப்பைகள் சேகரிக்க செல்லும் தொழிலாளர்களால் அப்பகுதியில் முழுமையாக பணியை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் மதியம் வரை குப்பை சேகரிக்கும் பணி நடந்தும் முழுவதும் முடிக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்களின் வீடுகளில் குப்பைகள் தேங்கி விடுகிறது.இதற்கு முன்பு காலை 10 மணிக்குள் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு முடிந்து வந்தது. இதற்கிடையே குப்பைகள் சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வரமுடியாததால் பெரும்பாலானோர் குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கட்டி தெருக்கள், மற்றும் வீட்டு முன்பு வீசிவிடுகின்றனர். அதையும் அகற்ற நாள்கணக்கில் ஆவதால் திருவொற்றியூர் பகுதி முழுவதுமே குப்பை நகரமாக மாறி வருகிறது. நிரம்பி வழியும் குப்பைகளால் திருவொற்றியூர் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளான விம்கோ நகர் சக்திபுரம், எல்லையம்மன் கோவில், காலடிபேட்டை, மாடர்ன்லைன், மேற்கு மாடவீதி, வடிவுடையம்மன் கோவில் பின்புறம், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

    மேலும் பல இடங்களில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் அவை நிரம்பி வழிந்து வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் குப்பை அதிகம் சேரும் ஞாயிற்றுக் கிழமைகளில் பலருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மறுநாள் குப்பை சேகரிப்பு பணி கடும் சவாலாக மாறி வருகிறது. மேலும் வாகனங்களில் வந்தும் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    திருவொற்றியூர் மண்டலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில் வார்டு ஒன்றில் 52 தூய்மை பணியாளர்கள் இருந்தனர். அப்போது குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வார்டு தூய்மையாக இருந்தது.

    ஆனால் தற்போது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் 24 பேர் மட்டுமே ஒரு வார்டில் வேலை செய்கின்றனர். வார்டில் வேலை செய்யும் ஒரு தூய்மை பணியாளர் 7, 8 தெருக்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதனால் அவர் பகல் 12 மணி வரையும் தூய்மை பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல வார்டுகளில் குப்பையை தரம் பிரிக்க இடம் இல்லை. எனவே அந்தந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் குப்பைகளை கட்டி போட்டு விட்டு பின்னர் மொத்தமாக குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். நீண்ட நேரம் குப்பை தெருக்களில் தேங்கி கிடப்பதால் அவற்றை கால்நடைகள், நாய்கள் சாலைகளில் இழுத்து போட்டு விடுகிறது. குப்பைகள் அதிகம் சேர்ந்தால் அதை மூட்டை கட்டி அருகில் உள்ள பள்ளம் மற்றும் முட் புதர்களில் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் 120 மெட்ரிக் டன் குப்பைகள் சேருகிறது. ஆனால் 60 மெட்ரிக் டன் குப்பையில் தான் அகற்றப்படுகிறது. எனவே இது குறித்து மேலும் 350 தூய்மை பணியாளர்கள் வேண்டுமென்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளோம். உடனடியாக கூடுதல் ஆட்களை ஒதுக்கி திருவொற்றியூர் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநகராட்சி உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது குப்பைகளை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டதால் நாங்கள் அதில் தலையிடுவதில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
    • தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஆலோசனை யின் படி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமிற்கு நகர் நல அலுவலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட் டேவிட் பால், பழனிச்சாமி ஆகியோர் முன்னில வைக்கத்தனர். 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றனர். மருத்துவர் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
    • இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை எண் 152-ஐ வெளியிட்டிருந்தது. அதன்படி இனி ஓய்வு பெறும் தூய்மை பணி யாளர்களுக்கான காலி பணியிடத்தை நிரப்பக் கூடாது. ஒப்பந்த பணி யாளர்கள் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    போராட்டம்

    இந்த அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும், தினக்கூலியாக ரூ.480 முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

    நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தின் போது மாநகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி யாளர்கள், கணக்கர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தற்காலிக முறைப்படி அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெண் தூய்மை பணியாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் மாவட்ட தலைவர் மோகன் கூறுகையில்,

    நெல்லை மாநகராட்சி யில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 740 தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அவர்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியாற்ற வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனை கைவிட வேண்டும். அவ்வாறு ஒப்பந்ததாரர்கள் மூலம் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.325 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே வழக்கம்போல் சுய உதவி குழு மூலமாகவே தூய்மை பணியாளர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரியப்பன், பொருளாளர் செல்லத் துரை, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

    முதுகுளத்தூர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி பேரூராட்சிகள்ஆகியவற்றின் தூய்மை பணியாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 14 பொருட்கள் கொண்ட சமையல் பொருட்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

        ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 18 மாதங்களாக இதற்கு முன்னால் இருந்த நிறுவனமும் வருங்கால வைப்பு நிதி பணம் முறையாக செலுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

    2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எங்களுக்கு சம்பளம் போடாமல் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
    • சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சியில் தூய்மை பணிகள் செய்து வரும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மாங்கனி தலைமையிலான மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் செலுத்தல், ரத்த பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கினர். இந்த முகாமை நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், திருமங்கலம் நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி கவுன் சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், ஜமீலா பவுசியா, சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இன்று தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகர மன்ற தலைவர் ஊதியத்தை உடனடி யாக வழங்குவதாக கூறிய நிலையில் துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நல சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • இதனை கண்டித்து நேற்று, சங்கரன்கோவில் மாதாங்கோவில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்கரன்கோவில் :

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி யில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    தூய்மை பணியாளர்கள்

    இதனை கண்டித்து நேற்று, சங்கரன்கோவில் மாதாங்கோ வில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோ வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த மாணிக்கம் செல்வின், சின்னத்துரை ஆகியோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர்.

    முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கூறியபடி நேற்று மாலை சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    2-வது நாளாக போராட்டம்

    இதனை கண்டித்து 2-வது நாளாக இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தலா ரூ.20 ஆயிரம் வீதம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.
    • இந்த நிகழ்ச்சியின் போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய வருங்கால வைப்புத்தொகை, ஆயுள் காப்பீடு ஆகிய தொகையை கடந்த சில மாதங்களாக வழங்காமல் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டு, முதற்கட்டமாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் வைப்புத்தொகையிலிருந்து பிடித்தம் செய்து, அதனை ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார்.

    • விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • பெண்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என துப்புரவு பணியாளர்கள் அறிவித்தி ருந்தனர். அதன்படி இன்று காலை பெண்கள் உட்பட 63 துப்புரவு பணியாளர்கள் விருதுநகர் நகராட்சி அலு வலகம் முன்பு திரண்டனர்.

    ஒப்பந்த முறை துப்புரவு பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. சி.ஐ.டி. யு. நகர அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயபாண்டி முன்னிலை வகித்தார்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×