search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm stalin"

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
    • மூன்று நாடுகள் பயணத்தை இம்மாதம் துவங்குகிறார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 28-ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாடுகள் பயணமாக ஸ்பெயின் செல்லும் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் பிறகு அமெரிக்காவுக்கும் செல்ல இருக்கிறார். 

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து வெளிநாடு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக தகவல்.

    • முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம்.
    • அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.

    சென்னை:

    சென்னை, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது.

    முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம், தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம்.

    இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்!

    அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன்.

    வெல்லட்டும் மானுடம்!


    இவ்வாறு முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
    • வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு.

    விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பிறகு, இரண்டு சம்பவங்களிலும் இதுவரை பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி, 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    • தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
    • வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், உழவர்களுக்கு பல பயனுள்ள பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கும் வணக்கம்.

    வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு.

    நீர் நிலைகள் சீரமைப்பு மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.


    நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

    ஆனால் அவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இதோடு மட்டுமன்றி சிறு குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது. இதுப் போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால் அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    நடிகர் கார்த்தியின் பதிவிற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இணையப் பக்கத்தில், "அன்பின் கார்த்தி, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்! உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'! " என்று பதிவிட்டுள்ளார்.


    • இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும்.
    • அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.

    இந்தி திணிப்பு முயற்சியை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

    இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை, அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல பிரித்தாளுகின்ற தன்மை கொண்டவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் இது ஏற்புடையதாக இருக்காது.

    வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரி சமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும்.

    வளமான மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரப் பன்முகத்தன்மையை அந்தந்த தனித்துவமான மொழியியல் சுவைகளுடன் ஊக்குவிப்பது என்பது, இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் ஆகும். இது உலக அரங்கில் பலவித பண்பாடுகள் மற்றும் மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு ஒரு வலுவான எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

    ஒரே நாடு என்ற பெயரில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள் பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும்.

    அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கருத்தில் கொண்டு தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதும் அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும் அனைத்து மொழிகளைப் பேசுவோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பினை வழங்கி முன்னேற்றத்திற்கான வழிகளை அனைவருக்கும் திறப்பதும்தான் ஒன்றிய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

    பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், பெருமை வாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 22.76 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
    • மொத்தம் 49 முகாமிகளில் 4,035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    மேட்டூர் அணையிலிருந்து நேற்று (05.08.2022) மாலை 8.00 மணி முதல் 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முனனெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி, கொள்ளிட கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும், இம்மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களையும் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று (5.8.2022) இரவு சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்து வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    அப்போது, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வெள்ள நிலைமை குறித்தும், மழை விபரம் குறித்தும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள், நிலை நிறுத்தப்பட்டுள்ள மீட்புப் படைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினார்.

    மேட்டூர் மற்றும் அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 22.76 லட்சம் செல்லிடப்பேசிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள இந்த 49 முகாம்களில் 1327 குடும்பங்களைச் சேர்ந்த 4035 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 66 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும், திருச்சிராப்பள்ளி, ஈரோடு, நாமக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 118 வீரர்களைக் கொண்ட 3 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள விபரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கந்தன் பட்டறை நிவாரண முகாம், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் வட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி திருமண மண்டபம் நிவாரண முகாம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மகாராஜா மண்டபம், பிச்சாண்டார் கோயில் நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பேசினார்.

    அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார். மேலும், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது, பொதுமக்கள் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியதில்லை
    • கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் உள்ள சேவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது

    இக்கூட்டத்தில், மக்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள துறையான வருவாய்த்துறை, அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்றும், அத்தகைய முக்கியமான இத்துறையின் மூலமாக பல சேவைகளை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கொண்டு சேர்த்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவில் உள்ள சேவைகள், எந்த தாமதமுமின்றி உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி அமைத்து அதை எளிதாக அவர்களுக்கு வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது, மீண்டும், மீண்டும் பொதுமக்கள் தங்கள் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டிய நிலை தேவையில்லை என்ற நிலையை விரைவாக கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    ஆன்லைன் பட்டா பரிமாற்றத்தின் முன்னேற்றம், அப்பணிகள் தாமதமின்றி செயல்படுகிறதா என்பதையும், விண்ணப்பங்களின் நிலையை அவ்வப்பொழுது விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளும் வழிமுறைகளையும் எளிதாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    அதேபோல, ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோர், ஆதரவற்ற விதவை, கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் மற்றும் பல பயன்கள் பெறுவதற்காக 4,816 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்தத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால்,உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆத்தூர்:
    திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம்,
    சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள செல்லியம்பாளையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என அறிவித்த போது, இதற்கு வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெட்ரோல் விலையை திமுக அரசு குறைத்தது. 

    மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்கும் போது, மாநில வரியும் குறையும். திமுக அரசின் திட்டங்களால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் குறைவாக உள்ளது. 

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அறநிலையத்துறையின் மூலம் கோயில்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

    ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளது. உண்மையான ஆன்மிகவாதிகள் திமுகவை ஆதரிக்க வேண்டும். 

    அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு முறை மட்டும்தான் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு சரியாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இயற்கை திமுக ஆட்சிக்கு கொடுத்த வரத்தால், இந்தாண்டும் மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. 

    ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்திற்கும், தொகுதிக்கும் கூட எதையும் செய்யவில்லை. ஊர்ந்து கொண்டிந்த தமிழ்நாட்டை, ஓராண்டில் திமுக அரசு தலை நிமிர வைத்திருக்கிறது. வீழ்ச்சியுற்று இருந்த தமிழ்நாடு, இன்று எழுச்சியுற்றுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×