search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sit-ins"

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர்.
    • கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல இன்று கல்லூரிக்கு வந்தனர். காலை 10 மணியளவில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒன்று கூடினர். மணிப்பூரில் பெண்கள் மீதான கூட்டு பலாத்கார வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கல்லூரி மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இன்று தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகர மன்ற தலைவர் ஊதியத்தை உடனடி யாக வழங்குவதாக கூறிய நிலையில் துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நல சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    ×