search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் நகராட்சியில்  தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி இன்று தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகர மன்ற தலைவர் ஊதியத்தை உடனடி யாக வழங்குவதாக கூறிய நிலையில் துப்புரவு அலுவலர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நல சங்க சட்ட ஆலோசகர் ஜெயராஜ் அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இன்று மாலைக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.

    Next Story
    ×