search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roads"

    • இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர்.
    • வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட குறைந்த அளவே பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதலே சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். சாலைகளில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர். இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டில் அதிக பட்சமாக நேற்று சேலத்தில் 105.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர். மேலும் நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் வியர்வையால் நனைந்த மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கிணறுகள் மற்றும் ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் பாசனத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் வறண்டே காட்சி அளிப்பதால் விவசாய வருமானமும் குறைந்துள்ளது. மேலும் வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    • ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
    • அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

    ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    • கார்த்திகை திருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைபடி, சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் தேரோடும் வீதிகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    மேலும், இரும்பு தகடுகள் அமைத்தும் சரி செய்தனர்.

    இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி, துணைத்தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

    • பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
    • மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு சென்று கமிஷனர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக செய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா மல் தடுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள 4 மண்ட லங்களிலும் பெரும்பாலான தெருக்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைகள் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து கமிஷனர் அவ்வப்போது மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்க ளுக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • பருவமழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் மழைநீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளிக்கிறது.
    • பழுதடைந்துள்ள சாலைகள் நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும்.

    களக்காடு:

    களக்காடு பழைய பஸ் நிலைய பகுதியில் காமராஜர் சிலையில் இருந்து, அண்ணாசிலை வரும் வழியிலும், சேரன்மகாதேவி சாலையில் உள்ள தியேட்டர் அருகிலும், பெட்ரோல் பங்க் அருகிலும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டு-குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்களாகவும் சிதறி கிடக்கிறது.

    தற்போது இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் மழைநீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளிக்கிறது. இதில் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. பல்லாங்குழி போல் காட்சி அளிக்கும் சாலைகளால் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலைகள் நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    • ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆறுமுத்தாம்பாளையம் - சேடபாளையம் ரோடு சுமார் 16 அடி அகல ரோடாக உள்ளது. இந்த நிலையில், ஆறுமுத்தம்பாளையத்தில் இருந்து. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்ற வண்ணம் உள்ளது.

    குறுகலான ரோடாக உள்ளதால் ஒரு வாகனம் மட்டும் செல்ல முடிகிறது. எனவே எதிரே வரும் வாகனம் ஒதுங்கி நின்று வழி விட்ட பின்னர் தான் அடுத்த வாகனம் செல்ல முடிகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் திணறி வருகிறார்கள்.

    எனவே குறுகலான அந்த ரோட்டை விரிவாக்கம் செய்து அகலப்படுத்தி இரண்டு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என ஆறுமுத்தாம்பாளையம் ஊர்ப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி யுள்ளது.

    இந்நிலையில் 15, 16, மற்றும் 18-வது வார்க்குட்பட்ட பி அண் டி காலனி, 5 மற்றும் 13 ஆகிய தெருக்கள், புஷ்பாநகர், கதிர்வேல்நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை பம்பிங் மூலமாக வெளியேற்றவும், சில இடங்களில் வடிகால்களில் இணைக்கவும் ஜே.சி.பி. மூலம் பணிகளை செய்திட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தர விட்டார்.

    மேற்கு பகுதி மண்டல உதவி ஆணையர் சேகர், மாநகர தி.மு.க. செய லாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கண்ணன், ஜான் என்ற சீனிவாசன், வட்ட செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன்பெரு மாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், வேல்முருகன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் சாலைகள் மிகவும் மோசாக உள்ளது.
    • போர்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் மகேந்திரப்பள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட பல்வேறு சாலைகளை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரப்பள்ளி ஊராட்சி பெரிய தெருவை சேர்ந்த வழக்கறிஞர் அம்சேந்திரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் ஒன்றியம் மகே ந்திரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதெரு செல்லும் சாலை, தோப்புமேடு முதல் காளியம்மன் கோவில் வரை உள்ள சாலை, காக்கா முக்கூட்டு சாலை குருமாங்கோட்டகம் சாலை,மகேந்திரப்பள்ளி ஊராட்சி,காட்டூர் ஊராட்சி மக்கள் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுவதுமாக மோசமான நிலையில் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயனாளிகளுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை
    • ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் விஜயகுமார் வரவேற்று பேசினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் லோகுபிரசாந்த், ஸ்ரீ பிரியா, துளசிமணி, ராஜேஸ்வரி, கங்கா, சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- ஜோதிபாசு (இ.கம்யூ):- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பயனாளிகளுக்கு கடந்த 12 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பெண்கள் மற்றும் வயதானவர்கள் பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கே.ஆண்டிப்பாளையத்திலுள்ள அங்கன்வாடி பழுதடைந்து தற்போது அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடியில் உள்ள 15 குழந்தைகள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே புதிதாக அங்கன்வாடி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். டி. ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள குட்டைகளை மேம்பாடு செய்ய வேண்டும். டி.ஆண்டிப்பாளையத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி தர வேண்டும்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட காலனி பகுதியில் அமைந்துள்ள கான்கிரீட் சாலைகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும். அத்திக்கடவு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணாபுரத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.

    பாலகிருஷ்ணன்(தி.மு.க):- தெற்கு அவினாசிபாளையத்தில் உள்ள மின் மயானத்திற்கு முன்புறமாக செல்லும் சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து தர வேண்டும்.

    வக்கீல்.எஸ்.குமார் (ஒன்றிய சேர்மன்):- ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலும் பழுதடைந்துள்ள சாலைகளை மேம்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு பின்னர் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாவிபாளையம், வடமலைபாளையம் மற்றும் தொங்குட்டிபாளையம் பகுதிகளில் பஸ் வசதி கேட்டுள்ளீர்கள்.

    ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் தற்போது ஆட்கள் தேர்வு பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பஸ் வசதி செய்து தருவதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இன்னும் சுமார் ஒரு 6 மாத காலத்திற்குள்ளாக அனைத்து சாலைகளும் மேம்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் ஒன்றிய குழு துணை தலைவர் அபிராமி அசோகன் நன்றி கூறினார்.

    • பொதுமக்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி அலட்சியம் செய்து மவுனம் காத்து வருகிறார்கள்.
    • சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 2-ம் மண்டலத்திற்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் 32-வது வார்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குழாய் பதிப்பு மற்றும் சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் ரோடு போடுவதற்காக பெரிய ஜல்லி கற்களை கோல்டன் நகர் அருண் மெடிக்கல் முதல் சஞ்சய் நகர் பள்ளிவாசல் வரை கொட்டி அதை சரிவர ரோடு ரோலரைக் கொண்டு சமன் செய்யாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக அரைகுைறயாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்தப் சாலையில் விழுந்து விடுவோமோ என்ற பயத்துடனேயே பயணிக்கின்றனர். இது சம்பந்தமாக ெபாதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோரை அணுகி, இத்தனை வேலை நிலுவையில் இருக்கும் போது எதற்காக ஜல்லி கற்களை கொட்டினீர்கள் என்று முறையிட்டுள்ளனர்.

    பொதுமக்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி அலட்சியம் செய்து மவுனம் காத்து வருகிறார்கள். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமாக இருக்கும் இச்சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தவறும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்து சில கட்சிகளின் ஆதரவோடு போராட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆகவே மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோல்டன் நகர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன.
    • தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.இதைத்தொடர்ந்து லாரிகளில் விவசாயிகள் மண் எடுத்துச் செல்கின்றனர். தினசரி ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன. தளி வழியாகத்தான் ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன.

    லாரிகளால் இந்த குழாய்கள் உடைந்து சேதம் ஆகின்றன. மேலும் சாலைகளும் விரிசலாகி பழுதாகின்றன. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ,அணையில் இருந்து இடதுபுறம் மொடக்குப்பட்டி சாலை வழியாக செல்லலாம். வலதுபுறம் ஜல்லிப்பட்டி வழியாகவும் உடுமலைக்கு செல்லலாம். தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7,8 ஆகிய 2 தினங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளார்.
    • கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.

    புதுச்சேரி:

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 7,8 ஆகிய 2 தினங்கள் புதுச்சேரிக்கு வர உள்ளார்.

    ஜனாதிபதி வருகையின் போது முருகப்பாக்கம் பகுதியில் உள்ள கைவினை கிராமம் மற்றும் திருக்காஞ்சி பகுதியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.

    இதற்காக பொதுப்பணித்துறையின் மூலம் சாலை பராமரிப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தவளக்குப்பம் இடையார்பாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருவழிச்சாலைக்காக போடப்பட்ட ரப்பரிலான தடுப்புக்கட்டை சேதமடைந்திருந்ததால் அதனை முற்றிலுமாக அகற்றி சிமெண்டிலான தடுப்புக் கட்டையை அமைக்க பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் பகல் இரவாக செய்து வருகிறார்கள்.

    மேலும் சாலை ஓரங்களை சரி செய்வதும், வண்ணம் அடிப்பதும், தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக பழுதடைந்து இருந்த சாலைகளை செப்பனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த பணி ஓரிரு தினத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×