search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல்காற்று"

    • இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர்.
    • வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட குறைந்த அளவே பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் முதலே சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். சாலைகளில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகள் பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடிய படியும் செல்கின்றனர். இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டில் அதிக பட்சமாக நேற்று சேலத்தில் 105.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இளநீர், நுங்கு, கம்மங்கூழ் தர்பூசணி கடைகளில் குவிந்த பொது மக்கள் அதனை வாங்கி பருகி உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர். மேலும் நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் வியர்வையால் நனைந்த மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கிணறுகள் மற்றும் ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால் பாசனத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினாலும் வறண்டே காட்சி அளிப்பதால் விவசாய வருமானமும் குறைந்துள்ளது. மேலும் வயல்களில் விவசாயிகள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் அக்னி நட்சத்திர காலத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள், தொழிலாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    • பொதுமக்கள் பரிதவிப்பு
    • காலையிலேயே அனல்காற்று வீசுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். காலை நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    பெரியவர்கள் மதியம் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நாகர்கோவில் நகர பகுதி களில் மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு வெயில் சுட்டெ ரித்து வருகிறது. சாலைகளில் கானல் நீராக காட்சியளிக்கிறது.

    வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வழக்கமாக குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கண்ணாமூச்சி காட்டிவிட்டது.

    வழக்கத்தை விட 65 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை யடுத்து இளநீர் மற்றும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இளநீர் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

    சுங்கான்கடை, தக்கலை, நாகர்கோவில், கன்னியா குமரி, சுசீந்திரம் பகுதிகளில் சாலையோரங்களில் இளநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இளநீர் ரூ.40 முதல் ரூ.50 வரை விற் பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நுங்கு விற்பனையும் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது.

    ×