search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் பழுதடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு
    X

    களக்காட்டில் பழுதடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

    • பருவமழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் மழைநீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளிக்கிறது.
    • பழுதடைந்துள்ள சாலைகள் நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும்.

    களக்காடு:

    களக்காடு பழைய பஸ் நிலைய பகுதியில் காமராஜர் சிலையில் இருந்து, அண்ணாசிலை வரும் வழியிலும், சேரன்மகாதேவி சாலையில் உள்ள தியேட்டர் அருகிலும், பெட்ரோல் பங்க் அருகிலும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டு-குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்களாகவும் சிதறி கிடக்கிறது.

    தற்போது இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் மழைநீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளிக்கிறது. இதில் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. பல்லாங்குழி போல் காட்சி அளிக்கும் சாலைகளால் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலைகள் நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    Next Story
    ×