search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Primary Health centre"

    • கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • பேராபத்து ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும்
    • அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு திருப்தி இல்லை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர், பள்ளி கொண்டா, சின்ன பள்ளி குப்பம், உட்பட மலை கிராமமான பிஞ்சமந்தை போன்ற பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த சுகாதார நிலையங்க ளில் கடந்த 2 மாதங்களாக மருத்துவர்கள் பற்றாக்கு றையாக உள்ளது என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதனையடுத்து செவிலியர்களும் மருத்துவ உதவியாளர்களும் அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு திருப்தி இல்லாமலும் ஒரு வேலையில் ஏதாவது பேராபத்து ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும். அப்படி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்று கொள்வது என ஆதங்கமாக பேசி வருகின்றனர்.

    ஒடுகத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 5 மருத்து வர்கள் பணியாற்றக்கூடிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றார்.

    பீஞ்சமந்தை, சின்னப் பள்ளிகுப்பம், பள்ளி கொண்டா உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் அடுக்கம்பா றை, குடியாத்தம் போன்ற மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவுக்கு மருத்துவர்களை பணி அமர்த்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அரசு துணை சுகாதார மையங்களில் 8,713 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கும் செவிலியர்கள் பணியிடங்கள் உள்ளது.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்களை தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 2,250 பேரை தேர்ந்தெடுக்க தற்காலிக அடிப்படையில் ரூ.19,500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, பொது தகவல், தகுதி நிபந்தனைகள் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற விவரங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    இந்த ஒப்பந்த செவிலியர்கள் 2016, 2017 மற்றும் 2020-ம்ஆண்டு கால கட்டங்களில் பணிக்கு வந்தவர்கள்.

    அவர்களுடைய பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14,000 ரூபாயில் இருந்து மூலம் 18,000 ரூபாயாக உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

    இந்நிலையில் செவிலியர்களுக்கு தற்போது 499 நிரந்தர செவிலியர்கள் காலியிடங்கள் உள்ளது. அந்த 499 செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்களையே நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்போது எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
    • செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்்ளது. இங்கு கிள்ளை பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். கிள்ளை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இருளர் மக்கள் வந்தாலே, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கும் டாக்டர்கள், நர்சுகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில் அமர்ந்து இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருளம் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மற்ற சமுதாய மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை போல, தங்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும். கிராம மக்களிடையே பாரபட்சம் காட்டும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர். இருளர் இன மக்களின் திடீர் போராட்டத்தால் கிள்ளை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • பட்டா வழங்குவதிலும் காலதாமம் ஏற்படுவதாக புகார்

    செய்யாறு:

    செய்யாறு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

    தாசில்தார் முரளி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    விவசாயத்திற்கு காலை சிப்ட்டில் 6 மணிக்கு மின்சார வழங்க வேண்டும். ஏனாதவாடி சுற்றி சுமார் 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் பெருங்கட்டூர் அல்லது தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்குத்தான் செல்ல வேண்டும்.

    பஸ் வசதி இல்லாத காரணத்தால், 2 பஸ்கள் மாறுதலாகி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கிராம மக்களின் சுகாதார வசதிக்காக ஏனாதவாடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். செய்யாறில் ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்கம் மைய கட்டிடம் கட்ட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழை கேட்டு சப்- கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்தால், ஒரு வருடம் ஆனாலும் கிடைப்ப தில்லை. விரைவாக சான்றிதழ் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

    அதேபோல் பட்டா வழங்குவதிலும் காலதாமம் ஏற்படுவதை தடுத்து உடனடியாக பட்டா கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
    • மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.

    இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர். பின்னர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
    • 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.

    மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.

    • மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்
    • தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்

    திருவண்ணாமலை:

    108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆண் குழந்தை பிறந்தது. திருவண்ணமலை தாலுகா நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் மனைவி தீபா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் 108 ஆம்புலன்சில்அழைத்துச்சென்றனர்.

    நூக்கம்பாடியில் இருந்து மங்கலம் வழியே சென்று கொண் டிருந்தபோது தீபாவிற்கு பிரசவவலி அதிகரிக்கவே உடனடியாக மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த டிரைவர் தினகரனுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் மருத்துவ உதவியாளர் செல்வி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் பத்திரமாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
    • நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.

    அவர் திருச்செங்கோட்டில் அரசு ஆஸ்பத்திரி சிடி ஸ்கேன், சீதாராம் பாளையம் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் உட்பட பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    இன்று காலை கொல்லிமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி கொல்லிமலை சென்று, இன்று காலை அங்கு நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது, கொல்லி மலை வட்டம், சோளக்காடு-புதுவளவு நலவாழ்வு மையம் மற்றும் இலக்கியம்பட்டி நலவாழ்வு மையத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அமைச்சர் திடீரென ஆய்வுக்கு வந்த சம்பவம், ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
    • 4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ மருந்துத்துறையின் சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.

    தாயம்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த 2 புதிய கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் காங்கயம் நகரில் கட்டப்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரம் உயர்த்த ரூ.12 கோடி மதிப்பீட்டில் 50 கூடுதல் படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது :- வட்டார மருத்துவமனையாக இருந்த காங்கயம் மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கு தேவையான புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    4 தளங்களுடன் கூடிய ஒவ்வொரு தளமும் 8ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. தமிழ்நாட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 20 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை தந்துள்ளார். இதற்கான கட்டிட பணி நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டிட பணிகள் முடிந்து திறந்து வைக்கப்படும்.தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகள் முடிந்து, விரைவில் திறந்து வைக்கப்படும்.மேலும் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டிட பணிகளும் விரைவில் முடிந்து திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி, துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏர்வாடி, சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நடைபெற்று வரும் மலேரியா, டெங்கு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். கடலோர கிராம பகுதிகளில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கிணறுகளில் வளரும் கொசு புழுக்களை சாப்பிடும் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களும், வீடுகள் மற்றும் பொதுக்கிணறுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களால் விடப்படுகிறது. இந்த பணிகள் நடைபெற்ற சின்ன ஏர்வாடி பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் ஏர்வாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ ஆய்வகங்கள், பிரசவ அறை, பிரசவத்திற்கு பின்கவனிப்பு அறை, உள்நோயாளிகள் வார்டு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருத்துவ பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் தரமான சிகிச்சை கிடைக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அரவிந்தராஜ், இளையராஜா, வினோத்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், விருதுநகர் மண்டல பூச்சியியல் அலுவலர் கல்விக்கரசன், இளநிலை பூச்சியியல் வவ்லுநர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், பகுதி சுகாதார செவிலியர் கலா, சுகாதார ஆய்வாளர்கள் செல்ல துரை, சுப்பிரமணியன், கோவிந்தகுமார், இஜாஜ் அகமது, ஹரி கிருஷ்ணா, மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் வளர்மதி, முனியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×