என் மலர்tooltip icon

    இந்தியா

    செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள்- 2 பேர் உயிர் பிழைத்தனர்
    X

    செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த டாக்டர்கள்- 2 பேர் உயிர் பிழைத்தனர்

    • அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
    • மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.

    இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறினர். பின்னர் தங்களது செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×