அணைக்கட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதமாக டாக்டர்கள் பற்றாக்குறை

பேராபத்து ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும் அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு திருப்தி இல்லை
அணைக்கட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதமாக டாக்டர்கள் பற்றாக்குறை
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர், பள்ளி கொண்டா, சின்ன பள்ளி குப்பம், உட்பட மலை கிராமமான பிஞ்சமந்தை போன்ற பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த சுகாதார நிலையங்க ளில் கடந்த 2 மாதங்களாக மருத்துவர்கள் பற்றாக்கு றையாக உள்ளது என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனையடுத்து செவிலியர்களும் மருத்துவ உதவியாளர்களும் அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு திருப்தி இல்லாமலும் ஒரு வேலையில் ஏதாவது பேராபத்து ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும். அப்படி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்று கொள்வது என ஆதங்கமாக பேசி வருகின்றனர்.

ஒடுகத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 5 மருத்து வர்கள் பணியாற்றக்கூடிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றார்.

பீஞ்சமந்தை, சின்னப் பள்ளிகுப்பம், பள்ளி கொண்டா உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் அடுக்கம்பா றை, குடியாத்தம் போன்ற மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவுக்கு மருத்துவர்களை பணி அமர்த்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com