search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "payment"

    • கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
    • அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

    திருப்பூர்:

    பொங்கலூா் ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

    இது குறித்து பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் ஜோதிபாசு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
    • கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி அசோசியேஷன் சார்பில் தொழில் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது.

    எம்ப்ராய்டரி அசோசியேஷன் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க துணை செயலாளர் குமார் துரைசாமி பேசுகையில், எம்ப்ராய்டரி நிறுவனங்களின் பிரச்னைகளை கவனத்தில் கொள்வோம். விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள்வோம் என்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தொழில்துறை ஆலோசகர் ராஜா ராமசுந்தரம் பேசினார். தொடர்ந்து, எம்ப்ராய்டரி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:-

    ஒவ்வொரு நிதியாண்டிலும் மூலப்பொருட்கள், தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கின்ற போதும் கடந்த 15 ஆண்டுகளாக எம்ப்ராய்டரி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.போதுமான ஆர்டர்கள் இல்லாதது, தொழிலாளர் பற்றாக்குறை, போதுமான எம்ப்ராய்டரி கட்டணங்கள் கிடைக்க பெறாதது போன்ற காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.இனிவரும் காலங்களில் எம்ப்ராய்டரி கட்டணத்தை பீஸ் ரேட் அடிப்படையில் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது.
    • முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது அனைத்துத் தரப்பினராலும் முடியாதது.

    அவினாசி :

    அவிநாசி கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் சுமதி, கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி ஆகியோரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

    திருப்பூா் மின்பகிா்மான வட்டப் பகுதிகளில் உள்ள மின்நுகா்வோருக்கு இந்த மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டடு தொகை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொகையை செலுத்த சென்றபோதுதான் கூடுதலாக முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பது தெரியவருகிறது. அதிலும் மின் கட்டணத்துடன் முன்வைப்புத் தொகையை செலுத்துவது என்பது கூலித் தொழிலாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினராலும் முடியாதது. ஆகவே, இணையத்தில் உள்ள இரு தொகையை செலுத்தும் குறியீட்டை மாற்றி, தனித்தனியாக செலுத்தவும், முன்வைப்புத் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

    இக்கோரிக்கையை பரிசீலித்த மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சுமதி, பொதுமக்களின் சிரமத்தை கணக்கில் கொண்டு, முன்வைப்புத் தொகையை ஜூன் 14 முதல் 30 நாள்களுக்கு தனியாக செலுத்தலாம் எனவும், வழக்கம்போல மின் கட்டணத்தை தனியாக செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
    • ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாதாமாதம் மின்சாரத்தை கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும்.
    • மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரெயில் கட்டண சலுகை திரும்ப வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் 11-வது அமைப்பு தின விழா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார்.

    வட்ட துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். வட்ட செயலாளர் செல்லத்துரை விளக்கி பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சமூக நீதியின் அடிப்டையில் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், மின் கட்டணம் மாதம் என்பதை தவிர்த்து மாதாமாதம் மின்சாரத்தை கணக்கீட்டு வசூல் செய்ய வேண்டும்,

    இறந்துபோன ஓய்வூதியருக்கு ரூபாய் 1,50,000 குடும்பநல நதி வழங்க வேண்டும்,மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரயில் கட்டண சலுகை திரும்ப வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜமோகன், ஜெகஜோதி, நடராஜன், அன்பழகன், கருணாநிதி உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் அண்ணா துரை நன்றி கூறினார்.

    • வாணரப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ரூ.5 லட்சம் லட்சுமியிடம் கொடுத்தார். மீதி 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.

    புதுச்சேரி:

    வாணரப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ரமா(வயது40). இவர் வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி லட்சுமியிடம் மொத்தமாக பணம் வாங்கி அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து பின்னர் அதனை வசூலித்து லட்சுமியிடம் கொடுத்து வந்தார்.

    அதுபோல் கொரோனா காலத்தில் லட்சுமியிடம் ரமா ரூ.5அரை லட்சம் பெற்று அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்தார். ஆனால் பணம் பெற்றவர்கள் கொரோனா காரணமாக திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ரமா தனது நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் லட்சுமியிடம் கொடுத்தார். மீதி 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.

    இது தொடர்பாக லட்சுமிக்கும், ரமாவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் லட்சுமி நேற்று பணம் கேட்க ரமா வீட்டுக்கு 2 ஆண் நபர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ரமாவை லட்சுமியும், அவருடன் வந்த 2 பேரும் தாக்கியதாக தெரிகிறது.

    அதுபோல் லட்சுமியை ரமா மற்றும் அவரது கணவர் சம்பத் எதிர்வீட்டை சேர்ந்த ஆரோக்கியம்மாள் ஆகிய 3 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.
    • மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதற்கட்டமாக அரசுக்கு 1 லட்சம் கடிதங்கள் அனுப்பும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 1 லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கம் தபால் அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சேகுஜலாலுதீன் முன்னிலை யில் நடந்தது.

    அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் கஜேந்திரன், செயலாளர் மங்களசாமி, ஊராட்சி செயலர்கள் வாணி, நாகராஜ், பாலகிருஷ்ணன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுநிலை. சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒய்வு பெற்ற ஊராட்சி செயலருக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குவதுடன், மாத ஊதியத்தை ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி அவர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கவும், ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலகம் நேரம் தாண்டி பணிகளை செய்ய நிர்ப்பந்தித்தல், இரவு நேரங்கள், விடுமுறை நாட்கள் அவசரப் பணி என்று சொல்லி காலநேரம் வழங்காமல் சாத்தியமற்ற பணிகளை உடனே செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிப்பதையும், பணியில் நெருக்கடி நிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாடகை செலுத்தாத 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
    • நேரில் சென்று தகவல் தெரிவித்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வந்தனர்

    அரியலூர்

    அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதை ஏலம் எடுத்தவர்கள் பலர் வாடகை செலுத்தாமல் நிலவை வைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கமிஷனர் சித்ரா சோனியா பலமுறை அவர்களுக்கு கடிதம் அனுப்பியும், நேரில் சென்று தகவல் தெரிவித்தும், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்து வந்தனர். இதையொட்டி ஒரு சிலர் தங்களது வாடகை நிலுவை தொகையை செலுத்தினர். இருப்பினும் 10-க்கும் மேற்பட்டோர் வாடகையை செலுத்தாமல் இருந்தனர்.

    இதையடுத்து, அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். அப்போது கடை உரிமையாளர்கள் சிலர் நகராட்சி சார்பில் ஏலம் விட்ட கடைகளை விட இரு மடங்கு கடைகள் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வாடகை தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏலம் எடுத்து கடை நடத்துபவர்களை தவிர மற்ற கடைகளை முழுவதுமாக அகற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதற்கான பணிகளை உடனே செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் வாடகை செலுத்தாத கடைகள் அனைத்தும் பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்."

    • திருப்பூரில் 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களே உள்ளன.
    • ஆடைக்கான தொகை உரிய காலத்தில் வெளி மாநில வர்த்தகரிடமிருந்து கிடைப்பது அவசியமாகிறது.

    திருப்பூர் :

    உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பலர் இணைந்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில்முனைவோர் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.ஆடைகளை பெற்றுக்கொண்டு தொகை கொடுக்காமல் ஏமாற்றும் வர்த்தகர் விவரங்கள் அடங்கிய கருப்பு பட்டியல் தயாரித்து தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த குழுவினர் பகிர்ந்துவருகின்றனர்.

    இது குறித்து இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் கூறியதாவது:-

    திருப்பூரில் 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. பொருளாதாரத்தின் விளிம்பில் உள்ள இந்நிறுவனங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகை உரிய காலத்தில் வெளி மாநில வர்த்தகரிடமிருந்து கிடைப்பது அவசியமாகிறது.சில வர்த்தகர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடை தயாரித்து பெற்றுக்கொண்டு தொகை வழங்காமல் ஏமாற்றி விடுகின்றனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கான போதிய களம் இல்லை.இதை சாதகமாக பயன்படுத்தி, ஒரே வர்த்தகர் சுலபமாக அடுத்தடுத்து பல ஆடை உற்பத்தியாளர்களை ஏமாற்றி விடுகிறார். இதனால், வங்கி கடன் செலுத்த முடியாமை ஜாப்ஒர்க் கட்டணங்கள் செலுத்துவதில் சிக்கல், புதிய ஆர்டர்களை கையாளமுடியாமை என பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றன.

    சில உற்பத்தியாளர்கள் இனி நிறுவனத்தை இயக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துவரும் இந்த பிரச்சினைக்கு விரைந்து முற்றுப்புள்ளி அவசியமாகிறது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில்(சைமா) உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கம் சாராத உறுப்பினர்கள் இணைந்து புதிய குழுவை உருவாக்கியுள்ளோம். இதுவரை 300 பேர் உறுப்பினராக உள்ளனர்.

    இந்த குழுவில் உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் அளிக்கும் விவரங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் மோசடி வர்த்தகர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.அதனடிப்படையில், மோசடி வர்த்தகர் விவரங்கள் அடங்கிய கருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இதுவரை, வெளிமாநில வர்த்தகர்கள் 60 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    greatup.in என்கிற இணையதளத்தில் இந்த கருப்பு பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பதிவு செய்த குழு உறுப்பினர்கள் இந்த பட்டியலை பெறமுடியும். பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏமாற்று வர்த்தகர் குறித்து எளிதில் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த பட்டியல் கைகொடுக்கிறது.குழு உறுப்பினர் நிறுவனங்கள் இணைந்து நூல் உட்பட ஆடை தயாரிப்பு மூலப்பொருட்களை சீரான விலைக்கு, மொத்தமாக கொள்முதல் செய்வது, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தொடர் கருத்தரங்குகளும் நடத்திவருகிறோம்.குழுவில் இணைய விரும்பும் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள், 88831 33396 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை உடனடியாக செலுத்த வேண்டும்
    • காங்கயம் நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள அறிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
    • நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக்கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு வட்டாரதலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். துணைசெ யலாளர்கள் ராஜரத்தினம் ,சக்திதா சன், செயற்குழு உறுப்பி னர் அய்யாதுரை, துணை த்தலைவர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் எழில்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட பொரு ளாளர் ஜெயம் நன்றி கூறினார்.

    • உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • இனிமேல் காலம் தாழ்த்தக் கூடாது .

    பல்லடம்:

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் (வயது 57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது .கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ந் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நகை மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரும் ஜூன்-21ல் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் கூறியதாவது:- கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கயில் அரங்கேறிய நூதன நகை திருட்டு சம்பந்தமாக கடந்த மாதம் மே மாதம் 20 ந்தேதியன்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகத்தில் பல்லடம் தாசில்தார் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை அடகு வைத்த நகைகளில் எடை குறைவாக உள்ளதாக புகார் அளித்துள்ள 557 வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் மட்டுமின்றி நகைகளை பணம் செலுத்தி திருப்பி எடுத்த பின் நூதன திருட்டு நடைபெற்றதாக புகார் அளித்து இருக்கும் 84 வாடிக்கையாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் . கடந்த மூன்று மாதங்களாக இந்த பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததால் நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு போடப்பட்டுள்ள வட்டி பணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    மேலும் வங்கி தரப்பிற்கு ஒரு மாத காலம் விவசாயிகள் தரப்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. நாளை 20-ந்தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நகைக்கான சரியான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.இனி அடகு வைத்த நகைகளை திருப்பி எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு நகையின் தரத்தை உறுதி படுத்தி கொடுக்க வேண்டும் .இனிமேல் காலம் தாழ்த்தக் கூடாது . ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்காத பட்சத்தில் நாளை 20 ந்தேதி முதல் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் விவசாயிகளும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அளித்த ஒரு மாத கால அவகாசம் முடியும் நிலையில் வங்கித் தரப்பில் முறையான இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து நாளை மறுநாள் 21-ந்தேதி கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், வாடிக்கையாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×