search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garment Manufacturers"

    • நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடை ளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல் மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது.

    இந்நிலையில் நடப்பு (மே) மாதத்திற்கான நூல் விலை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 10ம் நம்பர் மற்றும் 16ம் நம்பர் கோம்டு நூல் விலை மட்டும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. (திருப்பூரில் இந்த வகை நூல்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற நூல் வகைகள் அனைத்தும் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

    நூல் விலையானது ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து வருகிறது.
    • இந்தியா டெக்ஸ் டிரென்ட் கண்கா ட்சி ஜூலை 19-ந் தேதி துவங்கி, 21ந் தேதி வரை நடக்க உள்ளது.

    திருப்பூர் :

    வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்து டன், இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து வருகிறது. அவ்வகையில் ஜப்பான் நாட்டுடன், ஏற்கனவே பொருளாதார உடன்படிக்கை அமலில் உள்ளது.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம், வரியில்லாமல் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை பெருக்கும் வகையில் ஜப்பான் - இந்தியா தொழில்கள் முன்னேற்ற அமைப்பு நடத்தும் கண்காட்சியில், ஏ.இ.பி.சி., பங்கேற்கிறது.

    ஜப்பான் தலைநகராகிய டோக்கியோவில் இந்தியா டெக்ஸ் டிரென்ட் கண்கா ட்சி ஜூலை 19-ந்தேதி துவங்கி, 21ந் தேதி வரை நடக்க உள்ளது. திருப்பூ ருக்கான, பின்ன லாடை ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை, வரியி ல்லாமல் பெற்று பயன்பெ றலாம் என அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜப்பானில் நடக்கும், இந்தியா டெக்ஸ் டிரென்ட் கண்காட்சி மூலமாக, திருப்பூருக்கு புதிய வாய்ப்பு களை பெற முடியும்.அதற்காக, கண்காட்சியில் பங்கேற்க, பனியன் ஏற்று மதி நிறுவனங்கள் முன் வரலாம் என்றனர்.

    • பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
    • 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    ஜவுளித்தொழிலை பொறுத்தவரை செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி மட்டும் இணைக்கப்பட்டிருந்தது. ஜவுளித்துறையினர் கோரிக்கையை ஏற்று பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியும் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.பி.எல்.ஐ., திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.அடுத்த ஆண்டில் 200 கோடி ரூபாய் அளவுக்கு பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

    சிறு, குறு தொழில்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மூலதன முதலீடு 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர். இதனால் பல்வேறு நிபந்தனைகளுடன் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிப்பதாக ஜவுளி துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது :- பருத்தி நூலிழை ஆடை உற்பத்தியாளர்களும் பயன்பெறும் வகையில் உற்பத்தி இணைப்பு ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., - 2.0) திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வரம்பு 100 கோடி ரூபாய் என்பது குறைக்கப்பட்டுள்ளது.உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழில்கள் 10 கோடி ரூபாய முதலீட்டில் துவங்கினாலும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஏற்றுமதியாளர்கள் 20 கோடி, 30 கோடி மற்றும் 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியை துவக்கினாலும் பயன்பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூரில் 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களே உள்ளன.
    • ஆடைக்கான தொகை உரிய காலத்தில் வெளி மாநில வர்த்தகரிடமிருந்து கிடைப்பது அவசியமாகிறது.

    திருப்பூர் :

    உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பலர் இணைந்து ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில்முனைவோர் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.ஆடைகளை பெற்றுக்கொண்டு தொகை கொடுக்காமல் ஏமாற்றும் வர்த்தகர் விவரங்கள் அடங்கிய கருப்பு பட்டியல் தயாரித்து தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த குழுவினர் பகிர்ந்துவருகின்றனர்.

    இது குறித்து இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் கூறியதாவது:-

    திருப்பூரில் 90 சதவீதம் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களே உள்ளன. பொருளாதாரத்தின் விளிம்பில் உள்ள இந்நிறுவனங்களுக்கு தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகை உரிய காலத்தில் வெளி மாநில வர்த்தகரிடமிருந்து கிடைப்பது அவசியமாகிறது.சில வர்த்தகர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடை தயாரித்து பெற்றுக்கொண்டு தொகை வழங்காமல் ஏமாற்றி விடுகின்றனர். திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கான போதிய களம் இல்லை.இதை சாதகமாக பயன்படுத்தி, ஒரே வர்த்தகர் சுலபமாக அடுத்தடுத்து பல ஆடை உற்பத்தியாளர்களை ஏமாற்றி விடுகிறார். இதனால், வங்கி கடன் செலுத்த முடியாமை ஜாப்ஒர்க் கட்டணங்கள் செலுத்துவதில் சிக்கல், புதிய ஆர்டர்களை கையாளமுடியாமை என பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றன.

    சில உற்பத்தியாளர்கள் இனி நிறுவனத்தை இயக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்துவரும் இந்த பிரச்சினைக்கு விரைந்து முற்றுப்புள்ளி அவசியமாகிறது.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தில்(சைமா) உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கம் சாராத உறுப்பினர்கள் இணைந்து புதிய குழுவை உருவாக்கியுள்ளோம். இதுவரை 300 பேர் உறுப்பினராக உள்ளனர்.

    இந்த குழுவில் உறுப்பினராக உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் அளிக்கும் விவரங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் மோசடி வர்த்தகர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.அதனடிப்படையில், மோசடி வர்த்தகர் விவரங்கள் அடங்கிய கருப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இதுவரை, வெளிமாநில வர்த்தகர்கள் 60 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    greatup.in என்கிற இணையதளத்தில் இந்த கருப்பு பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.பதிவு செய்த குழு உறுப்பினர்கள் இந்த பட்டியலை பெறமுடியும். பின்னலாடை உற்பத்தியாளர்கள், ஏமாற்று வர்த்தகர் குறித்து எளிதில் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த பட்டியல் கைகொடுக்கிறது.குழு உறுப்பினர் நிறுவனங்கள் இணைந்து நூல் உட்பட ஆடை தயாரிப்பு மூலப்பொருட்களை சீரான விலைக்கு, மொத்தமாக கொள்முதல் செய்வது, தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக தொடர் கருத்தரங்குகளும் நடத்திவருகிறோம்.குழுவில் இணைய விரும்பும் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள், 88831 33396 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.
    • நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான ஜெர்மனி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ரகங்கள் இறக்குமதியாளராக உள்ளது. அந்நாட்டின் மொத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடைகளின் பங்களிப்பு 3 முதல் 4சதவீதத்துக்கும் குறையாமல் தொடர்கிறது.கடந்த 2019ல் ரூ. 2.92 லட்சம் கோடி மதிப்பிலான இந்திய ஆயத்த ஆடைகள் ஜெர்மனியில் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மதிப்பு கடந்த 2021ல், 3.13 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 5.19 சதவீதமாக உள்ளது.

    ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஜெர்மனிக்கான இந்திய ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.ஜெர்மனி தலைநகர் பெர்லினில் வருகிற நவம்பர் 2, 3-ந் தேதிகளில் வர்த்தகர், ஏற்றுமதியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை ஏ.இ.பி.சி., செய்துள்ளது.ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பிய நாட்டு வர்த்தகர்கள் அதிக அளவில் பங்கேற்று ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வழங்குவது குறித்து ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.இந்த கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.aepcindia.com என்கிற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 0421 2232634, 99441 81001 என்கிற எண்களில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ் அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர்.
    • தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர்.

    திருப்பூர் :

    மோசடி ஆசாமிகள் புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றும் வித்தைகளை தெரிந்து செயல்படுத்தி வருகின்றனர். இதில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை குறிவைத்து புதுவகை மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.

    அதன்படி மோசடியில் ஈடுபடும் மர்மநபர்கள் முதலில் ஆடை உற்பத்தியாளர்களின் வாட்ஸ் அப்புக்கு அவர்களது செல்போன் எண்ணில் இருந்து ஹாய் மெசேஜ் அனுப்புகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜோத்பூர் கிளைக்கு டீ- சர்ட் தேவைப்படுகிறது.உங்கள் நிறுவனத்தால் தயாரித்து தரமுடியுமா? என ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்குவதற்காக வர்த்தகர்கள் விசாரணை செய்வது போல மர்மநபர்கள் கேட்கின்றனர். டீ- சர்ட்படம், தேவைப்படும் அளவு, நிறம், ஜி.எஸ்.எம்., என தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப விவரங்களையும் அனுப்பி தங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கின்றனர்.புது ஆர்டரை கைப்பற்றும் ஆர்வத்தில் ஆடை உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்புகின்றனர்.

    இதையடுத்து ஆடை தயாரிப்பு ஆர்டரை உறுதி செய்வதற்காக நீங்கள் நேரடியாக ஜோத்பூருக்கு வரவேண்டும். சலுகை கட்டணத்தில் நாங்களே விமான டிக்கெட் புக்கிங் செய்துதருகிறோம் என்கின்றனர்.ஆடை தயாரிப்பு ஆர்டர்களை பெறுவதற்காக பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வர்த்தகர்களை நேரடியாக சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். தேடிவரும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற அடிப்படையில் கேட்கும் விவரங்களை அனுப்பிவைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

    அடுத்த சில நிமிடங்களில் கோவையில் இருந்து ஜோத்பூருக்கு ஆடை உற்பத்தியாளரின் பெயருக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டதாக ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிவிடுகின்றனர். பெயர் விவரம், பார்கோடு, விமான விவரம், புறப்படும் இடம், சேருமிடம் என பார்ப்பதற்கு அச்சு அசலாக போலி விமான டிக்கெட் உள்ளது.

    விமான டிக்கெட்டுக்கான கட்டண தொகை ரூ.7ஆயிரத்தை மட்டும் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்திவிடுங்கள் என்று கூறி உற்பத்தியாளர்களை வேகப்படுத்துகின்றனர்.பல ஆயிரம் ரூபாய் மதிப்பு ஆடைகள் தயாரிக்க ஆர்டர் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில் சில ஆடை உற்பத்தியாளர்கள் தொகையை அனுப்பிவிடுகின்றனர். கணக்கில் தொகை வந்துசேர்ந்த மறுகணமே மோசடி ஆசாமிகள் ஆடை உற்பத்தியாளருடனான தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

    ஆடை உற்பத்தியாளருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிந்தாலோ தங்களை பற்றிய விவரங்களை துருவினாலோ தொகை அனுப்ப தாமதித்தாலோ உங்களுக்கு ஆர்டர் பெற விருப்பமில்லை . ஆர்டரை கேன்சல் செய்யவா? என்று கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகின்றனர். அதுவரை அனுப்பிய உரையாடல்கள், விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் உடனேயே அழித்துவிடுகின்றனர்.

    இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:- பின்னலாடை உற்பத்தியாளர்களிடமிருந்து நூதன முறையில் பணம் பறிக்க ஒரு கும்பல் வலை விரித்து வருகிறது. ஆர்டரை எதிர்பார்த்து காத்திருக்கும் குறு, சிறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் தான் இந்த ஆசாமிகளின் இலக்கு.இணையதளங்களில் இருந்து செல்போன் எண், முகவரி விவரங்களை எளிதாக பெற்றுக்கொள்கின்றனர். வாட்ஸ் அப்பில் வர்த்தகர் போலவே உரையாடி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். பெரிய தொகை கேட்டால் சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

    தொகையை இழந்தவர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதனாலேயே போலி விமான டிக்கெட் அனுப்பி கட்டண தொகையாக ரூ.7ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை மட்டும் அனுப்பகோருகின்றனர். தினமும் 10 உற்பத்தியாளரை வீழ்த்தினாலும் இருந்த இடத்திலேயே 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சுருட்டிவிட முடியும்.கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தியாளர்களை வலையில் வீழ்த்த முயன்றுள்ளனர். நான் உட்பட பல ஆடை உற்பத்தியாளர்கள் சுதாரித்துக்கொண்டு தப்பியுள்ளோம். சிலர் வலையில் சிக்கி தொகையை இழந்துள்ளனர்.ஆர்டர் வழங்குவதாக ஆசைகாட்டி மோசடி செய்வோரின் வலையில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.உஷாராக செயல்படவேண்டும். விமான கட்டணம் உட்பட எதற்காகவும் எந்த ஒரு தொகையையும் அனுப்பக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது.
    • அக்டோபர் 12,13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 4.5 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்கள், சிறுவர்களுக்கான டிரவுசர், ஓவரால், ஷார்ட்ஸ், புல்ஓவர், டி-சர்ட், பெண்களுக்கான டிரவுசர், ஜாக்கெட்டுகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.

    டென்மார்க் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் உயர்த்துவதற்காக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தொடர்ந்து முயற்சித்து வருகிறது. வருகிற அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் டென்மார்க் நாட்டில் வர்த்தகர் - ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் இந்திய ஏற்றுமதியாளர் பங்கேற்க ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.டென்மார்க் நாட்டின் இறக்குமதியில் பின்னலாடை ரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்நாட்டில் நடைபெற உள்ள வர்த்தகர் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0421 2232634 என்ற எண்ணில் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×