search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜப்பான் கண்காட்சியில் பங்கேற்க திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு
    X

    கோப்புபடம்.

    ஜப்பான் கண்காட்சியில் பங்கேற்க திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

    • இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து வருகிறது.
    • இந்தியா டெக்ஸ் டிரென்ட் கண்கா ட்சி ஜூலை 19-ந் தேதி துவங்கி, 21ந் தேதி வரை நடக்க உள்ளது.

    திருப்பூர் :

    வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்து டன், இந்தியா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து வருகிறது. அவ்வகையில் ஜப்பான் நாட்டுடன், ஏற்கனவே பொருளாதார உடன்படிக்கை அமலில் உள்ளது.ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம், வரியில்லாமல் நடக்க வாய்ப்பு உள்ளது. ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை பெருக்கும் வகையில் ஜப்பான் - இந்தியா தொழில்கள் முன்னேற்ற அமைப்பு நடத்தும் கண்காட்சியில், ஏ.இ.பி.சி., பங்கேற்கிறது.

    ஜப்பான் தலைநகராகிய டோக்கியோவில் இந்தியா டெக்ஸ் டிரென்ட் கண்கா ட்சி ஜூலை 19-ந்தேதி துவங்கி, 21ந் தேதி வரை நடக்க உள்ளது. திருப்பூ ருக்கான, பின்ன லாடை ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை, வரியி ல்லாமல் பெற்று பயன்பெ றலாம் என அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கை யில், ஜப்பானில் நடக்கும், இந்தியா டெக்ஸ் டிரென்ட் கண்காட்சி மூலமாக, திருப்பூருக்கு புதிய வாய்ப்பு களை பெற முடியும்.அதற்காக, கண்காட்சியில் பங்கேற்க, பனியன் ஏற்று மதி நிறுவனங்கள் முன் வரலாம் என்றனர்.

    Next Story
    ×