search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் விலை"

    ஸ்திரமில்லாத நூல் விலை, பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்துவருகிறது.

    திருப்பூர்:

    நடப்பு சீசனில் பருத்தி பஞ்சு விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை, வரலாறு காணாத வகையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப தமிழக நூற்பாலைகள் கடந்த 18 மாதங்களாக நூல் விலையை தொடர்ந்து உயர்த்திவருகின்றன.

    வழக்கமாக மாதம் 5 முதல் 10 ரூபாய் உயர்த்தும் நூற்பாலைகள்தற்போது தடாலடியாக மாதம் 30 முதல் 40 ரூபாய் வரை நூல் விலையை உயர்த்தி விடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் கிலோவுக்கு 30 ரூபாய், இம்மாதம் கிலோவுக்கு 40 ரூபாய் என இரண்டே மாதங்களில் ஒசைரி நூல் விலை கிலோவுக்கு 70 ரூபாய் உயர்ந்தது.

    அபரிமித நூல் விலையால், திருப்பூர் நிறுவனங்களின் பின்னலாடை உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. குறு, சிறு நிறுவனங்கள்,நூல் கொள்முதலுக்கு போதிய நிலையின்றி தவிக்கின்றன.

    பல நிறுவனங்கள் வெளிமாநில, வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து புதிய ஆர்டர் பெறமுடியாமலும், பெறப்பட்ட ஆர்டர் மீது ஆடை தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இம்மாதம் உயர்த்தப்பட்ட கிலோவுக்கு 40 ரூபாய் நூல் விலையை நூற்பாலைகள் வாபஸ் பெறவேண்டும் என திருப்பூர் பின்னலாடை துறையினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

    பஞ்சு விலை உச்சத்தில் உள்ளதால் நூல் விலை குறைவது சந்தேகமாகவே உள்ளது.மாதம்தோறும் 1-ந் தேதி, தமிழக நூற்பாலைகள், புதிய நூல் விலை நிர்ணயித்து வெளியிடுகின்றன. நூல் விலை மேலும் உயரலாம் என்கிற தகவல்கள் பரவுகின்றன.

    நூற்பாலைகளின் ஜூன் மாதம் நூல் விலை நிலவரம் எப்படியிருக்குமோ என்கிற கவலை பின்னலாடை துறையினரை தொற்றிக் கொண்டுள்ளது. ஸ்திரமில்லாத நூல் விலை, பின்னலாடை உற்பத்தி சங்கிலியில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், வெளிநாட்டு ஆர்டர்கள் கைநழுவி, நிரந்தரமாக போட்டி நாடுகளை நோக்கி சென்றுவிடும்.

    நெருக்கடியான இந்த சூழலை உணர்ந்து தமிழக நூற்பாலைகள், நூல் விலையை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். ஜூன் மாதம் நூல் விலையை குறைக்க வேண்டும் என்பது, பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜூன் மாதம் நூல் விலை நிலவரம் எப்படியிருக்குமோ என்கிற கவலை பின்னலாடை துறையினரை தொற்றிக் கொண்டுள்ளது.

    தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித்துறையினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்ட தே.மு.தி.க சார்பில் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    ×