search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடி உதை"

    • 3 பேர் வந்த பைக்கில் கேட்டதால் ஆத்திரம்
    • 2 பேர் கைது- ஒருவர் தலைமறைவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலை முடிந்து உதயகுமார் உமையப்ப நாய்க்கணூர் அருகே நடந்து சென்றார். ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது உதயகுமார் வாலிபர்களின் பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டார்.

    அதற்கு வாலிபர்கள் நாங்கள் 3 பேர் பைக்கில் இருக்கிறோம் அதனால் ஏற்ற முடியாது என்று கூறினர். அப்போது 3 வாலிபர்களை உதயகுமார் அவதூறாக பேசியதாகவும், அதற்கு அந்த 3 வாலிபர்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதில் உதயகுமார் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றனர்.

    அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மயங்கி கிடந்த உதயகுமாரை மீட்டு வீட்டில் விட்டனர். இதைத் தொடர்ந்து 13-ந் தேதி உதயகுமார் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

    உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதயகுமாரின் சகோதரி உஷா(30) என்பவர் காவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை தாக்கிய உமையப்பா நாய்க்கணூரை சேர்ந்த சிற்றரசு (19), கிருஷ்ணா வரத்தை சேர்ந்த ஞானவேல் (19) ஆகியோரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகேஷ் (20) என்பவரை தேடி வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
    • ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீசார் விசாரணை
    • மாசி மகம் திருவிழா நடந்தது

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அருகே உள்ள ஆத்துரை, கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரை, கிராமத்தில் மாசி மகம் திருவிழா நடந்துள்ளது.

    இதற்காக பாண்டியன், பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து திருவிழா நடத்தியுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த சீனு (57). என்பவர் பாண்டியனிடம், திருவிழா வரவு செலவு கணக்குகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், சீனுவை, தாக்கியுள்ளார். காயமடைந்த சீனு, திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து பாண்டியனை, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
    • கைது செய்து சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சாய்பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முரளி வயது (35) கூலித்தொழிலாளி.

    இவருடைய மனைவி பிரியா. ஆம்பூர் சாய்சக்தி திருமணம் மண்டபம் அருகே உள்ள ஓரு திருமணம் தகவல் மையத்தில் பணிபுரிகிறார்.

    கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் பிரியா ஆம்பூர் குண்டாளம்மன் தெருவில் தனியாக தனது தாயார் சாந்தி (50) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பைபாஸ் சாலையில் மாமியார் சாந்தி நடந்து சென்றார்.

    அவரை முரளி வழி மடக்கி சரமாரியாக அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த சாந்தி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து புகாாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • குடிபோதையில் விபரீதம்
    • 2 பேர் கைது

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பன்னீர்செல்வம் நகர் 3- வது தார்வழி பகுதியை சேர்ந்த குமார் வயது (42) கூலி தொழிலாளி நேற்று மாலை அப்பகுதியில் ஒரு முதியவர் இறந்தார்.

    சாவு ஊர்வலத்தில் ஆடல் பாடலுடன் குடிபோதையில் பலர் ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது வாய் தகராறு ஏற்பட்டு குமாரை அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகள் கனகராஜ் மகன் சுனில் குமார் (வயது 26) அவருடைய தம்பி அணில் குமார் (22) இருவரும் சேர்ந்து தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இவரின் புகாரின் பேரில் அண்ணன் தம்பிகள் 2 பேரை கைது ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    ×