என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foot kick"

    • போலீசார் விசாரணை
    • மாசி மகம் திருவிழா நடந்தது

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அருகே உள்ள ஆத்துரை, கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூரை, கிராமத்தில் மாசி மகம் திருவிழா நடந்துள்ளது.

    இதற்காக பாண்டியன், பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து திருவிழா நடத்தியுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த சீனு (57). என்பவர் பாண்டியனிடம், திருவிழா வரவு செலவு கணக்குகள் குறித்து கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், சீனுவை, தாக்கியுள்ளார். காயமடைந்த சீனு, திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, பின்னர் இது குறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து பாண்டியனை, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன் னியம்மாள் (வயது 57). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை வீடு திரும் பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.33 ஆயிரத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கன்னியம்மாள் கீழ்க்கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • 3 பேர் வந்த பைக்கில் கேட்டதால் ஆத்திரம்
    • 2 பேர் கைது- ஒருவர் தலைமறைவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலை முடிந்து உதயகுமார் உமையப்ப நாய்க்கணூர் அருகே நடந்து சென்றார். ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது உதயகுமார் வாலிபர்களின் பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டார்.

    அதற்கு வாலிபர்கள் நாங்கள் 3 பேர் பைக்கில் இருக்கிறோம் அதனால் ஏற்ற முடியாது என்று கூறினர். அப்போது 3 வாலிபர்களை உதயகுமார் அவதூறாக பேசியதாகவும், அதற்கு அந்த 3 வாலிபர்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.

    இதில் உதயகுமார் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றனர்.

    அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மயங்கி கிடந்த உதயகுமாரை மீட்டு வீட்டில் விட்டனர். இதைத் தொடர்ந்து 13-ந் தேதி உதயகுமார் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.

    உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதயகுமாரின் சகோதரி உஷா(30) என்பவர் காவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை தாக்கிய உமையப்பா நாய்க்கணூரை சேர்ந்த சிற்றரசு (19), கிருஷ்ணா வரத்தை சேர்ந்த ஞானவேல் (19) ஆகியோரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகேஷ் (20) என்பவரை தேடி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலில் எலக்ட்ரீசியனுக்கு அடி-உதை விழுந்தது.
    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன்(வயது 45). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

    அதே கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வருபவர் கண்ணன் (40). இவரது மனைவியை மாதவன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் நேற்று அவரை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மாதவன் கல்லிடைக்குறிச்சி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×