search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு
    X

    மூதாட்டி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே கொவளை கிராமத்தைச் சேர்ந்தவர் கன் னியம்மாள் (வயது 57). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை வீடு திரும் பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவை உடைத்து அதிலிருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் ரூ.33 ஆயிரத்தை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கன்னியம்மாள் கீழ்க்கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×