search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமியாரை அடித்து உதைத்த மருமகன்
    X

    மாமியாரை அடித்து உதைத்த மருமகன்

    • மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்
    • கைது செய்து சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சாய்பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முரளி வயது (35) கூலித்தொழிலாளி.

    இவருடைய மனைவி பிரியா. ஆம்பூர் சாய்சக்தி திருமணம் மண்டபம் அருகே உள்ள ஓரு திருமணம் தகவல் மையத்தில் பணிபுரிகிறார்.

    கணவன் மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் பிரியா ஆம்பூர் குண்டாளம்மன் தெருவில் தனியாக தனது தாயார் சாந்தி (50) என்பவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பைபாஸ் சாலையில் மாமியார் சாந்தி நடந்து சென்றார்.

    அவரை முரளி வழி மடக்கி சரமாரியாக அடித்து உதைத்தார். படுகாயம் அடைந்த சாந்தி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து புகாாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×