search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடுக்கல் வாங்கல்"

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கணவன்-மனைவிக்கு அடி உதை விழுந்தது.
    • ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்்ந்தவர் சக்திவேல். இவரது உறவினர் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அய்யப்பன். இவருக்கு ராஜபாளை யத்தை சேர்ந்த கருப்பையா என்பவரிடம் இருந்து சக்திவேல் ரூ.5லட்சம் கடன் வாங்கி கொடுத்தார்.

    ஆனால் அய்யப்பன் அசல் மற்றும் வட்டியை கொடுக்கவில்லை. இதனால் கருப்பையா, அய்யப்பன் கொடுக்க வேண்டிய பணத்தை திரும்ப கேட்டு சக்தி வேலுக்கு நெருக்கடி கொடு த்தார். இதைத் தொடர்ந்து சக்திவேலுக்கும், அய்யப்ப னுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அய்யப்பன் மற்றும் அவரது உறவினர்கள் அர்ஜூன், மாரிமுத்து, ரஞ்சித் மேலும் சிலர் சக்திவேல் வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அப்போது அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரத்தில் அய்யப்பன் மற்றும் உடன் வந்தவர்கள் சக்திவேலை அடித்து உதைத்தனர். அதை தடுக்க வந்த அவரது மனைவி சாந்தியை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் அவர்களை விலக்கி விட முயன்ற உறவுக்கார பெண் ராமு, கார்த்திக் ஆகியோருக்கும் அடி உதை விழுந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ராஜபா ளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ராமு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பண்ருட்டி அருகே 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்தவர்வெள்ளிகண்ணு (48)இவருக்கும்அதே ஊரை சேர்ந்த மோகனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைஇருந்துவந்தது. சம்பவத்தன்று மோகன், அவரது மகன் தன்ராஜ்,மனைவி காஞ்சனா ஆகியோர் ஒன்றுசேர்ந்து வெள்ளிக்கண்ணு வீட்டிற்கு சென்று வெள்ளிகண்ணுவின் மனைவி மல்லிகாமற்றும்ளி களியம்மாள்ஆகியோரை உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    காயமடைந்த இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகன் அவரது மகன், மனைவி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்திசிறையில் அடைத்தனர்.

    ×